சென்னை:
ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக நிதி மற்றும் ஆட்களைத் திரட்டியதாக சென்னை முத்தையால் பேட்டையைச் சேர்ந்த ஆரூண் என்பவர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஆரூண் என்பவர் சென்னை முத்தையால் பேட்டையில் வசித்து வந்தார். பர்மா பஜாரில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வந்த இவர் ஈராக் நாட்டில் செயல்படும் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு, இந்தியாவில் நிதி மற்றும் ஆட்களை திரட்டியதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜமீல் முகமது என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவருடன் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரும் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.
இதை யடுத்து, இன்று காலை ராஜஸ்தான் மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார், முத்தையால்பேட்டையில் ஹாரூணைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆரூண் ராஜஸ்தான் கொண்டு செல்லப்படுகிறார்.
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சிலர் செயல்பட்டு வருவதாக மத்திய அரசுக்கு தொடர்ந்து தகவல் கிடைத்து வருகிறது. அத்தகைய தகவல்களின் பேரில் உளவு அமைப்பினரும் பல்வேறு மாநில காவல்துறையினரும் இணைந்து செயல்பட்டு, பலரைக் கைது செய்து வருகின்றனர்.
மத்திய அரசு பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டும், தமிழக காவல் துறை நடவடிக்கை எதுவும் எடுக்காமல், அமைதி காத்து வருவது குறித்து பலராலும் கேள்விகள் முன்வைக்கப் படுகின்றன.
சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் க்கு ஆள் மற்றும் நிதி திரட்டியவரை சென்னை முத்தயால்பேட்டையில் துப்புத் துலக்கி கைது செய்தது ராஜஸ்தான் போலீஸ்.
தமிழகத்திருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சார்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு கைது செய்பவர்கள் பெரும்பாலும் பிற மாநில போலீஸார் மற்றும் மத்திய என்.ஐ.எ அமைப்புதான். தமிழகத்தில் உள்ள பயங்கரவாதிகளையும் , பயங்கரவாத அமைப்புக்களையும் தமிழக காவல் துறை வளர விடுகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஜுன் 22 அன்று ராமநாதபுரத்தில் கலவரம் செய்த இஸ்லாமிய இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைக் குறிக்கும் டி.ஷர்ட் அணிந்திருந்தனர். 2014 ஆகஸ்ட் மாதம் ஐ.எஸ்.ஐ.எஸ் டி சர்ட் அணிந்து சூறாவளி கிளம்புகிறது என்று அறிவுப்பு செய்தனர் தொண்டியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் சிலர். இவர்களுக்கு ஆதரவாக எஸ்.டி.பி.ஐ போஸ்டர் ஒட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமிழகத்தில் பெருகி வரும் சர்வதேச பயங்கரவாதம் நாடு முழுவதும் நாசத்தை ஏற்படுத்தி வருகிறது கண்கூடாகத் தெரிந்தும், தமிழக காவல் துறை பயங்கரவாதத்திற்கு துணை போகிறது என்று குற்றச்சாட்டை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.