spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்நெல்லைஊருக்காக கிராம மக்கள் குளத்தில் குடியேறி போராட்டம்

ஊருக்காக கிராம மக்கள் குளத்தில் குடியேறி போராட்டம்

- Advertisement -

பாவூர்சத்திரம் அருகே ஊர் பெயரை இருட்டடிப்பு செய்வதை கண்டித்து சந்தணக்குமார்பட்டி கிராம மக்கள் குளத்தில் குடியேறி சமைத்து போராட்டம் நடத்தினர்
பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானுர் பஞ்சாயத்திற்குட்பட்ட சந்தனக்குமார்பட்டி கிராமத்தின் பெயரை மறைத்து தீர்மானம் நிறைவேற்றிய பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் குளத்தில் குடியேறினர்.
கீழப்பாவூர் ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சி மன்றத்தின் 2வது பிளாக் பகுதி சந்தணக்குமார்பட்டி கிராமம் ஆகும். ஆவுடையானூர் ஊராட்சியின் 4வது பிளாக் பகுதி மாடியனூர் கிராமம் ஆகும்.
சந்தணக்குமார்பட்டி கிராம மக்களின் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, வீட்டுத் தீர்வை ரசீது, குடிநீர் இணைப்பு ரசீது மற்றும் அரசு ஆவணங்களில் சந்தணக்குமார்பட்டி என்ற பெயர் உள்ளது.
தற்போது சந்தணக்குமார்பட்டி கிராமத்தின் பெயரை ஊராட்சி மன்றத்தின் புலப்படத்தில் இல்லாமல் செய்து மாடியனூர் கிராமத்தின் பெயராக மாற்றுவதற்கு ஊராட்சி மன்ற நிர்வாகம் முயற்சி செய்வதாக சந்தணக்குமார்பட்டி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர், கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் மனு அளித்திருந்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஆவுடையானூர் ஊராட்சி மன்றத்தில் சந்தணக்குமார் பட்டி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ,அரசு பொது நூலகம், மேல் நிலை நீர்தேக்க தொட்டி ,நியாவிலைக்கடை ஆகியவற்றை மாடியனூர் பகுதிக்குட்டபட்டது என்று பெயரை வைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாக ஏற்பட்ட தகவலையடுத்து சந்தனக்குமார்பட்டி கிராம பொதுமக்கள் வெள்ளிக்கிழமை காலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு,ரேஷன்கார்டு,வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களையும் ஒப்படைக்கபோவதாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த உள்ளாட்சி மன்ற கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஊரை பிரிக்கும் நோக்கம் எங்களுக்கில்லை தாங்கள் தற்போது மன்றக் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை பத்து நாட்கள் தள்ளி வைக்கபடுகிறது என தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.ஆனால் அதுதான் மன்றத்தின் கடைசி கூட்டம் என அறியாத மக்கள் கலைந்து சென்று விட மதியம் மன்றக் கூட்டம் நடைபெற்றது எந்த தீர்மானம் நிறைவேற்றப்படக்கூடாது என நினைத்து சந்தனக்குமார்பட்டி கிராம மக்களின் போராடினார்களோ அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்த தகவலை தாமதமாக அறிந்த சந்தனக்குமார்பட்டி கிராம பொதுமக்கள் சனிக்கிழமை மாலை 3 மணிக்கே ஊருக்கு அருகேயுள்ள சிறிய குளத்தில் குடும்பத்தோடு குடியேற முடிவெடுத்து வந்தனர் , காவல்துறை பேச்சு வார்த்தை நடத்தியும் பயன் இல்லை ,மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பிளாக் 2 க்குரிய பகுதிகளை பிளாக் 4 க்கு மாற்றிய தீர்மானத்தை ரத்து செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் அதுவரை இப்பகுதியை விட்டு எங்கும் போக மாட்டோம் என அங்கே சமையல் செய்து இருக்க முடிவு செய்தனர் ஆவுடையானூர் ஊராட்சி மன்றத்தைக் கண்டித்தும், அந்த தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த செய்தியை நாம் பதிவேற்றும் வரை போராட்டத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்ப்படவில்லை

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe