சென்னை:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறத் தேவையான வகையில் அவசரச் சட்டம் பிறப்பிக்க தகுந்த நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டம் குறித்து முதல்வர் பன்னீர்செல்வம் கூறியபோது:
அவசர சட்டமானது 6 மாத காலத்திற்குள் உறுதியாக நடைமுறையில் இருக்கும். அதற்கு முன் சட்ட முன்வரைவு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். வரும் சட்டசபை தொடரில் இதற்குரிய சட்ட முன்வரைவு கொண்டு வரப்பட்டு உரிய சட்டம் கொண்டு வரப்படும். அவசர சட்டம் தொடர்பாக மாநில அரசு எடுக்க வேண்டிய நேரம்தற்போதுதான் வந்துள்ளது. ஜல்லிக்கட்டு தடை நீங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவசர சட்டமே நிரந்தர தீர்வாகும். அறவழியில் போராடிய இளைஞர்கள், பொதுமக்களுக்கு நன்றி. அவசர சட்டம் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என்று கூறினார்.
இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு:
Thanks to @narendramodi ji for your support and assistance in enabling #Jallikattu to be held in TamilNadu. pic.twitter.com/CEAvU4zK5q
— O. Panneerselvam (@CMOTamilNadu) January 21, 2017