புது தில்லி: வங்கி மோசடி குறித்து 2 நிமிடம்கூட பேச பிரதமர் மோடி மறுப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்…
தேர்வில் வெற்றி பெறுவது எப்படி என மாணவர்கள் மத்தியில் 2 மணி நேரம் பிரதமர் மோடியால் பேச முடிகிறது. ஆனால், 22 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி மோசடி குறித்து 2 நிமிடம் பேச மறுக்கிறார்.
நிதியமைச்சர் ஜேட்லி ஒளிந்திருக்கிறார். நீங்கள் குற்ற உணர்வுடன் இருப்பது போல் நடந்து கொள்வதை நிறுத்திவிட்டு பேச வேண்டும் – என்று ராகுல் கூறியுள்ளார்.
அவரது டிவிட்…
PM Modi tells kids how to pass exams for 2 hrs, but won’t speak for 2 mins on the 22,000Cr banking scam.
Mr Jaitley is in hiding.
Stop behaving as if you’re guilty! Speak up. #ModiRobsIndia
— Office of RG (@OfficeOfRG) February 18, 2018