புது தில்லி:
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது விரைவில் அவர் நடித்து வெளிவரவுள்ள சச்சின்: எ பில்லியன் டிரீம்ஸ் படத்தை பற்றி விவரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பு குறித்து பெருமிதத்துடன் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஒவ்வொரு இந்தியரும் சச்சின் குறித்து பெருமைப் படுவதாகவும், அவருடைய வாழ்க்கை 125 கோடி மக்களுக்கு உந்துசக்தியாக விளங்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவரது டிவிட்டர் செய்தி:
Had a very good meeting with @sachin_rt. His life journey & accomplishments make every Indian proud & inspire 1.25 billion people. pic.twitter.com/qqUYB3qEez
— Narendra Modi (@narendramodi) May 19, 2017