முத்தமிழ் வித்தவராம்
முத்தத் தமிழ் வித்தகராம்
சத்தமிட்டே வெறி சாதியம் வளர்த்தவராம்
மூத்த மூளைகளை பேதலிக்க விட்டவராம்
ஒத்தை வேளை மட்டும் உண்ணா நோன்பிருந்து
ஒத்தை இனத்தையே ஒழித்தழித்து விட்டவராம்
செத்த வீடாயினும் சேர்மங்கல வீடாயினும்
அத்தனையிலும் தனக்கே அதிபராசனம் வேண்டியவராம்
தனக்கு ஏதும் நடந்தால்தான் தன் மகனே
எனக்குப் பின் முதல்வரென பதவிப் பித்து பிடித்தவராம்
திருட்டுத் தனத்தை திராவிடம் எனச் சொல்லி
பசப்பு வார்த்தைகளால் பண்பு நாட்டைச் சிதைத்தவராம்
இட்ட தமிழ் வடிவை எமக்கு இக்கட்டில் தந்துவிட்டு
கெட்ட தமிழைக் கைக்கொண்ட கெட்டிக்காரக் கெழுதகையே!
அத்தனை இழப்புகளுக்கும் சாட்சியாய் அமைந்தும்
அக்கறை காட்டுவதாய்க் காட்டவே பிறந்த
எங்கள் குவளை மலரே குதூகலக் குவியலே …
தொகுத்தளித்த தமிழனையும் தொல்காப்பியனையும்
வகுத்தளித்த வள்ளுவனையும் வள்ளலார் கூட்டத்தையும்
சகுனித்தனமாய்ச் சாடிநின்று சாதியக்கட்டுக்குள் திணித்த
தகுதிக்கு வாராத நடிப்புத் தமிழனே பகுத்தறிவுப் பகலவனே !
உடன்பிறப்புக் கடிதமென கடனாற்ற அழைத்துவிட்டு
மடல் வரைந்தே மக்களைநல் மடையராக்கி விட்டுவிட்டு
மடத்தில் உண்டியல் நிரம்பியதும் அடிமைகளை மறந்துவிட்ட
அறிவாலய மடத்தின் சந்ததி வளர்த்த சங்கட அதிபதியே !
தமிழ்தமிழென்று தட்டிவிழுந்தும் தட்டாமாலை சுற்றிவந்தும்
தமிழ்நாள் மறந்து ஆங்கிலநாளைப் பிடித்துக் கொண்ட
வந்தேறித் தெலுங்கரே வசதியாய்க் கொண்டாட
வந்துவிட்டதும் பிறந்த நாளின்று… வாழ்த்துகிறோம்!
தொன்னூற்று நான்கெல்லாமொரு வயதாஐய
நீவிர் 120 ஆண்டெனும் முழு வட்ட வாழ்வை வாழ்ந்தெம்
முக வாட்டம் போக்கவேணும்
மு.க. வாட்டம் சந்ததியை வாழ வைக்க
முக மூளை காட்ட வேணும்
முகமே மூளை ஆக வேணும்!
வைர விழாவென வகையாய்ச் சொல்லியொரு சாதியை
வைகிற விழாவென வசதியாய் மாற்றிக் கொண்டுவிட்ட
வைரத்தின் வைரமே தங்கமே பித்தளையே பிளாட்டினமே
வாழ்க நீவிர் வளத்தோடு! வளர்க நீவிர் நலத்தோடு!