Home Blog

பஞ்சாங்கம் செப்.12 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

dhinasari panchangam jyothidam - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் – செப்.12

ஸ்ரீராமஜயம் – ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்

||श्री:|| !!ஸ்ரீ:!!

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

ஆவணி ~ 26 ( 12.9.2026 ) சனிக்கிழமை
வருடம் ~ பராபவ{ பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ தக்ஷிணாயணம்.
ருது ~ வர்ஷ ருது.
மாதம் ~ ஆவணி மாதம் { ஸிம்ஹ மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ காலை 8.51 AM வரை ப்ரதமை பின்னர் த்விதீயை.
நாள் ~ { ஸ்திர வாஸரம் } சனிக்கிழமை.
நக்ஷத்திரம் ~ பகல் 2.49 PM வரை உத்தரம் பின்னர் ஹஸ்தம்.
யோகம் ~ சுபம்.
கரணம்~ பவம் / பாலவம்.
அமிர்தாதியோகம் ~ அசுபயோகம்.
ராகு காலம் ~ காலை 9.00 ~ 10.30 AM.
எமகண்டம் ~ மதியம் 1.30 ~ 3.00 PM.
குளிகை ~ காலை 6.00 ~ 7.30 AM.
நல்ல நேரம் ~ 7.30 to 8.30 AM & 4.30 to 5.30 PM.
சூரிய உதயம் ~ காலை 6.06 AM.
சந்திராஷ்டமம் ~ கும்பம்.
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்த திதி ~ த்விதீயை.
இன்று ~ சந்த்ரதர்சனம்.

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु !!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஓரை என்றால் என்ன?
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.

சனிக்கிழமை ஹோரை
காலை
6-7 : சனி – அசுபம் ❌
7-8 : குரு – சுபம் ✔
8-9: செவ்வாய் – அசுபம் ❌
9-10: சூரியன் – அசுபம் ❌
10-11 : சுக்கிரன் – சுபம் ✔
11-12 : புதன் – சுபம் ✔

பிற்பகல்
12-1 : சந்திரன் – சுபம் ✔
1-2 : சனி – அசுபம் ❌
2-3 : குரு – சுபம் ✔

மாலை
3-4: செவ்வாய் – அசுபம் ❌
4-5 : சூரியன் – அசுபம் ❌
5-6 : சுக்கிரன் – சுபம் ✔
6-7 : புதன் – சுபம் ✔

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்..

astrology - 2026

இன்றைய (12-9-2026) ராசி பலன்கள்


மேஷம்

தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்கிறீர்கள். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். உத்தியோக மாற்ற சிந்தனைகள் ஏற்படும். வியாபார பணிகளில் புதுமையான வாய்ப்புகள் உண்டாகும். திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். வழக்கு சார்ந்த பணிகளில் இழுபறிகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : ஆதாயம் உண்டாகும்.
பரணி : வாய்ப்புகள் உண்டாகும்.
கிருத்திகை : இழுபறிகள் குறையும்.


ரிஷபம்

கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்களின் வருகை மூலம் புத்துணர்ச்சியான சூழ்நிலை காணப்படும். வர்தகம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை ஏற்படும். மனதில் இருந்து கவலைகள் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு புது விதமான சிந்தனைகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

கிருத்திகை : நெருக்கம் அதிகரிக்கும்.
ரோகிணி : மேன்மை ஏற்படும்.
மிருகசீரிஷம் : புதுமையான நாள்.


மிதுனம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய பங்குதாரர்களின் அறிமுகங்கள் ஏற்படும். தாயாருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். திறமைக்குண்டான மதிப்புகள் உருவாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் நட்புகள் கிடைக்கும். விவசாய பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்

மிருகசீரிஷம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
திருவாதிரை : வேறுபாடுகள் மறையும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.


கடகம்

எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பாராத திடீர் மாற்றங்கள் மூலம் மேன்மை ஏற்படும். கடினமான காரியத்தையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புகள் சாதகமாகும். உத்தியோக பிரச்சனைகள் குறையும். அரசு பணிகளில் அனுசரித்து சென்றால் ஆதாயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

புனர்பூசம் : அனுபவம் வெளிப்படும்.
பூசம் : மேன்மை ஏற்படும்.
ஆயில்யம் : ஆதாயகரமான நாள்.


சிம்மம்

சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் காணப்படும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். தன வருவாய் மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கற்பனை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்

மகம் : ஆதரவுகள் கிடைக்கும்.
பூரம் : சிந்தனைகள் மேம்படும்.
உத்திரம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.


கன்னி

நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த சில உதவிகள் ஏற்படும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிராமல் இருக்கவும். உயர் அதிகாரிகளால் அலைச்சலும் ஆதாயமும் ஏற்படும். போட்டிகளில் சில மாற்றமான ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடு செய்வதை தவிர்க்கவும். உறவினர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

உத்திரம் : உதவிகள் ஏற்படும்.
அஸ்தம் : ஆதாயமும் ஏற்படும்.
சித்திரை : சிந்தனைகள் பிறக்கும்.


துலாம்

ஒப்பனை தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். மறைமுக வருமானம் மேம்படும். உடன் இருப்பவர்களின் தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். எந்த ஒரு சூழ்நிலையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிகப்பு நிறம்

சித்திரை : லாபகரமான நாள்.
சுவாதி : ஆர்வம் ஏற்படும்.
விசாகம் : வாய்ப்புகள் சாதகமாகும்.


விருச்சிகம்

பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். இலக்கியம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

விசாகம் : புரிதல் ஏற்படும்.
அனுஷம் : ஒத்துழைப்பான நாள்.
கேட்டை : முன்னேற்றமான நாள்.


தனுசு

சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். திடீர் செலவுகளால் சில நெருக்கடிகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். அரசாங்க காரியம் இழுபறிக்குப் பின்னர் முடியும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

மூலம் : நெருக்கடிகள் ஏற்படும்.
பூராடம் : ஆதாயம் உண்டாகும்.
உத்திராடம் : ஆதரவுகள் கிடைக்கும்.


மகரம்

மனதளவில் இருந்த சோர்வுகள் நீங்கும். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வர்த்தக பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். தடைப்பட்ட வேலைகளை முடிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். சுபகாரிய செலவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு நிறம்

உத்திராடம் : குழப்பங்கள் ஏற்படும்.
திருவோணம் : அனுபவம் ஏற்படும்.
அவிட்டம் : செலவுகள் உண்டாகும்.


கும்பம்

மறைமுக எதிர்ப்பும் உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளால் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். எந்த பொறுப்பையும் ஒப்படைக்க. விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வெளி இடங்களில் அமைதி காக்கவும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அவிட்டம் : அலைச்சல் அதிகரிக்கும்.
சதயம் : கவனம் வேண்டும்.
பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.


மீனம்

மனதில் புதுவிதமான ஆசைகள் உருவாகும். தவறிப்போன சில பொருள்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

பூரட்டாதி : ஆசைகள் பிறக்கும்.
உத்திரட்டாதி : பயணங்கள் மேம்படும்.
ரேவதி : பிரச்சனைகள் குறையும்.


தினம் ஒரு திருக்குறள்

thiruvalluvar
thiruvalluvar

அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் – குறள் எண்: 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

மு.வ உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 10

நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.

விளக்கவுரை :நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?

தினம் ஒரு பாசுரம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே!
வாலியைக் கொன்று அரசு இளையவானருத்துக்கு அளித்தவனே!
காலின்மணி கரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே!
ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ
(குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
– சக்கரவர்த்தித் திருமகனைக் கௌசலையார் தாலாட்டும் பாசுரம் – 725)

இன்றைய சிந்தனை!

முதல் படி

உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.

  • Goethe.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

  • Martin Luther King Jr.

உழைப்பு = வெற்றி

மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

  1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
  2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
  3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
  • வில்லியம் ஷேக்ஸ்பியர்

தினசரி.காம்


இன்றைய சிந்தனைக்கு…

பொறுப்பு என்பது, பாரம் அல்ல, வாய்ப்பு, ஒருவரின், திறமையை நிரூபிப்பதற்கான, சந்தர்ப்பம்!
முடியாது என்பதை பிறகு சிந்தி, எப்படி முடிப்பது என்பதை, எப்பொழுதும் சிந்தி, வெற்றி நிச்சயம்!!
ஒருவருக்கு கிடைத்ததைப் பற்றி, பேசும் இந்த சமூகம், அதனை அடைய, அவர் இழந்ததைப் பற்றி, பேசுவதில்லை!!!

உன் வார்த்தைகளின் நாகரீகமே, பிறரிடம், உனக்கான நன்மதிப்பை, பெற்று கொடுக்கும்!
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், உன்னுடைய கால்களை பயன்படுத்து, பிறரின் முதுகை அல்ல!!
உன்னை எப்படி நினைக்கிறாயோ, மத்தவங்களையும் அப்படியே நினைக்க கத்துக்கோ; உன் எண்ணம் உறுதியா இருந்தா, நீ எண்ணியபடி உயர்ந்திடுவாய்!!!

எந்த மனிதரிடமும், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், உறவு கொள்வதும், பிரதி பலன் எதிர் பாராமல் அன்பு செய்வதும், அறம்! அனைவரும் அவரவர் பார்வையில், தங்களை சரியானவர்கள் என்று நினைப்பதை புரிந்து கொண்டு, எதையும் கடந்து போக கற்றுக்கொள்!! பட்டம், பதவி, பகட்டு வாழ்க்கையுடன், மனதின் மகிழ்ச்சியை, ஒன்றாக இணைத்து பார்ப்பதை நிறுத்தும் போது, உண்மையில் மனம், பக்குவம் அடைகிறது!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

railway news - 2026
#image_title

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இங்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பாக சிறப்பு ரயில் பல்வேறு வழித்தடங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் முதல் செங்கோட்டை வழி மதுரை க்கு கும்பாபிஷேக சிறப்பு ரயில் செப் 15முதல் 17வரை இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்

செப்டம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இந்த ரயில்கள் இயக்கப்படுகிறது .

சென்னை சென்ட்ரல் மதுரை ஸ்பெஷல்
வழி : திருவள்ளூர் அரக்கோணம் காட்பாடி ஜோலார்பேட்டை சேலம் நாமக்கல் கரூர் திண்டுக்கல் வழியாக மதுரை வரை இயக்கப்படும்

ரயில் எண் 06153 / 06154 சென்னை செண்ட்ரல் – மதுரை- சென்னை செண்ட்ரல் சிறப்பு ரயில் – புதன் மாலை 4.10க்கு கிளம்பி, வியாழன் காலை 4.30க்கு மதுரை சென்றடையும். மறு வழியில், வியாழன் மதியம் 3.30க்குக் கிளம்பி வெள்ளி காலை 3.30க்கு சென்னை செண்ட்ரல் வந்தடையும்.

தாம்பரம்-மதுரை ஸ்பெஷல்
வழி : செங்கல்பட்டு விழுப்புரம் விருத்தாச்சலம் திருச்சி திண்டுக்கல் வழியாக மதுரை

ரயில் எண் 06157 / 06158 – தாம்பரம் – மதுரை – தாம்பரம் ரயில், புதன் இரவு 9.40 க்கு தாம்பரத்தில் இருந்து கிளம்பி, காலை 5 மணிக்கு மதுரை வந்தடையும். மறு வழியில், வியாழன் இரவு 7 மணிக்கு மதுரையில் கிளம்பி, வெள்ளி காலை 3.20க்கு தாம்பரம் வந்தடையும்.

சென்னை பீச்- மானாமதுரை UR MEMU
வழி : சென்னை எழும்பூர் தாம்பரம் செங்கல்பட்டு விழுப்புரம் திருப்பாதிரிப்புலியூர் சிதம்பரம் சீர்காழி மயிலாடுதுறை கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி மணப்பாறை திண்டுக்கல் கொடைக்கானல் ரோடு மதுரை வழியாக மானாமதுரை சிறப்பு MEMU ரயில் செல்கிறது

ரயில் எண் 06161 / 06162 சென்னை கடற்கரை – மானாமதுரை – சென்னை கடற்கரை மெமு சிறப்பு ரயில், புதன் காலை 10.45க்கு சென்னை கடற்கரையில் கிளம்பி, அன்று இரவு 10 மணிக்கு மதுரைக்கும், 11.30க்கு மானாமதுரைக்கும் சென்றடையும். மறு வழியில், வியாழன் பகல் 12 மணிக்கு மானாமதுரையில் இருந்தும், 1 மணிக்கு மதுரையில் இருந்தும் கிளம்பி, அதே வியாழன் இரவு 11.45க்கு சென்னை கடற்கரை சென்றடையும்.

இவ்வாறு மூன்று வெவ்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு மிக விரைவில் துவங்க இருக்கிறது .

சென்னை பீச்- மானாமதுரை வழி:மதுரை சிறப்பு ரயில் முழுவதும் முன்பதிவில்லா ரயிலாகும் இந்த வண்டிக்கு முன்பதிவு தேவையில்லை முன்பதிவில்லா பெட்டிகள் இந்த வண்டியில் உள்ளது

மதுரையில் நடைபெறும் கும்பாபிஷேகத்திற்கு செல்லக்கூடிய பக்தர்கள் இந்த சிறப்பு ரயில்களை பயன்படுத்தி கொள்ள ரயில் பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளனர்.இந்த நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் முதல் செங்கோட்டை வழி மதுரை க்கு கும்பாபிஷேக சிறப்பு ரயில் செப் 15முதல் 17வரை இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே இன்றிரவு சிறப்பு ரயில் மானாமதுரைக்கு இயக்கப்படுகிறது.

இன்று 11.09.26 வெள்ளி இரவு 11:50 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம் ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக மானாமதுரைக்கு 12 பெட்டிகளுடன் கூடிய மெமு ரயில் இயக்கப்படுகிறது. முற்றிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள். இந்த ரயிலை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறார்கள்

குறிப்பு: பேருந்துகளில் அதிக கட்டணம் செலுத்தி இடம் கிடைக்காமல் கூடுதல் தொகை செலுத்தி பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

சதுர்த்தி விழாவில் பெண்கள், குழந்தைகள் கலந்து கொள்ளக் கூடாதா? என்ன சூழ்ச்சி இது?

hindumunnani
hindumunnani

விநாயகர் சதுர்த்தி விழாவில் பெண்கள், குழந்தைகள் ஏஎன் கலந்து கொள்ளக் கூடாது!? தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த சில கறுப்பாடுகள் சூழ்ச்சியா? விநாயகர் சதுர்த்தி விழா சீரும் சிறப்பாக நடைபெற தமிழக முதல்வர் கவனம் கொடுக்க வேண்டும் என இந்து முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

நேற்றைய தினம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொள்ள கூடாது என்றும் முளைப்பாரி எடுத்து வர கூடாது என்றும் தெரிவித்துள்ளார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விநாயகர் சதுர்த்தி நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறியுள்ளனர்

இது அப்பட்டமான மத வழிபாட்டு உரிமை மீறல் மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் எதிரானது. இந்துக்களின் வழிபாட்டினை அரசியலாக பார்ப்பதை இந்து முன்னணிக் கண்டிக்கின்றது.

மேலும் பள்ளிவாசல் வழியாக செல்லும் போது மேல தாளங்கள் வாசிப்பவர்களை பள்ளிவாசல் அருகே குறிப்பிட்ட தூரத்திற்கு காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்வதும் சர்வாதிகாரத்தின் உச்சம். சாலைகளில் செல்ல அரசியல் சாசனம் கொடுத்துள்ள உரிமையை அவமதிக்கும் செயலாகும் இது.

தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் வெளிநாடு சென்றுள்ளார். இதனைப் பயன்படுத்தி சிலர் தமிழகத்தில் குழப்பத்தை விளைவிக்க சதி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆட்சி மாறினாலும் இன்னமும் சில அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பழைய ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. இதனை தமிழக முதல்வர் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தென் தமிழ்நாட்டில் முளைப்பாரி எடுப்பது தமிழர்களின் பாரம்பரியம் ஆகும். மேலும் மத வழிபாட்டில் பெண்கள் குழந்தைகள் என ஒட்டுமொத்த குடும்பமும் கலந்து கொள்வது நமது மரபு. இந்த உரிமைகளை மறுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இது போன்ற அறிவிப்பு திட்டமிட்ட சதியோ என்ற சந்தேகம் எழுகிறது.

கோட்டாட்சியரின் இந்த உத்தரவை திரும்ப பெறாவிட்டால் வரும் 15ம் தேதி அருப்புகோட்டை பகுதியில் இந்துமுன்னணி சார்பில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட விஜர்சன ஊர்வலம் ஒத்தி வைக்க வேண்டிய நிலை உள்ளது.

வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட இது சம்மந்தமாக உயர்நீதி மன்றத்தை நாடி உரிய நீதி பெற்ற பின்பே ஊர்வலம் நடைபெற ஆலோசித்து வருகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் தான்தோன்றித்தனமாக கருத்து வெளியிட்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் குழப்பத்தை ஏற்படுத்த முயலும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் செயல் கவலை அளிக்கும் விதத்தில் இருக்கிறது.

தமிழக முதல்வர் தற்போது வெளிநாட்டில் இருந்தாலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற உரிய கவனத்துடன் செயல்பட்டு ஒத்துழைப்பு நல்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

thirukkural in russia presented to putin by modiji - 2026

பிரிக்ஸ் மாநாட்டுக்காக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புடினுக்கு பாரதப் பிரதமர் மோடி, தமிழர் நிர்வாகப் பொக்கிஷமான திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பு நூலை அன்புப் பரிசாக வழங்கினார்.

தில்லியில் பிரிக்ஸ் மாநாடு செப்.,12 நாளையும், நாளை மறுநாளும் என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 3 நாள் பயணமாக இன்று தில்லி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடியை அதிபர் புடின் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது வர்த்தகம், முதலீடு, எரிசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ரஷ்யா சார்பில் மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்தியா சார்பில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின் போது, ரஷ்ய அதிபர் புடினை வரவேற்ற பிரதமர் மோடி, அவருக்கு உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழில் அமைந்த, தமிழரின் ஞானக் களஞ்சியமான திருக்குறளின் ரஷ்ய மொழி பெயர்ப்பு நூலை பரிசளித்தார். பிரதமர் மோடி பரிசளித்த இந்தத் திருக்குறள் புத்தகம், நைரா மக்ர்ட்சியன் என்பவரால் ரஷ்ய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதனை மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், பெரும்புலவர் திருவள்ளுவரின் காலத்தால் அழியாத ஞானத்தை, மொழிகள் மற்றும் எல்லைகளைக் கடந்து கொண்டு செல்லும் திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பை அதிபர் புடினுக்கு பரிசளித்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதனை வரவேற்றுப் பாராட்டிய மத்திய இணை அமைச்சர் எல்.,முருகன் தன் அறிக்கையில், “உலகப் பொதுமறையான திருக்குறளின் பெருமையை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி    அவர்களின் முயற்சிக்கு மேலும் ஒரு சிறப்பான எடுத்துக்காட்டாக, ரஷ்ய அதிபர் திரு. விளாடிமிர் புதின் அவர்களுக்கு திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பு நூலை பிரதமர் அவர்கள் அன்புடன் பரிசளித்திருப்பது தமிழர்களுக்கு பெருமிதம் அளிக்கும் தருணமாகும். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தமிழரின் உயரிய பண்பாட்டு சிந்தனையைப் போலவே, திருக்குறளின் அறம், பொருள், இன்பம் குறித்த வாழ்வியல் நெறிகள் உலக மக்கள் அனைவரையும் சென்றடையட்டும். தமிழின் தொன்மையையும், திருக்குறளின் உலகளாவிய மனிதநேயச் சிந்தனைகளையும் உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வரும் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

madurai meenakshi amman palalayam - 2026
#image_title

மதுரை மாநகரில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் ஆலய திருக்குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) வைபவம் வருகின்ற 17.09.2026-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளதையொட்டி மதுரை மாநகர், மாநகரைச் சுற்றியுள்ள பகுதிகள், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து இலட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பேருந்துகள், இரயில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கும்பாபிஷேக விழாவினை காண வந்து செல்லக்கூடும் என்பதால், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திருக்கோவிலுக்கு வந்து செல்வதற்கும் போக்குவரத்து இடையூறு இல்லாமல் சீரான போக்குவரத்தினை ஏற்படுத்தும் பொருட்டும் மதுரை மாநகர காவல்துறையின் சார்பில் விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் கீழ்க்காணும் வகையில் தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

வாகன போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்தங்கள் தடை செய்யப்பட்ட சாலைகள் / இடங்கள்

அதன்படி 16.09.2026-ம் தேதி இரவு 10.00 மணி முதல் 17.09.2026-ம் தேதி இரவு வரை கோவிலை சுற்றிலும் உள்ள பகுதிகளான சித்திரை வீதிகள், ஆவணிமூலவீதிகள் மற்றும் மாசி வீதிகளில் ஆகிய வீதிகளில் எந்தவிதமான வாகனங்கள் செல்வதற்கோ நிறத்துவதற்கோ அனுமதி இல்லை. இவ்வீதிகள் அனைத்தும் (Zero Parking Zone) வாகன நிறுத்த அனுமதி இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது. கும்பாபிஷேக விழாவிற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நடந்து செல்ல மட்டுமே இவ்வீதிகளில் அனுமதிக்கப்படுவர்கள்.

சரக்கு வாகனங்கள் செல்லும் மாற்று வழித்தடங்கள்

16.09.2026-ம் தேதி இரவு 10.00 மணி முதல் 17.09.2026-ம் தேதி இரவு 10.00 மணி வரை மதுரை நகருக்குள் எந்தவிதமான சரக்கு வாகனங்களும் வந்து செல்வதற்கு அனுமதி இல்லை.

இவ்வாகனங்கள் அனைத்தும் அருப்புக்கோட்டை சுற்றுச்சாலை, தனிச்சியம் அலங்காநல்லூர் சாலை மற்றும் கப்பலூர் சுற்றச்சாலை வழியாக மட்டுமே செல்ல வேண்டும்.

தனக்கன்குளம் சந்திப்பு, நாகமலை புதுக்கோட்டை சுற்றுச்சாலை சந்திப்பு, துவரிமான் சுற்றுச்சாலை சந்திப்பு, சமயநல்லூர் சுற்றுச்சாலை சந்திப்பு, அலங்காநல்லூர் செக்போஸ்ட், நத்தம் ரோடு செக்போஸ்ட், அழகர்கோவில் ரோடு செக்போஸ்ட் மற்றும் ஒத்தக்கடை நான்கு வழிச்சாலை சந்திப்பு ஆகிய இடங்களிலிருந்து மதுரை மாநகருக்குள் கனரக சரக்கு வாகனங்கள் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து பேருந்துகள் செல்லும் மாற்று வழித்தடங்கள்

மார்கமாக 1) மாட்டுத்தாவணியிலிருந்து ஆரப்பாளையம் வழியாக திண்டுக்கல் செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மதுரை நகருக்குள் செல்வதை தவிர்த்து பழமார்கெட் சந்திப்பு. மேலமடை சந்திப்பு, ஆவின் சந்திப்பு. வழியாக வைகை வடகரை சாலை, கபடி ரவுண்டானா, தத்தனேரி பாலம் மற்றும் அம்மா பாலம் வழியாக செல்லவேண்டும்.

  1. ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மதுரை நகருக்குள் செல்வதைத் தவிர்த்து அம்மா பாலம், தத்தனேரி ரோடு, கபடி ரண்டானா வழியாக M.M.லாட்ஜ் சென்று வழக்கமான வழித்தடங்களில் செல்லலாம்.
  2. பாத்திமா கல்லூரி சந்திப்பிலிருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லும் அனைத்து பேருந்துகளும் கூடல்நகர் பாலம், ஆணையூர் ரோடு, அய்யர் பங்களா சந்திப்பு, மூன்றுமாவடி சர்வேயர் காலனி சந்திப்பு மற்றும் 120 அடி சாலை வழியாக செல்லவேண்டும்.
  3. திருப்பரங்குன்றம் சாலை மார்க்கத்திலிருந்து பெரியார் பேருந்து நிலையம் வரும் வாகனங்கள் அனைத்தும் பழங்காநத்தம் C2 ரவுண்டானா சந்திப்பிலிருந்து கென்னட் ரோடு சந்திப்பு சென்று 70 அடி ரோடு வழியாக எல்லீஸ் நகரில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையம் வரை சென்று திரும்ப TB.ரோடு, காளவாசல் சந்திப்பு வழியாக திருப்பரங்குன்றம் சாலைக்கு செல்லலாம்.
  4. அருப்புக்கோட்டை ரோடு அவனியாபுரம் மற்றும் சிந்தாமணி ரோடு வழியாக தெற்குவாசல் சந்திப்பு மற்றும் பெரியார் நிலையம் வரக்கூடிய வாகனங்கள் வழக்கமான வழித்தடங்களில் வந்து செல்லலாம். கூட்ட நெரிசலை பொருத்து தேவைப்படும் பட்சத்தில் இவ்வாகனங்கள் அனைத்தும் ஜெயவிலாஸ் சந்திப்பில் திருப்பப்பட்டு ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு, TVS பாலம் வழியாக C2 ரவுண்டானா சென்று எல்லீஸ் நகர் தற்காலிக பேருந்து நிறுத்தம் வரை அனுமதிக்கப்படும்.
  5. PC.பெருங்காயம் சந்திப்பு மற்றும் விரகனூர் சந்திப்பிலிருந்து மதுரை நகரின் வழியாக பெரியார் பேருந்து நிலையம் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் மதுரை நகருக்குள் செல்வதை தவிர்த்து வைகை வடகரை மற்றும் தென்கரை குருவிக்காரன் சாலை வழியாக பெரியார் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செல்லலாம்.
  6. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் மதுரை நகருக்குள் செல்வதை தவிர்த்து அருப்புக்கோட்டை சுற்றுச்சாலை வழியாக திருமங்கலம் செல்லலாம்.

இலகுரக வாகனங்கள் செல்லும் மாற்று வழித்தடங்கள்

  1. மாட்டுத்தாவணியிலிருந்து ஆரப்பாளையம் செல்லக்கூடிய பொதுமக்களின் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கே.கே.நகர் ஆர்ச், பெரியார் சிலை, தமுக்கம் ஆழ்வார்புரம் இரக்கம், வைகை வடகரை சாலை. கபடி ரவுண்டானா. தத்தனேரி பாலம் மற்றும் அம்மா பாலம் வழியாக செல்லவேண்டும்.
  2. ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லக்கூடிய பொதுமக்களின் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மதுரை நகருக்குள் செல்வதைத் தவிர்த்து அம்மா பாலம், தத்தனேரி ரோடு, கபடி ரண்டானா வழியாக MM.லாட்ஜ் சென்று வழக்கமான வழித்தடங்களில் செல்லலாம்.
  3. காளவாசல் சந்திப்பிலிருந்து அரசரடி சந்திப்பு, புது ஜெயில் ரோடு வழியாக கோரிப்பாளையம் அழகர் கோவில் சாலை மற்றும் மேலூர் சாலைக்கு செல்லக்கூடிய பொதுமக்களின் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் மேயர் முத்து சிலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மன்னர் சிலை கருடர் பாலம் வழியாக LIC பாலம் சென்று கபடி ரவுண்டானா வழியாக செல்லவேண்டும்.
  4. அருப்புக்கோட்டை ரோடு அவனியாபுரம் மற்றும் சிந்தாமணி ரோடு வழியாக தெற்குவாசல் சந்திப்பு மற்றும் பெரியார் நிலையம் வரக்கூடிய பொதுமக்களின் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் ஜெயவிலாஸ் சந்திப்பில் திருப்பப்பட்டு ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு, TVS பாலம் வழியாக C2 ரவுண்டானா சென்று எல்லீஸ் நகர் தற்காலிக பேருந்து நிறுத்தம் வழியாக செல்லலாம்.
  5. PC.பெருங்காயம் சந்திப்பு மற்றும் விரகனூர் சந்திப்பிலிருந்து மதுரை நகரின் வழியாக பெரியார் பேருந்து நிலையம் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செல்லக்கூடிய பொதுமக்களின் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் மதுரை நகருக்குள் செல்வதை தவிர்த்து வைகை வடகரை மற்றும் தென்கரை குருவிக்காரன் சாலை வழியாக பெரியார் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செல்லலாம்.
  6. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து மதுரை நகரின் வழியாக திருமங்கலம் செல்லக்கூடிய பொதுமக்களின் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் அருப்புக்கோட்டை சுற்றுச்சாலை வழியாக திருமங்கலம் செல்லலாம்

கோபுரத்தின் மேல் தளத்திற்கு செல்ல அனுமதி சீட்டு வைத்திருக்கக்கூடிய நபர்களின் வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் வழித்தடங்கள்.

அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் திருக்குடமுழுக்கு விழாவினைக் காண வருகை தரும் கோபுர மாடிக்குச் செல்லும் அனுமதி அடையாளச் சீட்டு வைத்துள்ளவர்கள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மேலக் கோபுர வாசலின் வழியாகச் செல்லவேண்டிய நபர்கள் வாகனங்களை மேல மாரட் வீதியிலும், கிழக்கு மற்றும் வடக்குக் கோபுர வாசல்களின் வழியாகச் செல்லவேண்டிய நபர்கள் வாகனங்களை கீழ மாரட் வீதியிலும் மற்றும் தெற்குக் கோபுர வாசலின் வழியாகச் செல்லவேண்டிய நபர்கள் தெற்கு மாரட் வீதியிலும் அவர்களின் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லலாம்.

மாரட் வீதிகளின் வாகன நிறுத்தங்கள் நிறைவடைந்தால் மேற்கண்ட அனுமதி அடையாளச் சீட்டு வைத்துள்ளவர்களின் வாகனங்கள் வெளிவீதிகளில் நிறுத்த அனுமதிக்கப்படும்.

காவல்துறையினரின் வாகன அனுமதி அடையாளச்சீட்டு வைத்துள்ள முக்கிய நபர்களின் வாகனங்கள்

காவல்துறையினரின் வாகன அனுமதி அடையாளச்சீட்டு வைத்துள்ள மிக முக்கிய நபர்களின் வாகனங்கள் அண்ணா சிலையிலிருந்து வடக்கு மாசி வீதி. தளவாய் தெரு, வடக்கு ஆவணி மூல வீதி வழியாக மீனாட்சி சீருந்து வாகன நிறுத்தத்தில் நிறுத்தலாம். மேலும் காவல்துறையினரின் அனுமதி அடையாளச்சீட்டு வைத்துள்ள அரசு அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் அதிகாலை 5 மணி வரை மாசி வீதிகளில் நிறுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும். காவல்துறையினரின் அடையாள அட்டைச்சீட்டு இல்லாத வாகனங்கள் மாசி வீதிகளில் நிறுத்த அனுமதி இல்லை. மிக முக்கியஸ்தர்களின் வாகனங்களுக்கு மஞ்சள் நிற வாகன அனுமதி அடையாள சீட்டும் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு பச்சை நிற வாகன அனுமதி அடையாள சீட்டும் காவல்துறையினரால் வழங்கப்பட்டுள்ளது.

அவசரகால வாகனங்கள் செல்லும் வழித்தடங்கள்:

108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் அவசர கால தேவைக்காக சென்று வரும் வகையில் கீழ்கண்ட தெருக்கள் அவசர கால வழியாக பயன்படுத்த திட்டமிடப்பட்டு அவைகள் (Sterile Zone) பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக கண்காணிக்கப்படும். இவ்வீதிகளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் வாகனங்களில் செல்வதற்கோ நடந்து செல்வதற்கோ அனுமதி இல்லை.

  1. தளவாய் தெரு
  2. சென்டல் மார்க்கெட் தெரு
  3. தெற்கு காவல் கூட தெரு
  4. அன்னகுழி மண்டபம் தெரு

மேற்படி கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அவர்களது வாகனங்களை நிறுத்துவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள் அனைத்திற்கும் QR-code தயார் செய்யப்பட்டு அதன் Link Share செய்யப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வாகன நிறுத்தங்களை தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

i) இதில் சிவகங்கை, திருச்சி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து கும்பாபிஷேக விழாவை காண வரும் பக்தர்களின் வாகனங்கள் விரகனூர் சுற்றுச்சாலை வழியாக வைகை தென்கரை சாலையில் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில் நிறுத்தம் செய்யவேண்டும்.

ii) விருதுநகர் மற்றும் திருமங்கலம் சாலை மார்க்கத்திலிருந்து திருப்பரங்குன்றம் சாலை வழியாக வரக்கூடிய பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வாகனங்கள் தமிழ்நாடு பாலிடெக்னிக், மதுரை கல்லூரி, திடீர்நகர் காவல் நிலையம் எதிரே உள்ள மரக்கடை பின்புறம் உள்ள காலியிடம் மற்றும் பொரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள பலஅடுக்கு வாகன காப்பகம் ஆகிய இடங்களில் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில் தங்களது வாகனங்களை நிறத்திக் கொள்ளலாம்.

iii) தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து வரக்கூடிய பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வாகனங்கள் காளவாசல் பைபாஸ் ரோடு, பழைய RTO அலுவலகம் அருகில், அரவிந்த் மீரா பள்ளி சாலை, எல்லீஸ் நகர் சாலை, எல்லீஸ் நகர் மீனாட்சி கார் பார்க்கிங் அருகில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில் தங்களது வாகனங்களை நிறத்திக் கொள்ளலாம்.

iv) மதுரையின் வடபகுதிகளான நத்தம் சாலை, அலங்காநல்லூர் சாலை, அழகர்கோவில் சாலை மற்றும் மேலூர் சாலையிலிருந்து வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வாகனங்கள் தமுக்கம் மைதானம், காந்திமியூசியம், மீனாட்சி கல்லூரி வளாகம் மற்றும் அமெரிக்கன் கல்லூரி மைதானம் ஆகிய இடங்களில் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களிலும் வாகனங்ளை செய்யப்பட்டுள்ளன. நிறுத்துவதற்கு ஏற்பாடு

தற்காலிக பேருந்து நிலையங்கள்

v) மேற்படி கும்பாபிஷேக விழாவினை காண பேருந்துகளில் வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக மதுரை மாநகரில் i) C2.ரவுண்டானா ii) எல்லீஸ் நகர் iii) TB.ரோடு வெஸ்டன் பார்க் ஹோட்டல் அருகில் உள்ள இரயில்வே மேற்கு வாயில் iv) அண்ணா பேருந்து நிலையம் மற்றும் v) தெப்பக்குளம் ஆகிய 4-இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பெரியார் பேருந்து நிலையத்தில் வாகன பெருக்கத்தின் காரணமாக பேருந்துகளை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் மேற்படி தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்படுத்தப்படும்.

vi) இரயில் மார்க்கமாக மேற்படி கும்பாபிஷேக விழாவினை காண வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மதுரை இரயில் நிலையத்திலிருந்து நேராக டவுன்ஹால் ரோடு வழியாக நடந்து சென்று மே-பிளவர் சந்திப்பு வழியாக மேல ஆவணி மூலவீதி சென்று விழாவை காணலாம்.

பொதுமக்கள் கோபுர தரிசனம் செய்வதற்கு நடந்து செல்லும் வழித்தடங்கள்

  1. கிழக்கு கோபுரம் யானைக்கல் சந்திப்பிலிருந்து கீழமாசிவீதி சென்று சுவாமி சன்னதி தெரு, வெங்கலகடை தெரு ஆகிய வீதி வழியாக சென்று கீழஆவணி மூலவீதி மற்றும் கீழக்கு சித்திரை வீதிக்கு செல்லாம்.
  2. தெற்கு கோபுரம்

கீழவாசல் சந்திப்பு வாசன் சந்திப்பிலிருந்து விளக்குத்தூண், தெற்கு மாசி வீதி சென்று மறவர் சாவடி சந்திப்பு, தொட்டியன் கிணற்று சந்து வழியாக தெற்கு ஆவணி மூலவீதி மற்றும் தெற்கு சித்திரை வீதிக்கு செல்லாம்.

  1. வடக்கு கோபுரம் – Old TVs, வடக்கு மாசி வீதி மேலமாசி வீதி சந்திப்பு, வடுக காவல் கூட தெரு தானப்ப முதலி தெரு வழியாக வடக்கு ஆவணி மூலவீதி மற்றும் வடக்கு சித்திரை வீதிக்கு செல்லாம்.
  2. மேற்கு கோபுரம் நேதாஜி ரோடு மற்றும் டவுன்ஹால் ரோடு வழியாக மேலமாசி வீதி சென்று மேல ஆவணி மூலவீதி மற்றும் மேற்கு சித்திரை வீதிக்கு செல்லாம்.

மேற்படி தற்காலிக போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்களும், பக்தர்களும் வியாபாரிகளும் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து அருள்மிகு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் ஆலய திருக்குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) வைபவம் எவ்வித சிரமமின்றி சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மதுரைமாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகின்றது

திருவனந்தபுரம் – சென்னை சிறப்பு ரயில் மேலும் நீட்டிப்பு! மேலும் ரயில்கள் நீட்டிப்பு விவரம்!

railway news - 2026
#image_title

திருவனந்தபுரம் சென்ட்ரல் சென்னை சிறப்பு ரயில் சேவை 16.9.2026 – 28.10.26வரை இரு மார்க்கத்திலும் தலா 7 நடைகள் நீட்டிப்பு செய்து தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாம்பரம் – தென்காசி மற்றும் செங்கோட்டை – தாம்பரம் சிறப்பு ரயில் சேவை தெற்கு ரயில்வேயால் இயக்கப்படுகிறது. தாம்பரம் – தென்காசி _ செங்கோட்டை சிறப்பு ரயில் சேவை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சென்னையில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு செப்டம்பர் 10 நேற்று காலை 08:00 மணிக்கு தொடங்கி சில நிமிடங்களிலேயே இருக்கைகள் பதிவாகின.

இது போல், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லக்கூடிய மக்களின் வசதிக்காக சென்னை எழும்பூர் டூ திருநெல்வேலி மற்றும் பெங்களூர் திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் முன்பதிவு நாளை வெள்ளிக்கிழமை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

06151 || சென்னை எழும்பூர் திருநெல்வேலி சிறப்பு ரயில் வரும் செப்டம்பர் 12 சனி இரவு 11:50 மணிக்கு சென்னை எழும்பூரில் புறப்பட்டு மறுநாள் ஞாயிறு காலை 11:15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

06152 || திருநெல்வேலி சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் வரும் செப்டம்பர் 14 திங்கள் இரவு 10:30 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தில் புறப்பட்டு மறுநாள் செவ்வாய் காலை 10:15 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்து சேரும்.

இந்த ரயில் தாம்பரம் செங்கல்பட்டு விழுப்புரம் விருதாச்சலம் அரியலூர் ஸ்ரீரங்கம் திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் சோழவந்தான் மதுரை விருதுநகர் சாத்தூர் கோவில்பட்டியில் இரு மார்க்கத்திலும் நிற்கும். செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை இன்று காலை 8 மணிக்கு இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர் மற்றும் முன்பதிவு செயலிகளில் தொடங்கியது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் இந்த சிறப்பு ரயிலை சென்னையிலிருந்து தென் மாவட்டப் பகுதிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

பெங்களூரில் இருந்து விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில்கள் திருநெல்வேலி மற்றும் சென்னை சென்ட்ரல் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. சொந்த ஊருக்கு பெங்களூரில் இருந்து செல்லும் மக்கள் இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்தி கொள்ளுங்கள் !

கே எஸ் ஆர் பெங்களூர் திருநெல்வேலி மற்றும் பெங்களூர் கண்டோன்மெண்ட் சென்னை சென்ட்ரல் ஆகிய சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது

ரயில் எண். 06109/06110: திருவனந்தபுரம் சென்ட்ரல் – சென்னை – திருவனந்தபுரம் மத்திய சிறப்பு சேவை

இந்த சேவை திருவனந்தபுரம் மற்றும் சென்னை (தாம்பரம்) மற்றும் கொல்லம், புனலூர், செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக மீண்டும் இயங்குகிறது.

திருவனந்தபுரம் – சென்னை சிறப்பு: ஒவ்வொரு புதன்கிழமை
சென்னை – திருவனந்தபுரம் சிறப்பு: ஒவ்வொரு வியாழன்

பஞ்சாங்கம் செப்.11 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் செப்.11 – வெள்ளி

தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

||श्री:||
!!श्रीरामजयम!!

!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

ஆவணி ௴ 25 ௨( 11.9.2026 }
1.வருடம் பராபவ ௵ பராபவ நாம ஸம்வத்ஸரம்}
2அயனம் தக்ஷிணாயனம்
3.ருது ~ வர்ஷ ருதௌ
4.மாதம் ( ஸிம்ம மாஸம்)
5.பக்ஷம்காலை 09.22 வரை கிருஷ்ண பக்ஷம் பிறகு ஸுக்ல பக்ஷம்
6. ஸ்ரார்த்த திதி ப்ரதமை ( காலை 09.22 வரைஅமாவாசை)
7.நாள்* வெள்ளிக்கிழமை ப்ருகு வாஸரம் }
8.நக்ஷத்ரம் பிற்பகல் 02.54 வரை பூர்வ பல்குனி ( பூரம்) பிறகு உத்திர பல்குனி ( உத்திரம்) ( பிற்பகல் 02.54 வரை அமிர்த யோகம் பிறகு ஸித்த யோகம்)
நல்ல நேரம் காலை 69&1010.30 * பிற்பகல் 1* 3 மாலை 56 இரவு 81112 நாளை காலை1& 36
குளிகை
காலை 7.309 AM
ராகுகாலம் காலை 10.3012 AM
எமகண்டம் பிற்பகல் 03.4.30 PM
சூரிய உதயம் ~ காலை 6 AM
சூரிய அஸ்தமனம்- காலை 06.20 PM
சந்திராஷ்டம் பிற்பகல் 02.54 வரை திருவோணம் பிறகு அவிட்டம்

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
   !!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
   !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..

வெள்ளிக்கிழமை ஹோரை

காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்

பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்

மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

dhinasari panchangam jyothidam - 2026

இன்றைய ராசிபலன்கள் – 11.9.2026


மேஷம்

வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். போட்டி பந்தயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் அமையும். வெளி வட்டாரங்களில் செல்வாக்குகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். விவசாய பணிகளில் தெளிவுகள் மேம்படும். அரசு துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்

அஸ்வினி : முடிவுகள் அமையும்.
பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : முன்னேற்றம் ஏற்படும்.


ரிஷபம்

வியாபாரத்தில் இருந்து வந்த தாமதங்கள் குறையும். ஆரோக்கிய விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். பணிகளில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். வாசனைத் திரவிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய விஷயங்கள் கைகூடும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

கிருத்திகை : தாமதங்கள் குறையும்.
ரோகிணி : பொறாமைகள் குறையும்.
மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.


மிதுனம்

அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தடைகளை வெற்றி கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். தேவைகளை அறிந்து நிறைவேற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
திருவாதிரை : ஆதரவான நாள்.
புனர்பூசம் : முயற்சிகள் ஈடேறும்.


கடகம்

பழைய பிரச்சனைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். வாக்குறுதிகள் அளிக்கும் போது கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் புரிதல் வேண்டும். புதிய அறிமுகம் உண்டாகும். திடீர் வரவுகள் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

புனர்பூசம் : கவனம் வேண்டும்.
பூசம் : உதவிகள் கிடைக்கும்.
ஆயில்யம் : துரிதம் உண்டாகும்.


சிம்மம்

புதிய கலைகளில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். வாக்கு விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிந்தனைகளின் போக்கில் கவனம் வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

மகம் : ஆர்வம் உண்டாகும்.
பூரம் : மாற்றங்கள் ஏற்படும்.
உத்திரம் : கவனம் வேண்டும்.


கன்னி

சிறு சிறு பணிகளிலும் அலைச்சல் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் அனுசரித்து செல்லவும். வாகனத்தில் மிதவேகம் நல்லது. வியாபாரத்தில் லாபங்கள் முயற்சிக்கு ஏற்ப கிடைக்கும். புதுவிதமான பொருள்கள் மீது ஈர்ப்புகள் உண்டாகும். அலுவலகத்தில் விமர்சனக் கருத்துக்களை தவிர்க்கவும். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : அலைச்சல் அதிகரிக்கும்.
அஸ்தம் : லாபகரமான நாள்.
சித்திரை : பொறுமை வேண்டும்.


துலாம்

குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். செல்வ சேர்க்கை குறித்து சிந்திப்பீர்கள். அரசு பணிகளால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதிகார பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். புதிய தொழில் நிமித்தமான முயற்சிகள் கைகூடும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்

சித்திரை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
விசாகம் : முயற்சிகள் கைகூடும்.


விருச்சிகம்

பூர்வீக சொத்துக்களில் அனுகூலம் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும். சுப காரியம் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்விப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். தன வரவுகளில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : அனுகூலம் உண்டாகும்.
அனுஷம் : முன்னேற்றமான நாள்.
கேட்டை : நெருக்கடிகள் குறையும்.


தனுசு

மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு உணர்வுப்பூர்வமாக செயல்படுவதை விட சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கணவன், மனைவியிடையே அன்யோன்யம் ஏற்படும். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

மூலம் : வெற்றிகரமான நாள்.
பூராடம் : விவேகம் வேண்டும்.
உத்திராடம் : முயற்சிகள் கைகூடும்.


மகரம்

திட்டமிட்ட பணிகளில் தாமதம் உண்டாகும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக ரீதியான மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகளில் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படவும். வெளியூர் பயணங்களில் விவேகம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்

உத்திராடம் : தாமதம் உண்டாகும்.
திருவோணம் : அனுசரித்து செல்லவும்.
அவிட்டம் : விவேகம் வேண்டும்.


கும்பம்

குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றம் ஏற்படும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வியாபார விஷயங்களில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.
சதயம் : நெருக்கடிகள் மறையும்.
பூரட்டாதி : புரிதல் ஏற்படும்.


மீனம்

எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தன வரவுகள் சாதகமாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். சுப காரியங்கள் கைகூடும். கால்நடை பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : சுறுசுறுப்பான நாள்.
உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
ரேவதி : அமைதியான நாள்.


தினம் ஒரு திருக்குறள்

அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).

மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.


1500x900 1775289 arulmigu nellaiappar temple - 2026

தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11

விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.

விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.


இன்றைய சிந்தனைக்கு…

பெருந்தன்மை என்பது, உன்னால் முடிந்ததை விட, அதிகமாக கொடுப்பது, பெருமை என்பது, உனக்கு தேவையானதை விட, குறைவாக எடுத்து கொள்வது! நீ அன்புடன் செய்யும், சின்ன செயல் கூட, ஒருவரின் வாழ்க்கையில், பெரும் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும், உலகில் அன்பை விட, வலிமையானது எதுவுமில்லை!!
உறவுகளில், யார் முக்கியம் என்பதை, உயிர் அற்ற பணமே, முடிவு செய்கிறது; பணம் கொடுத்து பார், உறவுகள் உன்னை போற்றும், அதை திரும்ப கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!!

எல்லைக்கு உள்ளும் புறமும்… பிரதமரை குறி வைக்கும் அபாயம்!

1254945 pm modi - 2026
#image_title

ஜான்ஸி ராணி ஹிந்துஸ்தானி

பாரதப் பிரதமரை குறி வைக்கும் அபாயம்? எல்லைக்கு உள்ளும் புறமும் தொடரும் பாதுகாப்பு சவால்கள். உயிரைக் கொடுத்து முறியடிக்கும் பாதுகாப்பு மற்றும் உளவு கட்டமைப்புகள்.

சமீபத்திய நிகழ்வுகளில் சில ஒன்றோடு ஒன்று இணைந்து நம் தேசத்தை சூழும் பாதுகாப்பு அச்சுறுத்தலை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. முதல் விஷயம் பாரத பிரதமரை தொடரும் அச்சுறுத்தல்கள். இரண்டாவது விஷயம் உள்நாட்டில் பாதுகாப்பு கட்டமைப்புகளையே அதிர வைக்கும் வகையிலான போலி அடையாள அட்டைகளோடு சந்தேக நபர்கள் பிடிபடுவது.

மும்பையில் பிரதமர் பங்கேற்க இருக்கும் நிகழ்ச்சி மையத்திற்கு அருகில் கையில் துப்பாக்கியோடும் பிரதமர் அலுவலக அதிகாரி என்ற பெயரில் போலியான அடையாள அட்டையுடனும் இரு நபர்கள் பிடிபட்டுள்ளார்கள்.

கடந்த வாரம் தமிழகத்தில் சில நபர்கள் ஊட்டியில் இருக்கும் ராணுவ பயிற்சி மையத்தின் சார்புடைய அடையாள அட்டைகளுடன் பிடிபட்டுள்ளார்கள். அவர்கள் ஒரு முக்கியமான ராணுவ மையத்திற்குள் நுழைய முயலும் போது சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது பிடிபட்டுள்ளார்கள்.

இந்த இரு விஷயங்களும் போலி அடையாள அட்டைகள் தயாரிப்பு என்பது கள்ளக்குடியேறிகளுக்கு ஆதார் அட்டைகள் வழங்குவது போலி ஆவணங்கள் வழங்குவது போலி பாஸ்போர்ட் வழங்குவது என்பதை கடந்து இந்த தேசத்தின் உச்சபட்ச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் அளவிற்கு பிரதமர் அலுவலகம் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு கட்டமைப்பு சார்பில் கூட போலி அடையாள அட்டைகளை உருவாக்கும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கும் அபாயத்தை வெளிப்படுத்துகிறது. இது தேசம் சூழ்ந்திருக்கும் உள்நாட்டு துரோகத்தின் உச்சபட்ச அடையாளம்.

இதில் மும்பை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்கிடமான நபர்களை விசாரித்ததில் அவர்களிடமிருந்து போலி அடையாள அட்டை தான் . ஆனால் பிரதமர் நிகழ்ச்சிக்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை என்று மும்பை காவல்துறை முதல் கட்ட அறிக்கை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிறது.

பிரதமர் அலுவலக அதிகாரி என்ற பெயரில் போலி அடையாள அட்டையை வைத்திருக்கும் ஒரு நபர் கையில் துப்பாக்கியுடன் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அருகில் கையும் களவுமாக பிடிபட்ட பிறகும் பிரதமர் பங்கேற்ற நிகழ்விற்கும் பிடிபட்ட சந்தேக நபருக்கும் சம்பந்தம் இல்லை என்று எந்த அடிப்படையில் மும்பை காவல்துறை அறிக்கை வெளியிடுகிறது?.

பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தில் கையில் ஆயுதங்களுடன் பிடிபட்ட நபர்களை தேசிய பாதுகாப்பு முகமைகளிடம் ஒப்படைத்து அவர்கள் மூலமாக பன்முக விசாரணையை முன்னெடுக்க வேண்டியது அவசியம் . அப்படி இருக்க இதில் பிரதமர் பாதுகாப்பு குறித்த சம்பந்தம் ஏதும் அவர்களுக்கு இல்லை என்று மும்பை காவல்துறை அறிக்கை வெளியிடுவது ஏற்க முடியாது.

உள்நாட்டில் போலி காவலர் அடையாள அட்டை போலி அடையாள அட்டைகளோடு அரசு அதிகாரிகள் போல அதிகார துஷ்பிரயோகம் வசூல் வேட்டை நடத்துவது போன்ற நபர்கள் பிடிபடும் சம்பவங்கள் பலவற்றை அவ்வப்போது பார்த்திருக்கிறோம். அது மாநில அளவிலான சட்டம் ஒழுங்கு பிரச்சனை .

தேசத்தின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்கும் பாதுகாப்பு கட்டமைப்புகள் மற்றும் உச்சபட்ட அதிகாரம் கொண்ட அலுவலகங்கள் வரையிலும் இது போன்ற போலி அடையாள அட்டைகள் அதை பயன்படுத்தும் நபர்கள் பரவலாக பிடிபடுவது நம் உள்நாட்டு பாதுகாப்பை அச்சுறுத்தும் ஒரு சவாலாகவே பார்க்கப்படும். இது போன்ற விஷயங்கள் நிச்சயம் தனி மனித குற்றமாக மட்டுமே இருக்க முடியாது. இதன் பிண்ணனியில் உள்நாட்டு வெளிநாட்டு சதிவலை இருக்கும் வாய்ப்பு அதிகம்.

பாரத தேசத்தின் பொருளாதார வளர்ச்சி சுயசார்பு பாதுகாப்பு உறுதி தன்மை அயலக உறவின் மேம்பாடு இவற்றையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாத வல்லரசு நாடுகளும் பல சர்வதேச அமைப்புக்களும் குறிப்பாக பாகிஸ்தான் சீனா உள்ளிட்ட எதிரி நாடுகளும் பாரதத்தை எப்படியாவது உள்ளிருந்து சீர்குலைக்க பல்வேறு சதிகளை முன்னெடுக்கிறார்கள் . அவர்களுக்கு உள்நாட்டில் தேசத்தின் எதிர்க்கட்சிகள் என்ற பெயரில் இருக்கும் தேசியத்தின் எதிரி கட்சிகளும் ஆர்வலர்கள் போராளிகள் ஊடக வாதிகள் என்ற பெயரில் இருக்கும் தேசவிரோதிகளும் வெளிப்படையாக ஆதரவும் ஒத்துழைப்பும் கொடுக்கிறார்கள்.

திரும்பிய பக்கமெல்லாம் தேச விரோத ஆதரவும் பயங்கரவாதத்தை அனுதாபமாக மாற்ற முயலும் தேச துரோகத்தையும் அப்பட்டமாக பார்க்கிறோம். அப்படிப்பட்டவர்கள் இந்த தேசத்தின் பாதுகாப்பை உள்ளிருந்து சீர்குலைக்கவும் இந்த தேசத்தின் வலுவான ஆளுமையாக கருதப்படும் சர்வதேச தலைமையாக உருவெடுத்துவரும் நம் பாரத பிரதமரை வீழ்த்துவதற்கும் நிச்சயம் எந்த எல்லைக்கும் போவார்கள். அதை சமீப காலமாக பல விரும்பத்தகாத சம்பவங்கள் நிரூபித்துள்ளது..

சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்க செல்லும் போது நடந்த சில தொடர் நிகழ்வுகள்.
(பிரதமரின் ரஷ்யா பயணம் உக்ரைன் சம்பவம். சமீபத்திய ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நேரத்தில் ரஷ்யா அதிபர் உடன் நம் பிரதமர் பயணித்தது அதே நேரத்தில் ஒரு அமெரிக்க உளவாளியும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளியும் வங்கதேசத்தில் மர்மமாக மரணித்தது.

உள்நாட்டில் பிரதமர் வாகனம் பஞ்சாப் எல்லையில் மேம்பாலத்தில் போராட்டக் காரர்கள் முற்றுகை பெயரில் நிறுத்தி வைத்தது. கல்கத்தா நிகழ்ச்சி யில் 50 மீட்டர் தொலைவில் ஆளில்லா பாதுகாப்பு வளையம் உருவாக்கியது) உள்ளிட்ட நிகழ்வுகள் எளிதில் கடந்து செல்லும் விஷயங்கள் இல்லை.

சாமான்ய மக்களுக்கு இதன் பின் இருக்கும் கேள்விகள் இன்று வரை விடை தெரியாத மர்மங்கள். அதே சமயம் அதன் முழு பின்னணியும் நம் பாதுகாப்பு கட்டமைப்புகளுக்கு நிச்சயம் தெரிந்தவை. இந்த விஷயங்களில் சம்பந்தப்பட்ட சிலர் திடிரென காணாமல் போன செய்திகள் உண்டு. பலர் மர்மமாக மரணித்தார்கள். அவ்வகையில் நம் பாதுகாப்பு மற்றும் உளவு கட்டமைப்புகள் அதன் செயல்பாடுகள் போற்றத்தக்கது.

உள்நாட்டில் பிரதமரை குறி வைத்து பல்வேறு சம்பவங்கள் நடந்தது அதில் சம்பந்தப்பட்ட சில அமைப்புகள் தேசத்திற்கு உள்ளும் எல்லைக்கு அப்பால் வெளிநாடுகளிலும் அவ்வப்போது எதிர்கொள்ளும் விபரீதங்களும் நிச்சயம் இவையெல்லாம் சாதாரண நிகழ்வுகள் அல்ல. இந்த தேசத்தை சீர்குலைக்க நடத்தப்பட்ட திட்டமிட்ட நிகழ்வுகள் என்பதை விஷயம் புரிந்தவர்கள் தெளிவாக உணர்கிறோம்.

ஒருபுறம் அந்நிய சதி மறுபுறம் அவர்களுக்கு ஆதரவான உள்நாட்டு துரோகம் என்று தேசம் பெரும் சவாலான காலகட்டத்தில் பயணிப்பதை தேசாபிமானிகள் நிச்சயம் அறிவோம். அதே சமயம் இந்த தேசத்தின் பாதுகாப்பு இந்த தேசத்தின் முக்கியமான தலைமைகளை பாதுகாப்பது இந்த தேசத்தையே பாதுகாக்கும் முதல் கடமை என்பதை உணர்ந்து நம் பாதுகாப்பு மற்றும் உளவு கட்டமைப்புகள் உயிரைக் கொடுத்து உழைப்பதையும் கண்கூடாக காண்கிறோம்.

அசைக்க முடியாத சக்தி என்ற இறுமாப்பில் இருக்கும் வல்லரசு நாடுகள் தங்களின் உளவுத்துறை மூலம் நம் பிரதமரை குறி வைத்து பல்வேறு சதிகளை முன்னெடுக்கும் போதும் நம்முடைய பாதுகாப்பு உளவு அமைப்புகள் அவற்றையெல்லாம் தகர்த்து இந்த தேசத்தையும் தேசத்தின் தலைமையையும் பாதுகாப்பதில் தங்கள் உயிரை துத்தமாக பணியாற்றுவதையும் கண்கூடாக காண்கிறோம்.

இவ்வளவு வலுவான தலைமை தீர்க்கமான பாதுகாப்பு உளவு கட்டமைப்புகள் இருந்தபோதிலும் அத்தனையும் கடந்து ஏதேனும் ஒரு விரும்பத்தகாத சம்பவத்தை நிகழ்த்திவிட முடியாதா? அதன் மூலம் இந்த தேசத்தை வீழ்த்தி விட முடியாதா? என்று அந்நிய சதிகாரர்களும் உள்நாட்டு துரோகிகளும் கைகோர்த்து அலைவதன் சாட்சியம் தான் ராணுவ அதிகாரி பிரதமர் அலுவலக அதிகாரி என்பது போல போலி அடையாள அட்டைகளுடன் சந்தேக நபர்கள் பிடிபடுவதும் கைகளில் ஆயுதங்களோடு பிரதமர் பங்கேற்கும் நிகழ்வின் அருகில் ஆயுததாரிகள் பிடிபடுவதும் நமக்கு சொல்லும் செய்தி.

எப்பொழுதெல்லாம் இந்த தேசம் ஒரு வலுவான தலைமையின் கீழ் ஸ்திரமான அரசியலோடு வளர்ச்சி பாதையில் பயணிக்கிறதோ? அப்போதெல்லாம் இந்த தேசத்தை சீர்குலைக்க அதன் தலைமையை வீழ்த்துவது. அதற்காக கொடூரமான கொலை வரைக்கும் பயணிப்பதென்பது கசப்பான வரலாறு.

அந்நிய சதிகளுக்கும் உள்நாட்டு துரோகிகளுக்கும் இரையாக இந்த தேசம் இரண்டு முறை பொறுப்பில் இருந்த பிரதமர்களை பலி கொடுத்துள்ளது. ஒரு முன்னாள் பிரதமரை பிரதம வேட்பாளராக பலி கொடுத்துள்ளது. இன்னொரு முறை இது போன்ற விரும்பத் தகாத சம்பவம் நிகழக் கூடாது. நம் தேசம் மீண்டும் ஒரு இறையாண்மை சார்ந்த அச்சுறுத்தலை சவாலை எதிர் கொள்ளக்கூடாது என்பதே தேசாபிமானிகளின் வேண்டுதல்.

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த தேசம் தேசியம் தேச இறையாண்மை பாதுகாப்பு முதன்மையானது. அதை கட்டிக் காக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மட்டும் சார்ந்தது அல்ல. நம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதில் கடமையும் பொறுப்புடைமையும் உண்டு என்பதை இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உணரும் போது இங்கு தேசவிரோதம் தேச துரோகம் நிச்சயம் களையப்படும். அதுவரையில் நம் தேசத்தின் பாதுகாப்பு விஷயங்களில் பாதுகாப்பு கட்டமைப்புகள் உளவு கட்டமைப்புக்குள் எண்ணிலடங்கா சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

நம் பிரதமரை குறி வைப்பது நிச்சயம் இந்த தேசத்தின் ஸ்திரத்தன்மையை வளர்ச்சியை பாதுகாப்பை குறி வைப்பது என்பதில் சந்தேகம் இல்லை. அதை செய்ய துணிந்தவர்கள் நிச்சயம் சாதாரண பின்புலம் கொண்டவர்களாக இருக்க முடியாது. எனவே இந்த தேசத்தின் பாதுகாப்பு கட்டமைப்பிற்கும் இந்த தேசத்தின் இறையாண்மை பாதுகாப்பிற்கும் சவால் விடும் இதுபோன்ற பாதுகாப்பு அச்சுறுத்தலை முன்னெடுப்பவர்கள் எவராயினும் அவர்கள் இந்த தேசத்தின் எதிரிகள் துரோகிகள் மட்டுமே.

இந்த தேசத்தின் வளர்ச்சி பாதுகாப்பு அமைதி ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க நினைக்கும் இது போன்ற நபர்கள் அவர்களின் உள்நாட்டு தொடர்புகள் வெளிநாட்டு தொடர்புகள் முழுவதுமாக கண்டறியப்பட்டு அவர்களும் அவர்களின் பின்புலமும் வேரோடு களையப்பட வேண்டும். அதுவே இந்த தேசத்தின் சாமானிய மக்களின் நம்பிக்கை பாதுகாப்பை உறுதி செய்யும். அதுவே இந்த தேசத்தின் இறையாண்மையை நிலை நிறுத்தும்.

நம் தேசத்திற்கு எதிரான சக்திகளை உயிரை பணயம் வைத்து உலகமெங்கும் தேடி தேடி வேட்டையாடும் நம் தேசத்தின் பாதுகாப்பு அமைப்புகள் உளவு கட்டமைப்புகள் நிச்சயம் இந்த பாதுகாப்பு அச்சுறுத்தலையும் கடந்து வருவார்கள். அவர்களின் கண்முன்னே இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலை வெற்றிகரமாக எதிர்கொண்டு இந்த தேசத்தையும் மக்களையும் நிச்சயம் காப்பார்கள் என்று தேசம் நம்புகிறது.

இந்த அச்சுறுத்தல்களின் பின்னணியில் இருப்பவர்கள் யாரும் நம் பாதுகாப்பு அமைப்புகளின் பிடியில் இருந்து தப்ப முடியாது. ஒருவேளை அவர்களின் தொடர்புகள் எல்லைக்கு அப்பால் இருந்தாலும் அவர்களும் நிச்சயம் மர்ம மரணத்திலிருந்து தப்ப முடியாது என்பது பாரதத்தின் சமகால வரலாறு சொல்லும் செய்தி. அவ்வகையில் கூடிய விரைவில் மர்ம நபர்களிடமிருந்து நல்ல செய்தி வரும் என்று பாரதத்தின் ஒவ்வொரு தேசியவாதியும் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.

ஜெய் ஹிந்த்

பஞ்சாங்கம் செப்.10 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari - 2026

இன்றைய பஞ்சாங்கம்  – செப்.10

ஶ்ரீராமஜயம் ஜய்ஸ்ரீராம் ஜய்ஸ்ரீராம்

||श्री:|| !!ஸ்ரீ:!!

श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

ஆவணி ~ 24 ( 10.9.2026 ) வியாழன் கிழமை.
வருடம் ~ பராபவ { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயணம் ~ தக்ஷிணாயணம்.
ருது ~ வர்ஷ ருது.
மாதம் ~ ஆவணி மாதம் { ஸிம்ஹ மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ காலை 10.56 AM வரை சதுர்தசி பின்னர் அமாவாஸ்யை.
நாள் ~ { குரு வாஸரம் } வியாழன் கிழமை.
நட்சத்திரம் ~ மாலை 3.16 PM வரை மகம் பின்னர் பூரம்.
யோகம் ~ ஸித்தம்.
கரணம் ~ சகுனி / சதுஷ்பாதம்.
அமிர்தாதியோகம்~ சுபயோகம்.
நல்ல நேரம் ~ காலை 10.30 ~ 11.30 AM & மாலை 5.00 ~ 6.00 PM.
ராகு காலம்~ மதியம் 1.30 ~ 3.00 PM.
எமகண்டம் ~ காலை 6.00 ~ 7.30 AM
குளிகை ~ காலை 9.00 ~ 10.30 AM.
சூரிய உதயம் ~ காலை 6.06 AM.
சந்திராஷ்டமம் ~ மகரம்.
சூலம் ~ தெற்கு.
பரிகாரம் ~ நல்லெண்ணெய்.
ஸ்ராத்ததிதி ~ அமாவாஸ்யை.
இன்று ~ ஸர்வ அமாவாஸ்யை.

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु!!
॥ॐ शान्तिः शान्तिः शान्तिः |!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!

dhinasari panchangam jyothidam - 2026
sarathambal

சுப ஓரைகள்: அவரவர் இருப்பிடத்தில் சூரிய உதயத்திற்கு தகுந்தவாறு நேரத்தை கூட்டி, குறைத்து கொள்ளவும்.

காலை :
சுக்கிர ஓரை 08.01 முதல் 09.00 வரை
புதன் ஓரை 09.01 முதல் 10.00 வரை

பகல் :
குரு ஓரை 12.01 முதல் 01.00 வரை
சுக்கிர ஓரை 03.01 முதல் 04.00 வரை
புதன் ஓரை 04.01 முதல் 05.00 வரை

இரவு :
குரு ஓரை 07.01 முதல் 08.00 வரை

ayurveda - 2026
astrology panchangam rasipalan dhinasari 2

இன்றைய ராசிபலன்கள்
10.9.2026

மேஷம்

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் இருந்து வந்த மந்த தன்மை குறையும். வியாபார பணிகளில் புதிய கூட்டாளிகள் இணைப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

அஸ்வினி : ஆசைகள் நிறைவேறும்.
பரணி : மந்ததன்மை குறையும்.
கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும்.


ரிஷபம்

உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்

கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.
ரோகிணி : தேடல்கள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும்.


மிதுனம்

செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சமூகப் பணிகளில் புதிய அனுபவங்கள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வழக்குகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீல நிறம்

மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.
திருவாதிரை : அனுபவங்கள் ஏற்படும்.
புனர்பூசம் : முயற்சிகள் கைகூடும்.


கடகம்

குடும்பத்தில் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான சிந்தனைகளால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளுடன் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆயில்யம் : வேறுபாடுகள் குறையும்.


சிம்மம்

வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பிடிவாதமின்றி சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். வெளி வட்டாரங்களில் அமைதியை கையாள்வது நல்லது. உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரம் : சிந்தித்துச் செயல்படவும்.
உத்திரம் : ஆதாயகரமான நாள்.


கன்னி

எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். சகோதர வகையில் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சற்று நிதானத்துடன் செயல்படவும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் இருந்து வந்த எதிர்ப்புகள் குறையும். இறை சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : சேமிப்புகள் குறையும்.
அஸ்தம் : நிதானத்துடன் செயல்படவும்.
சித்திரை : எதிர்ப்புகள் குறையும்.


துலாம்

வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளில் சாதகமான முடிவுகள் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். இழுபறியான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்

சித்திரை : நெருக்கடிகள் குறையும்.
சுவாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.
விசாகம் : மாற்றங்கள் ஏற்படும்.


விருச்சிகம்

சகோதர வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில்நுட்ப கருவிகள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். புதுவிதமான பயிற்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். கூட்டாளிகளால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலைகள் காணப்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அனுஷம் : எதிர்ப்புகள் விலகும்.
கேட்டை : ஆதாயகரமான நாள்.


தனுசு

எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். வீடு மாற்ற தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். உயர்கல்வியில் இருந்து வந்த தடைகள் குறையும். புதுமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்லவும். வியாபார பணிகளில் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : செலவுகள் உண்டாகும்.
பூராடம் : தடைகள் குறையும்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.


மகரம்

மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நெருக்கடியான சூழ்நிலை உருவாகும். குடும்பத்தினருடன் சிறு சிறு வேறுபாடுகள் தோன்றும். தொழில் நிமித்தமான புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும். நிலுவையில் இருந்து வந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். செலவுகளின் தன்மை அறிந்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

உத்திராடம் : வேறுபாடுகள் தோன்றும்.
திருவோணம் : இழுபறிகள் மறையும்.
அவிட்டம் : ஏற்ற இறக்கமான நாள்.


கும்பம்

பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். சுப காரிய முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
சதயம் : முயற்சிகள் கைகூடும்.
பூரட்டாதி : பொறுப்புக்கள் அதிகரிக்கும்.


மீனம்

பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றம் உண்டாகும். தடையாக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : வேறுபாடுகள் நீங்கும்.
உத்திரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
ரேவதி : முன்னேற்றமான நாள்.


இன்றைய நற் சிந்தனைகள்

விடாமுயற்சி

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill

நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
– Abraham Lincoln.

thiruvalluvar
thiruvalluvar

தினம் ஒரு திருக்குறள்

நாள்தோறும் திருக்குறள் படிப்போம், நடப்போம் அதன்படி, நல்லறம் வளர்ப்போம்

அதிகாரம் : படைச்செருக்கு

குறள் 775

விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

மு.வ உரை:
பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

இன்றைய சிந்தனைக்கு

”யானெனும் செருக்கு மனிதர்க்குப் பகை”

‘நமக்குத்தான் அனைத்தும் தெரியும்’ என்ற செருக்குதான் மனிதனின் முதல் பகைவன், “எம்மால்தான்” அனைத்துமே இயலும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியில்தான் முடியும்…

எந்த மனதில் ‘செருக்கு’ சூழ்ந்திருக்கிறதோ அங்கு சிக்கல்களும் இருக்கும். ’’நான்’’ அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே கொடுக்கும்…

மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது இந்த ‘’நான்’’ எனும் செருக்குதான்… !

பணியிடமாகட்டும், மாமியார் மருமகள் உறவுகளாகட்டும், கணவன் மனைவிடையே ஆகட்டும், இங்கெல்லாம் உறவுமுறை கெடுவதற்கு இந்த கேடான எண்ணங்களே காரணம்…!

நண்பர்களிடையே பிரிவு நிகழ்வதும் இந்த எண்ணங்களினால்தான்…!

இன்று செயல்படுவோம், நாளை செயல்படுவோமா…? என்று நமக்குத் தெரியாது. இப்படியிருக்க, நமக்கு இந்த செருக்கு மிகத் தேவைதானா…? என்று சற்று ஆலோசிக்க வேண்டும்…!

ஆம் நண்பர்களே…!

‘நான்’, ‘எனது’ என்பது அறியாமை…!
‘நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை…!!

?? நாம் வாழ்வில் முழுமையான நிலையினை அடைய விரும்பினால், ‘’நான்’’ எனும் செருக்கினை முழுமையாக அகற்றிவிடுவதே சாலச் சிறந்தது…!??

  • தினசரி.காம்

பஞ்சாங்கம் – செப்.19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

|श्री:| |ஸ்ரீ:|
ஸ்ரீராமஜயம்
श्री:श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

இன்றைய பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்  | 9.9.2026 | புதன்கிழமை

ஆவணி ~ 23 { 9.9.2026 } புதன் கிழமை
வருடம் ~ பராபவ வருடம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ தக்ஷிணாயணம்.
ருது ~ வர்ஷ ருது.
மாதம் ~ ஆவணி மாதம் { ஸிம்ஹ மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ பகல் 12.33 PM வரை த்ரயோதசி பின்னர் சதுர்தசி.
நாள்~ புதன் கிழமை { சௌம்ய வாஸரம் }
நக்ஷத்திரம் ~ மாலை 4.05 PM வரை ஆயில்யம் பின் மகம்.
யோகம் ~ சிவம்.
கரணம் ~ வணிஜை / பத்திரை.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
நல்லநேரம் ~ காலை 9.00 AM ~ 10.00 AM & மாலை 2.00 PM ~ 3.00 PM.
ராகுகாலம் ~ மதியம் 12.00 NOON ~ 1.30 PM.
எமகண்டம் ~ காலை 7.30 AM ~ 9.00 AM.
குளிகை ~ காலை 10.30 AM ~ மதியம் 12.00 NOON.
நல்ல நேரம் ~ 9.00 to 10.30 AM and 2.00 to 3.00 PM
சூரியஉதயம் ~ 6.06 AM.
சந்திராஷ்டமம் ~ மாலை 4.04 PM வரை தனுர் பின்னர் மகரம்.
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ சதுர்தசி.
இன்று ~

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
  !!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
  !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

DHIN NEW LOGO - 2026

ஹோரை புதன்கிழமை

காலை

6-7.புதன். சுபம்
7-8.சந்திரன்.சுபம்
8-9. சனி.. அசுபம்
9-10.குரு. சுபம்
10-11. செவ்வா.அசுபம்
11-12. சூரியன்.அசுபம்

பிற்பகல்

12-1. சுக்கிரன்.சுபம்
1-2. புதன். சுபம்
2-3. சந்திரன்.சுபம்

மாலை
3-4. சனி..அசுபம்
4-5. குரு. சுபம்
5-6. செவ்வா.அசுபம்
6-7. சூரியன். அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

dhinasari panchangam jyothidam - 2026
thiruvalluvar deivapulavar

இன்றைய (9-9-2026) ராசிபலன்கள்


மேஷம்

குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல்கள் அதிகரிக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்கள் உண்டாகும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல்கள் உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.
பரணி : புரிதல்கள் அதிகரிக்கும்.
கிருத்திகை : தேடல்கள் பிறக்கும்.


ரிஷபம்

புதிய வியாபாரம் தொடர்பான எண்ணம் நிறைவேறும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். மக்கள் தொடர்புத் துறைகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். எழுத்துக்களில் கற்பனை நயம் அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

கிருத்திகை : நெருக்கடிகள் குறையும்.
ரோகிணி : மகிழ்ச்சியான நாள்.
மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.


மிதுனம்

பிற மொழி பேசும் மக்களின் அறிமுகமும் ஆதரவும் ஏற்படும். வாக்கு திறமை மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். நண்பர்கள் மூலம் தொழில் சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதுமையான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முதலீடு தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.
திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


கடகம்

சகோதரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். புதிய கூட்டாளிகளை இணைப்பது பற்றிய சிந்தனைகள் ஏற்படும். விவேகத்துடன் செயல்பட்டால் மதிப்பும் பாராட்டுகளும் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பழக்க வழக்கங்களில் சில மாற்றம் உண்டாகும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் அறிமுகம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

புனர்பூசம் : ஆதரவுகள் கிடைக்கும்.
பூசம் : மதிப்புகள் கிடைக்கும்.
ஆயில்யம் : அறிமுகம் ஏற்படும்.


சிம்மம்

மாமன் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். உணவு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் தடைகள் விலகும். பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத மாற்றங்கள் நேரிடும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். ரகசியமான சில ஆய்வுகள் தெளிவுகளை உருவாக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மகம் : ஆதாயம் உண்டாகும்.
பூரம் : முன்னேற்றமான நாள்.
உத்திரம் : தெளிவுகள் பிறக்கும்.


கன்னி

குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்களும் மேம்படும். தனவரவுகளில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு சிந்தனைத் திறன் மேம்படும். மனதை உருத்திய கவலைகள் குறையும். உத்தியோகப் பணியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : இழுபறிகள் குறையும்.
சித்திரை : கவலைகள் குறையும்.


துலாம்

சகோதரரால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களின் சந்திப்புகள் ஏற்படும். பாதியில் நின்ற பணியை செய்து முடிப்பீர்கள். திடீர் வரவுகள் மூலம் கையிருப்புகள் மேம்படும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். பணவரவு திருப்தியை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : பிரச்சனைகள் குறையும்.
சுவாதி : கையிருப்புகள் மேம்படும்.
விசாகம் : திருப்தியான நாள்.


விருச்சிகம்

தொழில் நிமித்தமான பயணங்கள் சாதகமாக அமையும். தெய்வ சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகைக்கான வாய்ப்புகள் உருவாகும். தந்தை வழி உறவுகளின் ஆதரவுகள் கிடைக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். சாமர்த்தியமாக செயல்பட்டு எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : வாய்ப்புகள் உருவாகும்.
கேட்டை : வெற்றிகரமான நாள்.


தனுசு

எதிலும் ஆர்வம் இன்றி செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களை குறைப்பது நல்லது. புதிய நபர்களிடம் குடும்ப விவகாரங்கள் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மூலம் : விட்டுக் கொடுத்து செல்லவும்.
பூராடம் : வாதங்களை குறைக்கவும்.
உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.


மகரம்

மனதில் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வர்த்தக செயல்பாடுகளில் லாபங்கள் மேம்படும். வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

உத்திராடம் : அனுகூலமான நாள்.
திருவோணம் : லாபங்கள் மேம்படும்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


கும்பம்

எதிர்பாராத வரவுகள் உண்டாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய வேலை நிமித்தமான எண்ணங்கள் கைகூடும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் உருவாகும். உடன் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். நிலுவையில் இருந்த பொருட்கள் விற்பனையாகும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

அவிட்டம் : வரவுகள் உண்டாகும்.
சதயம் : சந்திப்புகள் உருவாகும்.
பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.


மீனம்

புதிய முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். கற்பனை சார்ந்த துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். நம்பிக்கையானவர்களைப் பற்றிய புரிதல்கள் மேம்படும். உத்தியோகத்தில் பொறுப்பும் அலைச்சலும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

பூரட்டாதி : சாதகமான நாள்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரேவதி : புரிதல்கள் மேம்படும்.


தினம் ஒரு திருக்குறள்

thiruvalluvar
thiruvalluvar

தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 246

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.

இன்றைய பொன்மொழி

ராஜா பர்த்ரு ஹரியின் சுபாஷிதம்

மாதா சமம் நாஸ்தி சரீர போஷணம்
சிந்தா சமம் நாஸ்தி சரீர சோஷணம்
பார்யா சமம் நாஸ்தி சரீர தோஷணம்
வித்யா சமம் நாஸ்தி சரீர பூஷணம்

ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை
கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை.
மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை.
கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.

தினசரி. காம்

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 7

பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.

விளக்கவுரை :

சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?

இன்றைய சிந்தனைக்கு…

பயன்படுத்தாத திறமை, தன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும், உனக்குள் இருக்கும் திறமையை, பயன்படுத்து!
உன்னால் முடிந்ததை, சிறப்பாக செய்தால், அது திறமை, முடியாததை சிறப்பாக செய்தால், அதுவே தன்னம்பிக்கை!!
விழுந்த இலைகளுக்காக, எந்த மரமும், விழுந்து, விழுந்து அழுவதில்லை, புதிய தளிர்களை தந்து, மீண்டும், மீண்டும், தன்னம்பிக்கையோடு தலையாட்டும்!!!