சென்னை:
இனி வரும் கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இன்று இது குறித்துக் கூறினார்.
அவர் பேசியபோது,
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது. மாணவர்கள் கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.
பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளன. அதில் யோகா மற்றும் உடற்பயிற்சிகள் பாடத்தில் சேர்க்கப்பட உள்ளன.
நூலகங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கான நூல்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட நூலகங்களுக்கு ரூ.2.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மாவட்ட நூலகங்களில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
– என்று கூறினார்.