அண்ணா நூலகத்தை சீரமைக்கக் கோரி ஏப்.,10ல் திமுக ஆர்ப்பாட்டம்

Published:

சென்னை: அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைச் சீரமைக்க வலியுறுத்தி, திமுக சார்பில், வரும் 10-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக முன்னாள் மேயரும், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளருமான மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில், திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக அதிமுக ஆட்சியில் அண்ணா நூற்றாண்டு நூலகம் சீரமைக்கப்படாமல் உள்ளது. வீட்டுக்கொரு நூலகம் வேண்டும் என கூறிய அண்ணாவின் பெயரால் அமைந்த நூலகத்தைச் சீரமைக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இதைக் கண்டித்து, வரும் 10-ஆம் தேதி அண்ணா நினைவு நூலகத்தின் வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img