கறுப்பரின அதிகாரியைக் கொன்ற அமெரிக்க வெள்ளையின போலீஸ்: அதிர்ச்சிச் சம்பவம்

Published:

அமெரிக்காவில் நிறவெறி தற்போதும் கூட தலைவிரித்தாடி வருவது கண்கூடாகத் தெரியவந்துள்ளது. வால்டர் ஸ்காட் என்னும் 50 வயது காவல்துறை அதிகாரியை வழி மறித்த வெள்ளை இன போலீஸ்காரர் ஒருவர் அவரை துப்பாக்கியால் 8 முறை சுட்டுள்ளார்.

5 குண்டுகள் வால்டர் மேல் பாய்ந்து அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆனால் தனது துப்பாக்கியை வால்டர் எடுக்க முனைந்ததாகவும் , தற்காப்புக்காகவே தான் சுட்டதாகவும் வெள்ளை இன போலீஸ்காரரான மிச்சேல் தெரிவித்துள்ளார்.

அவ்வாறே, போலீஸார் சென்று பார்த்தபோது, கறுப்பின அதிகாரிக்கு அருகிலேயே துப்பாக்கி இருந்துள்ளது. ஆனால் சம்பவம் நடந்தபோது, மைதானத்துக்கு அருகில் இருந்த நபர் ஒருவர் தனது மொபைல் ஃபோனில் இந்தக் காட்சியை வீடியோ எடுத்துள்ளார். கேமராவில் அனைத்து காட்சிகளும் பதிவாகியிருந்தது.

அதில், வெள்ளை இன போலீஸ்காரர் , கறுப்பின அதிகாரியைத் துரத்தியதும், அவரைச் சுட்ட பின்னர் அவர் அருகே சென்று தனது துப்பாக்கியை அவர் அருகிலேயே வைத்து விட்டு வருவதும் தெளிவாகத் தெரிந்தது.

இந்த வீடியோ பதிவைப் பார்த்த போலீஸ் உயர் அதிகாரிகள் ஒரு நிமிடம் ஆடிப்போயினர். ஒரு அதிகாரியாக இருந்தும் அந்தக் கறுப்பின மனிதர் ஏன் அவரிடம் இருந்து தப்பி ஓடினார் என்பது அவர்களுக்கு மெதுவாகப் புரிந்தது.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

அந்த கறுப்பின போலீஸ்காரர் தன்னை சுட்டுவிடுவார் என்ற அச்சத்திலேயே அவர் பந்து ஓடியுள்ளார். இருப்பினும், அவர் நினைத்தது போல் அவரைச் சுட்டுள்ளார்.

https://youtu.be/T3zkyOf3y0Y

Related articles

Recent articles

spot_img