பத்தாம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வுகள் இன்று துவங்குகின்றன.
தமிழகத்தில் பொதுத் தேர்வை போன்று 10ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும் அரையாண்டு தேர்வு பொதுவான வினாத்தாளில் நடத்தப்படுகிறது.
நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, டிச.7ஆம் தேதி அன்று அரையாண்டுத் தேர்வு துவங்கியது. இன்று 10ஆம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு துவங்குகிறது.
மற்ற வகுப்புகளுக்கும் மாவட்ட வாரியாக இன்று முதல் அரையாண்டுத் தேர்வும் இரண்டாம் பருவத் தேர்வும் துவங்க உள்ளன. இந்தத் தேர்வுகள் வரும் 23ஆம் தேதி முடிகின்றன. கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறை முடிந்து ஜன., 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.