மதுரை:
பிரதமர் மோடியை ஓபிஎஸ் எதற்காக சந்தித்தார் என்பது குறித்து எனக்குத் தெரியாது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
மதுரை வந்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசிய போது, விவசாயிகளை சந்திக்க முடியாதமோடி, ஓபிஎஸ்ஸை மட்டும் எப்படி சந்தித்தார்; அதற்கான காரணம் என்ன என்று மு.கஸ்டாலின் கேட்டிருந்தாரே! என்று கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடியை ஓபிஎஸ் ஏன், எதற்காக சந்தித்தார் என்பது குறித்து எனக்குத் தெரியாது. பிரதமர் மோடி ஓபிஎஸ்ஸை சந்திக்க உரிய காரணங்கள் இருந்திருக்கலாம். அந்த வகையில் அவர் ஓபிஎஸ்ஸை சந்தித்திருக்கலாம் என்று கூறினார்.
மேலும், தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது ஏற்படும் பிரச்னை தொடர்பாக இலங்கை அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து பேசி வருகிறது. ரூ.100 கோடி, ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இரட்டை ரயில் மற்றும் மின் மயமாக்கப்பட்ட வழித்தடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, இந்தத் திட்டத்துக்காக ரூ.3,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.