சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய பாட்மிண்டன் வீராங்கணை சாய்னா நேவால் அறிவித்துள்ளார். சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் இந்த வாரம் துவங்குகிறது. கடந்த வாரம் மலேசிய ஓபன் போட்டி அரையிறுதியில் சீன வீராங்கனை லீ ஸியூரியிடம் தோல்வியடைந்தார். இதன் மூலம் தான் தர வரிசையில் பெற்ற முதலிடத்தை இழந்தார் சாய்னா. இருப்பினும் இந்த வாரம் தொடங்கும் சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் போட்டியில் வெற்றி பெற்றால் மீண்டும் முதலிடத்தைப் பிடிக்கலாம் என்ற வாய்ப்பு சாய்னாவுக்கு இருந்தது. ஆனால் இதில் இருந்து விலகுவதாக சாய்னா அறிவித்துள்ளதன் மூலம் அவர் மீண்டும் முதலிடம் பெறுவதற்கான வாய்ப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. இருப்பினும், சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் முதலிடத்தை இழந்ததால் வருத்தமில்லை என்று அவர் கூறியுள்ளார்.
To Read this news article in other Bharathiya Languages
சிங்கப்பூர் ஓபன் சீரிஸில் இருந்து சாய்னா நேவால் விலகல்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari