spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஅருண் ஜேட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்

அருண் ஜேட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்

- Advertisement -

புதுதில்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று மத்திய நிதி நிலை அறிக்கை 2016-2017 தாக்கல் செய்து பேசினார். அப்போது, நாட்டை விட்டு தப்பிய குற்றவாளிகள் சொத்துக்களை பறிமுதல் செய்யும் வகையில் புது சட்டம் கொண்டு வரப்படும். சிட்பண்டு மோசடிகளை தடுக்க புது சட்டம் இயற்றப்படும் எனக் கூறினார்.

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் மேலும் கூறியதாவது:*

* 1 கோடி குடும்பம் வறுமை நிலையிலிருந்து மீட்கப்படுவார்கள்
*கட்டமைப்பு கிராமப்புற வளர்ச்சி வறுமை ஒழிப்புக்கு முக்கியத்துவம்
*கிராமபுரங்களில் நாள்தோறும் 133 கி.மீ.,தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டது.
*மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. கடந்த ஆண்டு 38,500 கோடி ஒதுக்கீடு.
*பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி.
*2018 மே 1ம் தேதிக்குள் அனைத்த கிராமங்களுக்கும் மின்சாரம்
*கிராமப்புறங்களில் சுத்தமான குடிநீர் வழங்கப்படும்
*கிராமப்புற கட்டமைப்பை மேம்படுத்த 1,17,000 கோடி கடந்த ஆண்டு 87,765 கோடி
*ஊரக வேளாண் வளர்ச்சிக்கு 187,223 கோடி
*நுண்ணீர் பாசனத்திற்கு நபார்டு வங்கிக்கு ரூ.5 ஆயிரம் கோடி
*தீன் தயாள் யோஜனா திட்டத்திற்கு ரூ.4,500 கோடி ஒதுக்கீடு
*பெண்கள் குழந்தைகளுக்கான திட்டங்களுக்குரூ.1,84,000 கோடி
*குஜராத், ஜார்க்கண்டில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை மையங்கள்
*கிராமப்புற வீடு கட்டும் திட்டத்திற்கு கடன் வட்டி குறைப்பு
*2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு
*மருத்துவ சாதனங்கள் விலையை குறைக்க நடவடிக்கை
*வீடு இல்லாதவர்களுக்காக 2019க்குள் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும்
* ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
* நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. இரண்டு இலக்கத்தில் இருந்த பணவீக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

வேளாண் துறை குறித்து அருண் ஜேட்லி கூறியவை:

இந்த நிதியாண்டில் வேளாண் துறை வளர்ச்சி 4.1% இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ராபி பருவத்தில் இந்த ஆண்டு பயிரிடப்பட்ட நிலப்பரப்பின் ஏக்கர் கணக்கு அதிகம்.
2017 – 18 நிதியாண்டில் விவசாயிகள் கடன் இலக்கு ரூ.10 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 10 லட்சம் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டிருக்கிறது.
அடுத்த 5 ஆண்டுகளில் வேளாண் வருவாயை 5 மடங்கு அதிகரிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டிருக்கிறது.
நீர்ப்பாசனத்துக்காக ரூ,40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2019 ஆண்டின் இறுதியில் 50,000 கிராம பஞ்சாயத்துகள் வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும்.
நுண் சொட்டு நீர் பாசனத்துக்கு தொடக்க மூலதனமாக ரூ.5000 கோடி ஒதுக்கப்படுகிறது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து….

* வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஒரு கோடி குடும்பங்களை ஏழ்மையிலிருந்து மீட்க புதிய திட்டம் வகுக்கப்படுகிறது.
* உற்பத்தித் துறையில் இந்தியா தற்போது 6-வது இடத்தில் இருக்கிறது.
முன்னதாக 9-வது இடத்தில் இருந்தது. இந்திய பொருளாதாரம் வியத்தகு சீர்திருத்தங்களைக் கண்டுள்ளது.
* கறுப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு போர் தொடுத்திருக்கிறது.
* பண மதிப்பு நீக்கம் நீண்ட கால பலனைத் தரும். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை சாத்தியமாக்கும்.
* பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.
* பல காலமாக நடந்துவந்த வரி ஏய்ப்பை பண மதிப்பு நீக்கம் தடுத்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையால் ஊழல் குறைந்திருக்கிறது.
நல்ல நோக்கங்கள் தோற்பதில்லை என்பது மகாத்மா காந்தியின் வாக்கு. அதன்படி கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையான பண மதிப்பு நீக்கம் ஒரு போதும் தோல்வியடையாது. பண மதிப்பு நீக்கத்தின் மூலம் ஜிடிபி உயரும், வரி வசூல் அதிகரிக்கும். – என்று அருண் ஜேட்லி தனது பட்ஜெட் தாக்கலின் போது கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe