Home Blog

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ambedkar - 2026
#image_title

— சாந்தி ஸ்ரீ தூளிபுடி பண்டிட்
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

பொதுவாக சமூக மாற்றத்தின் வரலாறு இயக்கங்களை முன்னெடுத்தவர்களின் வாழ்க்கையோடு இணைந்து, அதன் மூலம் கிடைக்கும் அதிகார பீடத்தில் அமர்ந்து எழுதப்படுகிறது. இது புரிந்து கொள்ளக் கூடியதே. அதேவேளையில் இது சில வரம்புகளையும் கொண்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த வரலாற்றை உருவாக்கியவர்களின் வாழ்க்கை சூழ்நிலையை விவரித்தால் அது நீண்டதாகிவிடும் என்பதால் தவிர்த்து விடுகின்றனர்.

சுதந்திர இந்தியாவின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவரான பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு அப்படிப்பட்ட ஒன்று. அவரது அரசியல், அறிவார்ந்த பங்களிப்புகள் பற்றி எழுதப்பட்டுள்ளன. அவை முக்கியமானவை , மையமானவைதான். அவரது பங்களிப்பை தொடர்ந்து, நீட்டித்து செய்வதற்காக பங்காற்றியவர்களின் வாழ்க்கையை பற்றி மிகக் குறைவாகவே கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ரமாபாய் அம்பேத்கர், சவிதா அம்பேத்கரின் வாழ்க்கையை கூர்ந்து நோக்குவது பாபாசாகேப் அம்பேத்கர் உருவாக்கிய சமூக மாற்றத்தின் வரலாற்று உண்மையில் எப்படி வாழ்ந்து, முன்னோக்கி வளர்த்தெடுக்கப்பட்டது என்பதை முழுமையாக புரிந்து கொள்ள தேவையானது.

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார். சிறு வயதிலேயே தனது பெற்றோரை இழந்து பம்பாய்க்கு போக வேண்டி இருந்தது. அங்கு வாழ்வதற்கே சிரமப்பட வேண்டியிருந்தது. பல சமரசங்களை செய்ய வேண்டியிருந்தது. அங்கு முறையான கல்வி கிடைக்கவில்லை. எந்த அமைப்பும் அவருக்கு ஆதரவு கரம் நீட்டவில்லை. முன்னேற வழி இல்லாமல் இருந்தது. 1906 இல் அவருக்கு அம்பேத்கருடன் திருமணம் நடந்தது. அத்துடன் குடும்ப பொறுப்பும் வந்தது. அந்த குடும்பமோ பல ஆண்டுகள் பொருளாதார ரீதியாக பலவீனமாக இருந்தது.

திருமணத்துக்குப் பிறகு நிலையான, உறுதியான சூழ்நிலை ஏற்படுவதற்கு மாறாக நிலையற்ற நிலையே நீடித்தது. அம்பேத்கர் மேற்படிப்புக்காக வெளிநாட்டுக்கு சென்ற போது ரமாபாய் பம்பாயிலேயே இருந்தார். கடுமையான நெருக்கடியில் வீட்டுச் சூழல் இருந்தது. நிதி ஆதாரம் பலவீனமாகவும் நிச்சயமற்றும் இருந்தது. உளரீதியான அழுத்தமும் அதற்கு இணையாக இருந்தது. அவருக்கு பிறந்த ஐந்து குழந்தைகளில் நான்கு இறந்து விட்டன. இது அவரது தனிப்பட்ட துயரத்தை மட்டும் காட்டவில்லை, பலவீனமான சூழலையும் காட்டுகிறது. அவ்வப்போது வந்த கஷ்டங்கள் அல்ல தொடர்ச்சியாக நிலவிய அழுத்தம் அவரது தினசரி வாழ்க்கையை தீர்மானித்தது.

இதனால் ரமாபாயின் பங்களிப்பை வழக்கமான ஆதரவு நிலையோடு ஒப்பிட முடியாது. இடையூறு அல்லது குறுக்கீடு எப்போது வேண்டுமானாலும் ஏற்படும் நிலையில் அவர் சூழ்நிலையை தொடர்ந்து ஒரே மாதிரியாக வைத்திருந்தார். குறைவான பண வரவில் குடும்பத்தை நடத்துவது, மீண்டும் மீண்டும் வரும் அதிர்ச்சிகளை தாங்கிக் கொள்வது எல்லாம் கடுமையான கட்டுப்பாட்டையும் நீண்ட கால கண்ணோட்டத்துடன் பொறுமையாக அவற்றை தாண்டி தொடர்வதை அவரது பண்பாக்கியது. பாபா சாகேப்பின் கல்வியின் தேவையைப் பற்றி அவருக்கு விரிவான புரிதல் இருந்ததை அவர் வாழ்க்கையில் பார்க்கிறோம். அம்பேத்கர் அவருடன் இல்லாததை பற்றி கேட்கும் போதெல்லாம் அது தேவை என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி கூறியுள்ளார். அன்றாட குடும்ப விவகாரங்களை விட மேலானது அவரது அறிவார்ந்த பணி என்ற புரிதல் அவருக்கு இருந்தது.

எதிர்கால கண்ணோட்டத்தோடு பணி புரிவது என்பது கல்வி கற்றல் மூலமாக வராமல் அனுபவத்தினால் அவருக்கு ஏற்பட்டது. பலவீனமான சூழ்நிலையில் சிதறி விடாமல் தொடர்ந்து தக்க வைத்திருந்த அவரது திறன், அவரது பங்களிப்பை பொருள் மீக்கதாக்குகிறது. இந்த வகையான உழைப்பு, பங்களிப்பு அரிதாகவே பொருட்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது பாட நூல்களின் இல்லை. அமைப்புகளால் சொல்லிக் கொடுக்கப்படவில்லை. ஆனால் இதை புறம் தள்ள முடியாது. இது போன்ற தொடர்ச்சியான ஆதரவு இல்லை என்றால் நீண்ட கால அறிவார்ந்த செயல்பாடுகளை செய்வது கடினம். பொறுமையுடன் கஷ்டங்களை தாங்கி கொள்ளுதல், ஒருங்கிணைத்தல், எதிர்கால நோக்கம் பற்றிய தெளிவு ஆகியவற்றை ரமாபாயின் வாழ்க்கை வெளிப்படுத்துகிறது. இவை வரலாற்று ரீதியான மிகப்பெரிய சாதனைகளுக்கு ஏதுவாக அமைந்தன என்றால் அது மிகையல்ல.

சவிதா அம்பேத்கரின் பாதையோ முற்றிலும் வேறான சமூக சூழலில் நடை போட்டு அதே சமூக வரலாற்றில் முக்கியமான சந்திப்பில் இடையிட்டு சிறப்பானதொரு பங்களிப்பை ஆற்றியது. அவர் 1909 இல் படித்த, முற்போக்கான மனப்பான்மை கொண்ட குடும்பத்தில் பிறந்தார். பெண்களுக்கு கல்வியறிவு குறைவாக இருந்த அந்த காலத்திலேயே அவர் உயர்கல்வி பெற்றார். மருத்துவரான அவர் பாபா சாகேப் அம்பேத்கரின் வாழ்க்கையில் 1940 ல் இணைகிறார். அப்போது அம்பேத்கரின் செயல்பாடுகள் தீவிரமாகவும் ஓய்விற்கு நேரம் இல்லாமலும் இருந்தன. அது அவரது உடல் நிலையை பாதித்தது.

பாபா சாகேப்பின் அறிபார்ந்த வெளிப்பாடுகளும் அவரது உடல் ஆரோக்கியமும் அப்போது இக்கட்டான சூழ்நிலையில் இருந்தன. நீரிழிவு, மன அழுத்தம் உட்பட பல நீண்ட கால நோய்களால் அவர் எதிர்பார்த்தபடி முழுமையாகவும் தொடர்ந்தும் செயல்பட முடியாத நிலையில் இருந்தார். இந்த சூழலில் தான் சவிதாவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது.

அவரது இணைவு ஆரோக்கியத்தை பராமரித்தல் என்ற பொதுவான எல்லைக்கும் மேலாக இருந்து. சீரான உணவு, உரிய மருந்துகள், தினசரி வழமைகளை உறுதியாக பின்பற்ற வைப்பது என்று திட்டமிட்ட நிர்வாகத்தை அம்பேத்கரின் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தினார். அத்துடன் டாக்டர் அம்பேத்கரின் அறிவார்ந்த சக பயணியாகவும் அவரது பிற்கால எழுத்துக்களை ஆரம்ப நிலையிலே படித்து கருத்திட்டு, மேம்படுத்தினார். அவரது கல்வித் தகுதியானது டாக்டர் அம்பேத்கரின் ஆய்வு பணிகளை ஒருங்கிணைக்கவும், ஆய்வேடுகளை பிழையின்றி செப்பனிடவும், அவரது படைப்புகள் இறுதி வடிவம் பெறும் போது அவரது கூட்டாளியாகவும் ஆக்கின. இந்த வகையில் டாக்டர் அம்பேத்கரின் பணி தொடர்ந்து நடைபெறுவதற்கு சவிதாவின் பங்களிப்பு நேரடியாகவும் முக்கியமானதாகவும் இருந்தன.

டாக்டர் அம்பேத்கரின் உடல் ஆரோக்கியத்தை முடிந்த வரை நல்ல நிலையில் பராமரித்தார். சிந்திப்பது, எழுதுவது, அரசியல் செயல்பாடுகள் என்று மிகவும் உழைப்பை கோரும் நிலையிலும் அவரது ஆரோக்கியத்தை பாதுகாத்தார். அவரது வாழ்க்கையின் இறுதி காலத்தில் புத்த சமய தத்துவம் குறித்தும், அவரது பிரதான படைப்புகளையும் எழுதினார். சவிதாவின் பங்களிப்பு அவரது அறிவார்ந்த செயல்பாடுகளை, எழுத்துக்களை முழுமை பெற உதவின என்ற வகையில் புரிந்து கொள்ள வேண்டும்.

1956 இல் டாக்டர் அம்பேத்கர் புத்த சமயம் தழுவிய போது அவருடன் சவிதா இருந்தார் . இது அவருடைய சமூக, கருத்தியல் ரீதியான ஈடுபாட்டை வெளிப்படுத்தியது. அம்பேத்கரின் மரணத்துக்கு பிறகு சவிதாவின் பங்களிப்பு சரியாக அங்கீகரிக்கப்படவில்லை. சந்தேகத்துடன் பார்க்கப்பட்டு அம்பேத்கர் இயக்கத்தில் தள்ளி வைக்கப்பட்டார். இத்தனைக்கும் அம்பேத்கரின் எழுத்து, அறிவு பணியில் அவர் முக்கிய பங்காற்றியது தெரிந்த நிலையில் நடந்தன. பின்னர் ஏற்படுத்தப்பட்ட விசாரணை குழு அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களிலிருந்து அவரை விடுவித்தது. ஆனாலும் சமூக அங்கீகாரம் உடனடியாக கிடைக்கவில்லை. அவர் எந்த வரலாற்றை நிலை பெற உதவினாரோ அந்த வரலாற்றின் விளிம்புகளில் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டார்.

ரமாபாய், சவிதாவை பற்றி ஒருங்கே படிக்கும் போது சமூக மாற்றத்துக்கு பெண்களின் பங்களிப்பை பற்றிய சீரிய புரிதல் ஏற்படுகிறது. அவர்களின் வாழ்க்கை ஒரே மாதிரியானவை அல்ல. ரமாபாய் ஏழ்மையில் வாழ்ந்தார் . கல்வியறிவு பெற முடியாத சூழ்நிலையில் இருந்தார் . சவிதா முற்றிலும் வேறான சூழலில் இருந்து வந்தவர். அறிவார்ந்த இணையாக, மருத்துவ அறிவுடன் உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பவராக, தேர்ந்த அறிவுடன் தெளிவான அணுகுமுறை கொண்டிருந்தார் . வேறுபாடுகள் வெளிப்படையாக தெரியும்படி இருந்தபோதிலும் இருவரும் அம்பேத்கரின் பணியில், அதன் தொடர்ச்சியில், முக்கியமான பங்களிப்பை நிகழ்த்தியுள்ளனர்.

இது, இவர்களது பங்களிப்பை பற்றிய வரையறையை, அங்கீகாரத்தை மறு வரையறை செய்ய கோருகின்றன. வெளிப்படையாக தெரிந்த, எழுதப்பட்ட, முறையான அதிகாரத்துடன் வந்தவை மட்டுமே வரலாற்று நிகழ்வுகளை ஏற்படுத்திவை என்றில்லாமல் இவர்கள் போன்றவர்களின் பங்களிப்பும் வரலாற்றை நிகழ்த்தியுள்ளன. தொடர்ச்சியை தக்க வைப்பது, கஷ்டங்களை, சிரமங்களை திறம்பட எதிர்கொண்டு நிர்வாகிப்பது ஆகியவை நீண்ட கால நோக்குடன் பணி செய்ய உதவுபவை, முக்கியமானவை என்றாலும் அவையின் உரிய கவனமும் அங்கீகாரமும் பெறுவதில்லை. ரமாபாயின், சவிதாவின் வாழ்க்கைகள், இதுபோன்ற உழைப்புகள் எதிர்பாராமல் நிகழ்ந்தவையோ, இரண்டாம் பட்சமானவையோ அல்ல.

இவர்களது வாழ்க்கை வரலாறு திறந்த மனதுடன் அணுக வேண்டியவை . தனிப்பட்ட விவரிப்புகள், சமூக நினைவு, சமூக அறிவு ஆகியவற்றை அதிகாரப்பூர்வமான ஆவணங்களில் பதிவாவதில்லை. இந்திய அறிவு மரபு இந்த விஷயத்தில் உதவிகரமான வரையறையை முன் வைக்கிறது. அது வாழ்க்கை அனுபவங்களையும் அது தொடர்பான உழைப்பையும் உணர்வுகளையும் உண்மையான ஆதாரமாகக் கொண்டு புரிந்து கொள்ள முனைகிறது. இது வரலாற்றை நூல்கள் , அமைப்புகள் மூலம் மட்டுமின்றி வாழ்க்கை, அதன் மீது ஏற்பட்ட அழுத்தங்கள், தாக்கங்கள். காலவோட்டத்தை மீறி நின்ற அதன் நோக்கம் ஆகியவற்றின் மூலமாக தெரிந்து கொள்ள செய்கிறது.

ரமாபாய் , சவிதாவை முன் வைப்பது பாபா சாகேப் அம்பேத்கரின் ஆளுமையை, மரபை குறைப்பதாகாது. மாறாக அவரை முழுமையாக புரிந்து கொள்ள உதவுபவை. இரு பெண்மணிகளின் வாழ்க்கையும் அம்பேத்கர் வாழ்க்கையின் நீட்சி அல்ல. இருவரது வாழ்க்கையும் தனித்துவமானவை. அவர்கள் பிறந்து வாழ்ந்த சூழ்நிலையில் உருவானவை . அவர்கள் செய்த முடிவுகளாலும் அவர்களது வலிமையினாலும் வடிவம் பெற்றவை. அதேவேளையில், இது போன்ற உழைப்பை, பங்களிப்பை கோரும் பெரிய வரலாற்று நிகழ்வுடன் ஆழமாக பிணைந்தவை.

எனவே, சமூக மாற்றமானது வெளிப்படையாக தெரிந்த, முறையாக பதிவு செய்யப் பட்டவற்றிக்கும் மேலான அம்சங்களை தெரிந்து கொள்ளும் போது மட்டுமே முழுமை பெறுகிறது. அமைதியாக, இடையறாமல் தொடர்ந்து செய்யப்பட்ட பணிகள் அங்கீகரிக்க படாமல் போகக் கூடாது. அந்த வகையில் ரமாபாய் , சவிதா அம்பேத்கர் இருவரும் வரலாற்றின் விளிம்பில் நிற்கவில்லை. விளிம்பிலிருந்து விலகி மையத்தில் உறுதியாக நிலை பெற்றுள்ளார்கள்.

நன்றி: சண்டே கார்டியன்


கட்டுரையாளர் தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளார்.

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

china formed new county near afghan border pok - 2026

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

பண்டைய பட்டுப்பாதையின் வரலாற்று மையமான காஷ்கர், சீனாவுக்கும், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கும் இடையே ஒரு முக்கிய இணைப்பாகச் செயல்படுகிறது. இது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகச் செல்லும் 60 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் (CPEC) தொடக்கப் புள்ளியாகவும் உள்ளது; இத்திட்டத்துக்கு இந்தியா ஏற்கெனவே கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளது.

உய்குர் பிரிவினைவாதப் போராளிகளைத் தடுப்பதற்காக, சீனா தனது பதற்றமான சின்ஜியாங் மாகாணத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் ஒரு புதிய மாவட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த நடவடிக்கை, குறுகிய வக்கான் வழித்தடத்தில் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு முயற்சியையும் உள்ளடக்கியுள்ளது.

சென்லிங் எனப் பெயரிடப்பட்ட இந்தப் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம், காரகோரம் மலைத்தொடருக்கு அருகிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு அருகிலும் அமைந்துள்ளது; இது அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. பெரும்பாலும் முஸ்லிம் உய்குர் மக்கள் ஆதிக்கம் செலுத்தும் சின்ஜியாங் பிராந்தியத்தில், ஓராண்டுக்கும் சற்று அதிகமான காலத்தில் சீனாவால் நிறுவப்பட்ட மூன்றாவது புதிய மாவட்டம் இது.

ஹியான் மற்றும் ஹெகாங் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கு இந்தியா முன்னதாகவே எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்தப் பகுதிகளின் சில பாகங்கள் நமது லடாக் யூனியன் பிரதேசத்திற்குள் வருவதாக இந்தியா வாதிட்டது. ஹியான், சர்ச்சைக்குரிய சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரப் பகுதியான அக்சாய் சின்னின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை உள்ளடக்கியுள்ளது. இப்பகுதியை சீன-இந்தியப் போரிலிருந்து சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதுடன், இது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தின் முக்கிய மையமாகவும் நீடிக்கிறது.

‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ பத்திரிகை செய்தியின்படி, சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்திய அரசு மார்ச் 26 அன்று சென்லிங் நிறுவப்பட்டதை அறிவித்தது; இருப்பினும், அதன் நிர்வாகப் பிரிவுகள் மற்றும் நிலையான எல்லைகள் குறித்த முழுமையான விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.

பண்டைய பட்டுப்பாதையில் அமைந்துள்ள ஒரு வரலாற்று மையமான காஷ்கர், சீனாவுக்கும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கும் இடையே ஒரு முக்கிய இணைப்பாக விளங்குகிறது. இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகச் செல்லும் 60 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் (CPEC) தொடக்கப் புள்ளியாகவும் உள்ளது. இந்த வழித்தடத்திற்கு இந்தியாவிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. சென்லிங் நிறுவப்பட்டது, எல்லை மேலாண்மை மற்றும் பாதுகாப்பில் பெய்ஜிங்கின் கவனம் அதிகரித்து வருவதை இது எடுத்துக்காட்டுவதாகக் கூறப்படுகிறது.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

”நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான, அரசியல் உள்நோக்கம் கொண்ட, தமிழக விவசாயிகளை திசைதிருப்பும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு திரிபு என்பது தெளிவாகிறது.

தமிழகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்ட தகவல், மாநில அரசுகள் வழங்கும் ஊக்கத்தொகை கொள்கைகளை தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ஓர் ஆலோசனையே ஆகும்.

மத்திய அரசின் இந்த ஆலோசனை, பயிர் பல்வகைப்படுத்துதலை (Crop Diversification) ஊக்குவித்தல் மற்றும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றில் சுயசார்பு அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் தொலைநோக்குப் பார்வையாகும். இதன் மூலம், உள்நாட்டுத் தேவை அதிகமாக உள்ள பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து, அதிக லாபத்தைப் பெற வழிவகை செய்யப்படும்.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) மேல் ஊக்கத்தொகை அல்லது போனஸ் அறிவிப்பது என்பது எப்போதும் மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது. அந்த அதிகாரத்தை யாரும் பறிக்கவில்லை.

முதல்வர் ஸ்டாலின், தேச நலனில் அக்கறை கொண்டு ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவதற்குப் பதிலாக, தங்களின் குறுகிய சுயநல அரசியல் ஆதாயத்திற்காகத் திட்டமிட்டுத் திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

அரசியலமைப்புச் சட்டப்படி உயர் பதவியில் இருக்கும் ஒரு முதலமைச்சருக்கு இத்தகைய நடத்தை அழகல்ல. தமிழக விவசாயிகள் தங்கள் கவலைகளையே வாக்குகளுக்காக ஆயுதமாக்கும் அரசை அல்ல, மாறாக தங்கள் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக உழைக்கும் அரசையே எதிர்பார்க்கிறார்கள்.

எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஒவ்வொரு விவசாயிக்காகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசு சோர்வின்றித் தொடர்ந்து பணியாற்றும். இத்தகைய திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பிரச்சனைகளால் நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.”

– நிர்மலா சீதாராமன், மத்திய நிதி அமைச்சர்

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan
astrology panchangam rasipalan

||श्री:|| 

ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்

இன்றைய பஞ்சாங்கம் – ஏப்ரல் 13

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

பங்குனி ~ 30 ( 13.4.2026 ) திங்கள் கிழமை
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம்~ பங்குனி மாஸம் { மீன மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 10.27 pm வரை ஏகாதசி பின் துவாதசி
நாள் ~ {ஸோம வாஸரம்} திங்கள் கிழமை.
நட்சத்திரம் ~ 1.25 pm வரை அவிட்டம் பின் சதயம்
யோகம் ~ சுபம்
கரணம் ~ பவம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00.
எமகண்டம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.to 10.30am 5to.5.30 pm
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00.
சூரியஉதயம் ~ காலை 6.08
சந்திராஷ்டமம் ~ கடகம்
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~ ஏகாதசி
இன்று ~ சர்வ ஏகாதசி

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥

!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திங்கள் ஓரைகளின் காலம்

காலை

6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்

பிற்பகல்

12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்

மாலை

3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

இன்றைய (13-4-2026) ராசி பலன்கள்


மேஷம்

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் மேம்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மேன்மை பெருகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

அஸ்வினி : முன்னேற்றம் ஏற்படும்.
பரணி : துரிதம் மேம்படும்.
கிருத்திகை : ஒத்துழைப்புகள் ஏற்படும்.


ரிஷபம்

அனுபவ முடிவுகளால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரம் மேம்படும். உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். வாகன வசதிகள் அதிகரிக்கும். செலவுகளை குறைக்க திட்டமிட்டு செயல்படுவீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பெருமை சேரும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.
ரோகிணி : வசதிகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


மிதுனம்

கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். கைமாற்றாக கொடுத்து இருந்த பணங்கள் கிடைக்கும். அரசு பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். சமூக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் காணப்படும். விற்பனை பணிகளில் போட்டிகள் அதிகரிக்கும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்

மிருகசீரிஷம் : நிதானத்துடன் செயல்படவும்.
திருவாதிரை : அலைச்சல்கள் ஏற்படும்.
புனர்பூசம் : போட்டிகள் அதிகரிக்கும்.


கடகம்

மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும். சந்தேக உணர்வுகளால் மகிழ்ச்சி இன்மை ஏற்படும். வியாபாரத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

புனர்பூசம் : குழப்பங்கள் மறையும்.
பூசம் : ஆர்வமின்மையான நாள்.
ஆயில்யம் : பேச்சுக்களில் கவனம்.


சிம்மம்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சகோதர வகையில் ஒத்துழைப்பு ஏற்படும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சிந்தனைகளில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். கூட்டாளிகளின் ஆதரவுகள் மூலம் முதலீடுகள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

மகம் : பிரச்சனைகள் குறையும்.
பூரம் : தெளிவு பிறக்கும்.
உத்திரம் : அறிமுகம் கிடைக்கும்.


கன்னி

வியாபார விஷயங்களில் நிதானத்துடன் முடிவெடுப்பது நல்லது. குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் இருந்தாலும் லாபங்களும் அனுபவமும் கிடைக்கும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பாராட்டு குவியும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

உத்திரம் : நிதானத்துடன் செயல்படவும்.
அஸ்தம் : அனுபவம் கிடைக்கும்.
சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும்.


துலாம்

பூர்வீக சொத்துக்களில் சில மாற்றம் செய்வீர்கள். மற்றவர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளில் தெளிவான முடிவுகள் பிறக்கும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபார ரீதியான புதிய முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். பிரீதி மலரும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : ஆதாயம் ஏற்படும்.
சுவாதி : புரிதல் உண்டாகும்.
விசாகம் : சிந்தித்து செயல்படவும்.


விருச்சிகம்

எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவீர்கள். வித்தியாசமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். பணி இடங்களில் மாறுதல் ஏற்படும். பழைய சொத்துக்களை மாற்றி அமைப்பீர்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : குழப்பங்கள் நீங்கும்.
அனுஷம் : முன்னேற்றம் ஏற்படும்.
கேட்டை : ஆர்வம் உண்டாகும்.


தனுசு

பேச்சுக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். சக ஊழியர்களால் நினைத்தது நிறைவேறும். முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். போட்டி வெல்லும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
பூராடம் : தீர்வுகள் கிடைக்கும்.
உத்திராடம் : ஆர்வம் ஏற்படும்.


மகரம்

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குழந்தைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபார நெருக்கடிகள் விலகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் காணப்படும். உத்தியோகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : அனுகூலம் உண்டாகும்.
திருவோணம் : நெருக்கடிகள் விலகும்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


கும்பம்

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயங்களில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். சாதனை புரியும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : புரிதல்கள் அதிகரிக்கும்.
சதயம் : வாதங்களை தவிர்க்கவும்.
பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.


மீனம்

வியாபார பணிகளில் கனிவான பேச்சுகள் நன்மையை தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும். பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் ஏற்படும். ஆக்கம் தரும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

பூரட்டாதி : விழிப்புணர்வு வேண்டும்.
உத்திரட்டாதி : எதிர்ப்புகளை அறிவீர்கள்.
ரேவதி : புதுமையான நாள்.



thiruvalluvar 1 - 2026

தினம் ஒரு திருக்குறள்

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)

– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.

மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.

தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 6

ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.

விளக்கவுரை

ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.

இன்றைய சிந்தனைக்கு…

காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!

நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!

தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

isreal iran war - 2026

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது, நடுவே சென்று அவர்களது சண்டையை விலக்கி விட்டால், ஒரு நண்பர் நமக்குக் கிடைப்பார். அதே நேரம் நமக்கு நன்கு அறிமுகமான இரண்டு நண்பர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, அவர்களை விலக்கி விட முயன்றால், அந்த இருவரில் ஒருவர் நமக்கு எதிரி ஆவார் என்பது அந்தப் பழமொழியின் சாரம்.

பாரதம் இந்தப் பழமொழியின் உள் அர்த்தத்தை நன்றாகப் புரிந்து கொண்டிருப்பதால்தான் ஈரான் இஸ்ரேல்/அமெரிக்கா நடுவே நடக்கும் சண்டையை தீர்ப்பதற்கு, பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று தானாக முன்வரவில்லை. காரணம் ஈரானும் இஸ்ரேல் தரப்பும் நமக்கு நட்பு நாடுகளாகவே இருக்கின்றன.  சமரசம் என்று பேச வரும் போது ஏதாவது ஒரு தரப்புக்கு அவர்கள் நிலையில் இருந்து சற்று பின் வாங்கி பாதகமாகவே இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். அது அந்த நட்புறவை கட்டாயப்படுத்தி இணங்கச் செய்வதாகவே முடியும். அதனால் ஏற்படும் காயம் உள்ளுக்குள் விரோதமாக வளர்ந்து நட்புறவை முறிக்கவும் செய்யும்.

தன் நாட்டு நலனை விரும்பும் ஒரு தலைவன், இரு தரப்புக்கும் நடுவில் அறிவுரை சொல்வதோடு நிறுத்திக் கொள்வான். அதைத்தான் பிரதமர் மோடி செய்திருக்கிறார்! அந்த அளவில் அவருடைய செயல்பாடு பெரிதும் பாராட்டுக்கு உரியதே!

இங்கே பாகிஸ்தானின் செயல்பாட்டை நாம் பார்க்க வேண்டும்.

அமெரிக்காவின் அடிமையாக, அமெரிக்கா சொல்வதைச் செய்யும் அடியாளாக செயல்படும் பாகிஸ்தானின் இயல்பு, ஈரானுக்குத் தெரியாமல் இல்லை! அதை பாகிஸ்தானே வெளிச்சம்போட்டுக் காட்டிவிட்டது. யுஎஸ் என்ன போஸ்ட் போட வேண்டும் என சொல்கிறதோ அந்த ட்ராஃப்ட்டை அப்படியே அடித்தல் திருத்தல் இல்லாமல் தன் அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பாகிஸ்தான் பிரதமர் பகிர்கிறார். அதைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு, மண்டை மேல உள்ள கொண்டையை மறைங்கடா என்று அமெரிக்கா சொன்ன பிறகு அந்த எக்ஸ் தள போஸ்டை நீக்கிவிட்டு, திருத்தப்பட்ட போஸ்ட்டை வெளியிடுகிறது பாகிஸ்தான்.

இப்படிப்பட்ட அமெரிக்க அடிமை பாகிஸ்தான், தங்கள் தரப்புக்கு நியாயமாக நடந்து கொள்ளுமா என்பதை ஈரான் பலமுறை யோசித்துப் பார்த்திருக்காதா என்ன? மேலும் சன்னி முஸ்லிம் நாடாக உள்ள பாகிஸ்தான் ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தும் அக்கிரமங்களை, ஷியா முஸ்லிம் நாடான ஈரான் அறியாதா என்ன?

இன்னொருபுறம், இஸ்ரேலியர்களை சீண்டி, யூதர்களை இன அழிப்பு செய்வதே முஸ்லிம் நாடுகளின் கொள்கை என்பதுபோல் போஸ்ட் போட்டு மேலும் கடுப்பேற்றினார் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர். அதன் விளைவு, பாகிஸ்தான் நம்புவதற்கு உகந்த நாடல்ல என்று இஸ்ரேல் பகிரங்கமாக அறிவித்தது. இப்படிப்பட்ட சூழலில் பாகிஸ்தான் முன்னெடுப்பதாக நடித்துக் கொண்டிருக்கும் அமைதிப் பேச்சு எப்படி வெற்றி பெறும்?!

இந்தப் பின்னணியை பாரதம் அறியாதா என்ன? அதனால் தான் பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக, தன் வேலையைப் பார்த்துக் கொண்டு அமைதியாகக் கடந்து செல்கிறார். அதே நேரம், ஈரான் ஒன்றும் பாரதத்துக்கு நம்பிக்கையான நாடு என்று சொல்வதற்கும் கடந்த கால ஈரானின் நடவடிக்கைகள் வழி செய்யவில்லை.

ஒரு புறம், “காஷ்மீரை ஆக்கிரமிக்காதே பாரதமே” என்று கூவிக் கொண்டு மறுபுறம், “ஈரான் பாரதம் பாய் பாய்” என்று ஈரான் உருட்டுவதெல்லாம் என்ன ரகம்? இஸ்ரேலும் அமெரிக்காவும் தன்னைத் தொடர்ந்து தாக்குவதை அடுத்து, “ஈரானும் இண்டியாவும் நெருங்கிய நண்பர்கள்” என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறது ஈரான். பாரதத்தின் ஆதரவு தனக்கு முக்கியம் என்பதை இப்போதைய கட்டத்தில் மிகத் தாமதமாக உணர்ந்திருக்கிறது போல!

ஈரான் தன் சமூகத் தளப் பதிவில், ஈரானில் இருக்கும் சாபஹார் துறைமுகத்தைக் காட்டி, “இது ஈரான் இந்தியாவுக்கான தங்கப் பாலம்” என்று குறிப்பிட்டிருக்கிறது.

இந்த சாபஹார் துறைமுகத்தை மோடியின் பாரத அரசு தொடர்ந்து நடத்த பல தடைகளைப் போட்டது ஈரான் அரசு. அத்தனை தடைகளையும் பொறுத்துக் கொண்டது மோடியின் அரசு. அதற்குக் காரணம் INSTC என்று சொல்லப்படும் International North–South Transport Corridor இணைப்புக்கு ஈரானின் சாபஹார் துறைமுகம் முக்கியப் புள்ளி என்பது தான். இந்த இணைப்புப் புள்ளி வழியே தான் பாரதத்தின் பொருட்கள் மத்திய ஆசியா, ரஷ்யா, ஐரோப்பா என பல நாடுகளையும் சென்றடைகிறது.

இதைத் தடுக்க அமெரிக்கா எவ்வளவோ முயற்சியும் செய்தது. மோதிஜியின் பொறுமை முடிவில் வென்றது. என்றாலும், ஈரான் மீது இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதல் நிச்சயம் என்று தெரிந்ததும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பாரதம் வலியுறுத்தியதாகவும், அதை ஈரான் நிராகரித்ததாகவும் செய்திகள் உண்டு. ஈரான் திருந்தப் போவதில்லை என்பதால், சாபஹார் துறைமுகத்துக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை பாரதம். சாபஹார் துறைமுகத்தையும் கைவிட்டது.

இத்தனைக்குப் பிறகும் ஈரான், “சாபஹார் துறைமுகம் ஈரான் இந்தியாவுக்கான தங்கப் பாலம்” என்றெல்லாம் உருட்டுவது என்ன ரகம்? ‘ஈரான் அண்ணே, ரீல் அறுந்து ரொம்ப நாளாச்சுண்ணே… உங்க இந்தியா விரோதப் போக்கை மறக்க மாட்டோம்ண்ணே’ என்று குரல் எழும்புகிறது இந்தியாவில்!

ஆனால் மோடி விரோதத்தை மனதில் கொண்டு இந்தியா விரோதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய அரசியல்வாதிகள் மட்டும், ஈரானுக்கு இந்தியா பகிரங்க ஆதரவளிக்க வேண்டும் என்று கூக்குரலிடுகிறார்கள். அவர்களின் ஒரே நோக்கம், இந்தியாவுக்கு எதிராக இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைத் திருப்பி விட வேண்டும் என்ற தேசவிரோத எண்ணம் மட்டுமே!

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

dhinasari panchangam jyothidam - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம்: ஏப்ரல் 12

ஶ்ரீராமஜெயம் ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம
||श्री:|| 
!!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்
!!ஸ்ரீ:!!
श्री: श्रीमते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

பங்குனி ~ 29 (12.4.2026 ) ஞாயிற்றுக் கிழமை
வருடம் ~ விச்வாவஸூ வருஷம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம்~ பங்குனி மாஸம் { மீன மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 10.29 pm வரை தசமி பின் ஏகாதசி
நாள் ~ பானு வாஸரம் (ஞாயிற்றுக்கிழமை)
நட்சத்திரம் ~ 12.35 pm வரை திருவோணம் பின் அவிட்டம்
யோகம் ~ சாத்தம்
கரணம் ~ வணிஜை
அமிர்தாதியோகம் ~ சுபயோகம் / அசுபயோகம்.
ராகு காலம்~ மாலை 4.30~ 6.00.
எமகண்டம் ~ மதியம் 12.00 ~ 1.30.
குளிகை ~ மாலை 3.00 ~ 4.30.
நல்லநேரம் ~. 9.00 to 10.30 am 3.00 to 4.30pm
சூரிய உதயம் ~. காலை 6.08
சந்திராஷ்டமம் ~ மிதுனம்
சூலம் ~ மேற்கு.
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்ததிதி ~ தசமி
இன்று ~ சிரவண விரதம்

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

ஞாயிற்றுக்கிழமை ஹோரை

காலை

6-7. சூரியன். அசுபம்.
7-8. சுக்கிரன். சுபம்
8-9.. புதன். சுபம்
9-10.. சந்திரன். சுபம்
10-11. சனி.. அசுபம்
11-12. குரு. சுபம்

பிற்பகல்

12- 1. செவ்வா. அசுபம்
1-2. சூரியன். அசுபம்
2-3. சுக்கிரன். சுபம்
3-4. புதன். சுபம்

மாலை

4-5. சந்திரன்.சுபம்
5-6 சனி.. அசுபம்
6-7 குரு. சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

astrology panchangam rasipalan dhinasari - 2026

இன்றைய (12-4-2026) ராசி பலன்கள்


மேஷம்

வியாபார பணிகளில் முதலீடுகள் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். சிற்ப பணிகளில் கவனம் வேண்டும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அஸ்வினி : முதலீடுகள் உண்டாகும்.
பரணி : சேமிப்புகள் அதிகரிக்கும்.
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.


ரிஷபம்

பொதுப் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு ஏற்படும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். செயல்களில் வேகம் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை சீரமைப்பீர்கள். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் புதிய பதவிகள் கிடைக்கும். நன்மை பயக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கிருத்திகை : ஒத்துழைப்பு ஏற்படும்.
ரோகிணி : ஆதரவான நாள்.
மிருகசீரிஷம் : பதவிகள் கிடைக்கும்.


மிதுனம்

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சாந்தம் நிலவும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.
திருவாதிரை : நிதானத்துடன் செயல்படவும்.
புனர்பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.


கடகம்

குடும்பத்தில் சிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்கள் உடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். நேர்மறையான சிந்தனைகள் மேம்படும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த சில செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். குழப்பம் தீரும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்.

புனர்பூசம் : வாதங்கள் நீங்கும்.
பூசம் : சாதகமான நாள்.
ஆயில்யம் : பொறுமையுடன் செயல்படவும்.


சிம்மம்

நீண்ட நாட்களாக மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவுகள் கிடைக்கும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். நண்பர்களின் வட்டம் விரிவடையும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். பயணங்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றி கிட்டும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை

மகம் : தெளிவுகள் கிடைக்கும்.
பூரம் : தடைகள் விலகும்.
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


கன்னி

உணவு முறையில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் புதுமையான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களிடமிருந்து வந்த வேறுபாடுகள் குறையும். மறதி பிரச்சனைகள் அவ்வபோது ஏற்பட்டு நீங்கும். திருப்பங்கள் நிறைந்த சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வும் மந்த தன்மையும் ஏற்படும். நலம் சூழும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திரம் : மாற்றங்கள் உண்டாகும்.
அஸ்தம் : வேறுபாடுகள் குறையும்.
சித்திரை : மந்தமான நாள்.


துலாம்

மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும். பிறமொழி பேசும் மக்களிடம் கவனம் வேண்டும். குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். கற்பனைத் துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். சுபம் தரும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : கவனம் வேண்டும்.
சுவாதி : வரவுகள் கிடைக்கும்.
விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.


விருச்சிகம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சேமிப்பு குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். பயணம் முலம் மாற்றமான அனுபவம் கிடைக்கும். மனை சார்ந்த செயல்களில் ஆதாயம் அடைவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயனற்ற செலவுகளை தவிர்க்கவும். மேலதிகாரிகளிடம் உதவி கிடைக்கும். லாபம் பெருகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
அனுஷம் : அனுபவம் கிடைக்கும்.
கேட்டை : செலவுகளை தவிர்க்கவும்.


தனுசு

சகோதர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். போட்டி மனப்பான்மையை குறைத்து கொள்வது நல்லது. காது தொடர்பான இன்னல்கள் குறையும். இசை சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கனிவான செயல்பாடுகளால் மதிப்புகள் அதிகரிக்கும். அமைதி பொங்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மூலம் : ஒத்துழைப்பு உண்டாகும்.
பூராடம் : இன்னல்கள் குறையும்.
உத்திராடம் : மதிப்புகள் அதிகரிக்கும்.


மகரம்

கணவன் மனைவி இடையே நெருக்கம் ஏற்படும். பேச்சுவார்த்தைகளால் சாதகமான சூழல் அமையும். தன வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். பணி நிமித்தமான சில பொறுப்புகள் குறையும். வேலையாட்களிடம் தட்டிக் கொடுத்து செயல்படவும். உழைப்பிற்கான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பெருமை சேரும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

உத்திராடம் : நெருக்கம் ஏற்படும்.
திருவோணம் : பொறுப்புகள் குறையும்.
அவிட்டம் : அறிமுகம் ஏற்படும்.


கும்பம்

பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் பலரின் ஆதரவுகளையும் பெறுவீர்கள். உயரதிகாரிகளிடம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எதிலும் திருப்தியின்மையான சூழல் உண்டாகும். புதிய செயல்களை மேற்கொள்ளும் பொழுது சிந்தித்து செயல்படுதல் அவசியம். மற்றவர்களின் செயல்பாடுகளில் கருத்துக்கள் கூறுவதை தவிர்ப்பது நல்லது. சினம் அகலும் நாள்.

அதிர்ஷ்டதிசை : தெற்கு
அதிர்ஷ்டஎண் : 1
அதிர்ஷ்டநிறம் : வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்

அவிட்டம் : ஆதரவுகள் மேம்படும்.
சதயம் : புரிதல் மேம்படும்.
பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.


மீனம்

பலதரப்பட்ட மக்களின் ஆதரவுகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். தேர்ச்சி அடையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : ஆதரவுகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : சோர்வுகள் நீங்கும்.
ரேவதி : நம்பிக்கை மேம்படும்.



தினம் ஒரு திருக்குறள்

thiruvalluvar 1 - 2026

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (குறள் 894)

பரிமேலழகர் உரை:
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் – மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று – தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.

மு.வரதராசனார் உரை:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.


1500x900 1775289 arulmigu nellaiappar temple - 2026

தினம் ஒரு திருமுறை

மறை – 2 | பதிகம் – 64 | பாடல் – 8

வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே

விளக்கவுரை

மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்


srirangam ranganathar - 2026

தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்

மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.
திருச்சந்த விருத்தம் திருமொழி – 6 (804)

விளக்கம் : காளியும் வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் ஸ்வஜனங்களோடு திரண்ட ஸேனையை அழைத்துக்கொண்டு பயங்கரமான போர்க்களத்திலிருந்து வேகமாக ஓடிப்போன வளவிலே பாணாஸுரனது ஆயிரம் கைகளைஅறித்தொழித்த பரம புருஷனுடைய பெருமைதங்கிய கோயில் காவேரியோடு கூடின திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்.

நன்னம்பிக்கை மொழி!

  • எல்லாமே போய்விட்டதென கவலைப் படாதே, உன்னிடம் எவராலும் வெல்ல முடியாத, உள்ளம் உண்டு, மறவாதே!
  • நீ கவலைப் படுவதாலோ, வேதனை படுவதாலோ, உன் வாழ்கையில், எந்த மாற்றமும் வந்துவிட போவதில்லை!!
  • பணக்காரனை பார்த்து, பொறாமைப் படுவதைவிட, படுத்ததும் தூங்குபவனை பார்த்து, பொறாமை படு, ஏன்னா அது தான் சந்தோசமான வாழ்க்கை!!!
  • வாழ்க்கையில் வரும் சங்கடங்கள், உன்னை அழிக்க வரவில்லை, உன் மன வலிமை மற்றும் திறமையை வெளி படுத்த, ஒரு அரிய வாய்ப்பு, அவ்வளவே!
  • ஒரு காலத்தில், நேர்மை தவறாமல், வாழ்ந்தவர்களைதான் பார்த்தோம், ஆனால் இப்போதெல்லாம், நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களே அதிகம்!!
  • ஏணிக்கு சாய்ந்து கொள்ள, சுவர் தேவை, தோணிக்கு பாய்ந்து செல்ல, கடல் தேவை , வாழ்க்கையில் நீ ஜெயிக்க, உனக்கு சில, நல்ல உறவுகளும், நண்பர்களும் தேவை!!!

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

actor vijay - 2026
#image_title

விஜய் நடித்துள்ள ஜனநாயக படம் முழுமையும் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக இந்தப் படம் சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக பிரச்சனையில் சிக்கி சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சென்சார் சான்றிதழ் இல்லாமலேயே முழு படமும் இணையத்தில்  கசிய விடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இதனை வெளியிட்டவர்கள் யாராக இருக்கும் என்ற அனுமானங்கள் சமூக தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் சென்சார் சான்றிதழுக்காக  உள்ளதால் சென்சார் போர்டு இதை கசிய விட்டிருக்கும் என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்தனர். ஆனால், ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்ததற்கு நாங்கள் காரணம் அல்ல என்று மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

‘ஜனநாயகன்’ படத்தை சென்சார் போர்டு கசிய விட்டதாக பரப்பப்படும் தகவல் ஆதாரமற்றது, உண்மைக்கு புறம்பானது. தயாரிப்பு நிறுவனம் வசமுள்ள KDM கடவுச் சீட்டு இல்லாமல் சென்சார் போர்டால் படத்தை பார்க்கவே முடியாது. ‘ஜனநாயகன்’ திரைப்படத் தொகுப்பை மார்ச் 17ஆம் தேதியே தயாரிப்பு நிறுவனத்திடம் நாங்கள் திருப்பி வழங்கிவிட்டோம். தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களும் பாதுகாப்பாக கையாளப்படுகின்றன, என்று சென்சார் போர்ட் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அரசியல் கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் இறங்கியுள்ள நடிகர் விஜய், ஜனநாயகன் என்ற திரைப்படத்தை கடைசியாக முடித்துக் கொடுத்தார். அதுவே தமது திரைவாழ்வின் கடைசிப் படம் என்று அவர் அறிவித்துவிட்டு, கட்சியைத் தொடங்கி, தற்போது தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார். 

ஆனால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட ஜனநாயகன் படம், சென்சார் சான்றிதழ் பெற முடியாமல், நீதிமன்றத்தை விஜய் தரப்பு அணுகி, அங்கும் குட்டுப்பட்டு, தற்போது வரை எப்போது வெளியாகும் என்று தெரியாத சூழலே நிலவுகிறது.  இந்நிலையில், படம் வெளியாகாததற்கு அரசியலே காரணம் என்று விஜயும், அவரது ரசிகர்களும் கூறி வருகின்றனர். 

இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் 5 நிமிட காட்சிகள் அண்மையில் சட்ட விரோதமாக இணையத்தில் வெளியானது. திட்டமிட்டபடி படம் ரிலீஸ் ஆகாத சூழலில், இணையத்தில் படத்தின் காட்சிகள் வெளியானதால் படத் தயாரிப்புக் குழு அதிர்ச்சி அடைந்தது. மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், தற்போது மொத்த படமுமே இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், ஜனநாயகன் படம் லீக் ஆனதற்கு நாங்கள் தான் காரணம் என்ற புகார் தவறானது; அடிப்படை ஆதாரமற்றது என்று மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் தணிக்கை வாரியம் வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது. இந்த நடைமுறை கடவுச்சொல் மூலமே பாதுகாக்கப்படுகிறது. இந்த KDM கடவுச்சொல் ஆனது, தயாரிப்பாளரிடம் மட்டுமே தான் இருக்கும்.

இந்தக் கடவுச்சொல்லைத் தவிர வேறு ஏதேனும் கடவுச்சொல்லை பயன்படுத்தி படத்தைப் பார்க்க முடியாது. ஜனநாயகன் படம் டிஜிட்டல் சினிமா தொகுப்பு, உரிய ஒப்புதலுடன் மார்ச் 17ம் தேதி மும்பையில் படத்தை சான்றிதழுக்காக விண்ணப்பித்தவர்களிடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அன்றைய தினம் முதல், படத்தின் சினிமா தொகுப்பு அவர்களிடமேதான் இருக்கிறது – என்று மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.

கேடிஎம் என்பது என்ன?

மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (CBFC), திரையிடலின் போது திரைப்படங்கள் கசிவதைத் தடுக்க, பாதுகாப்பான, காலவரையறைக்குட்பட்ட KDM (திறவுகோல் விநியோக செய்தி) முறையைப் பயன்படுத்துகிறது. 

KDM என்பது ஒரு டிஜிட்டல் சினிமா தொகுப்பை (DCP) இயக்குவதற்குத் தேவைப்படும் மறைகுறியாக்கப்பட்ட கோப்பு ஆகும். KDM-கள் தயாரிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், குறுகிய காலத்திற்கு (எ.கா., 5 மணிநேரம்) மட்டுமே செல்லுபடியாகும் என்றும், அவை திரைப்படக் கசிவுகளுக்குக் காரணம் அல்ல என்றும் CBFC வலியுறுத்துகிறது. 

பாதுகாப்பு நெறிமுறை: DCP மறைகுறியாக்கப்பட்டுள்ளது, மேலும் ஒரு குறிப்பிட்ட KDM மட்டுமே அதை இயக்க அனுமதிக்கிறது, இது அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுக்கிறது.

கசிவுத் தடுப்பு: அனைத்து சான்றிதழ் சமர்ப்பிப்புகளுக்கும் CBFC ஒரு பாதுகாப்பான, கடவுச்சொல்-பாதுகாக்கப்பட்ட KDM செயல்முறையைப் பின்பற்றுகிறது. 

தயாரிப்பாளரின் பொறுப்பு: சமீபத்திய சர்ச்சைகளில், KDM வாரியத்திடம் இல்லாமல், தயாரிப்பாளர்/திரைப்படத் தயாரிப்பாளரிடமே உள்ளது என்று CBFC தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு DCP கோப்பு நகலெடுக்கப்பட்டாலும், அதற்கான திறவுகோல் இல்லாமல் அதை இயக்க முடியாது என்பதை KDM அமைப்பு உறுதி செய்கிறது; இந்தத் திறவுகோல் குறிப்பிட்ட, அங்கீகரிக்கப்பட்ட கணினிகளுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது.

யார் பார்த்த வேலை?

இனையத்தில் கசிந்த படத்தின் டிஜிட்டல் அளவு, நேற்று முதலில் 650 எம்பி அளவில் வெளியானதாகச் சொன்னார்கள். பிறகு 1.4 ஜிபி அளவு என்றார்கள்.  இன்று காலையில 3.96 ஜிபி அளவு என்றார்கள். இப்போது 8.5 ஜிபி அளவு என்கிறார்கள். அப்படி என்றால் அது, Ultra 4K தியேட்டர் பிரின்ட்டு! எனில் யார் பார்த்த வேலை இது..? என்று இணையதளங்களில் கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. 

தேர்தல் அரசியலுக்காக, தேர்தல் நேரத்தில் தயாரிக்கப்பட்ட படம் ஜனநாயகன். படத்தின் தலைப்பு பெயரே அதன் உள்நோக்கத்தைச் சொல்லும். இந்நிலையில், சென்சார் போர்டில் சிக்கிக் கொண்டு காத்திருக்கும் ஒரு படத்தை சென்சார் சான்று இல்லாமலேயே வெளியிடும் துணிச்சல் விஜய் தரப்பைத் தவிர வேறு எவருக்கும் வந்திருக்காது என்ற கருத்துகளும் பலமாக எதிரொலிக்கின்றன. அப்படி நிகழ்ந்திருந்தால் விஜய் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர் என்றும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

actor vijay - 2026
#image_title

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

பொதுவாக, ஒரு படம் திரையரங்குகளில் வெளியான பிறகு தான் Piracy நடக்கும். அங்கு கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட பதிப்புகள் தான் வெளியேறும். ஆனால், “ஜனநாயகன்” விவகாரத்தில் Edit Reference Mark உடன் படம் வெளியானதாக கூறப்படுவது, இது ஒரு Personal Copy ஆக இருக்கலாம் என்ற முக்கியமான சந்தேகத்தை எழுப்புகிறது.

திரைப்படத் துறையில் இப்படிப்பட்ட Personal Copy-கள் தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர், எடிட்டர் ஆகிய சிலரிடம் மட்டுமே இருக்கும் என்பது அறியப்பட்ட நடைமுறை. இதனால், இந்த கசிவு வெளிப்புற Piracy அல்ல, உள்ளகத் தரப்பிலிருந்து நடந்திருக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவது, சம்பவத்தின் நேரம். தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் பின்னணியுடன் உருவானதாக கூறப்படும் ஒரு படம் திடீரென லீக் ஆகிறது. இது சீரற்ற நிகழ்வா அல்லது திட்டமிட்ட நடவடிக்கையா என்ற விவாதத்தை தூண்டுகிறது.

இந்த விவகாரத்தை புரிந்துகொள்ள, சமீபத்திய நிகழ்வுகளின் காலவரிசையை கவனிக்க வேண்டியுள்ளது. நடிகர் விஜய் தனது “தமிழக வெற்றிக் கழகம்” (TVK) கட்சியை பிப்ரவரி 2024-ல் தொடங்கினார். அதற்கு முன்னதாகவே, “Whistle Podu” பாடலில் அரசியல் சைகைகள் இருப்பதாக விவாதம் எழுந்தது. பின்னர், 2026 தேர்தலை முன்னிட்டு ‘விசில்’ சின்னம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இதே காலப்பகுதியில், “ஜனநாயகன்” திரைப்படம் டிசம்பர் 2025-ல் சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்பட்டும், இன்னும் வெளியாகாத நிலையில் உள்ளது. இப்படியான சூழலில், படம் லீக் ஆனதாக தகவல் வெளியாகிறது.

இந்த தொடர் நிகழ்வுகள் அனைத்தும் சேர்ந்து பார்க்கும்போது, இது ஒரு சாதாரண தொழில்நுட்ப கசிவு மட்டுமா என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக, படத்தில் அரசியல் சார்ந்த வசனங்கள் அதிகம் உள்ளதாக கூறப்படுவது, இந்த நேரத்திலான லீக்கின் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது.

தமிழ் ஊடக வரலாற்றிலும் எதிர்பாராத ஒளிபரப்புகள் நடந்துள்ளன. “கில்லி” திரைப்படம், பிரபலமான ஒரு சேனலில் திட்டமிட்ட ஒளிபரப்புக்கு முன்பே மற்றொரு சேனலில் ஒளிபரப்பான சம்பவம், போட்டி சூழலில் தகவல் மற்றும் அணுகல் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை நினைவூட்டுகிறது.

இந்நிலையில், “ஜனநாயகன்” லீக் — ஒரு Piracy சம்பவமா, உள்ளகத் தகவல் கசிவா, அல்லது அரசியல்-சினிமா இணைப்பில் நிகழும் திட்டமிட்ட நகர்வா என்ற கேள்வி தொடர்கிறது.

இந்த கேள்விகளுக்கு தெளிவான பதில் கிடைக்க வேண்டுமெனில், அதிகாரப்பூர்வ விசாரணைகள் அவசியம். அதுவரை, “ஜனநாயகன்” லீக் — சாதாரண சம்பவமா அல்லது பெரிய திட்டமா என்பது தான் முக்கியமான கேள்வியாக இருக்கும்.

  • செய்திக்கதிர் குழு

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

write thoughts - 2026
#image_title

இந்தியாவில் ‘டேட்டிங்’ செயலிகளை சுமார் 40 லட்சம் பேர் பயன்படுத்தி வருவதும், அவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்களாக இருப்பதும், பெண்களின் பங்களிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 148 சதவிகிதம் அதிகரித்திருப்பதும் சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

அனைத்து ‘டேட்டிங்’ பயன்பாடுகளும் தவறானவை அல்ல என்றாலும், ‘டேட்டிங்’ செயலிகளின் பயன்பாடு அதிகரித்து, திருமணத்தை மீறிய உறவுகள் உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் காட்டுவது சமூகத்தின் தற்போதைய பாதை கவலைக்கிடமாக உள்ளதை சுட்டிக்காட்டுகிறது. இளம் வயது இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே இவ்வகை செயலிகளின் பரவல், சமூக ஒழுக்கம் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையை உருவாக்குகிறது.

திருமணம், வேலைவாய்ப்பு, குடும்ப வாழ்க்கை போன்ற அடிப்படை நிலைகள் சரியாக அமையாதது போன்ற காரணங்களுடன், மது, போதைப் பொருள் பழக்கங்கள் மற்றும் தவறான நட்புகள் இணைந்து இளைஞர்களை தவறான பாதைகளுக்கு இட்டுச் செல்கின்றன. இதனால் சமூகத்தில் ஒழுங்கின்மை மட்டுமல்லாமல், குற்றச்செயல்கள் மற்றும் நெறி சிதைவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவது என்னவெனில், இந்தப் போக்கு கல்வியறிவு பெற்ற மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடமும் காணப்படுகிறது.

மேலும், ‘டேட்டிங்’ செயலிகள் சைபர் குற்றங்களுக்கு வழிவகுக்கும் அபாயமும் அதிகரித்து வருகிறது. அறிமுகமற்றவர்களுடன் தொடர்பு கொண்டு, தங்களுக்கே தெரியாமல் பதிவு செய்யப்படும் தனிப்பட்ட தகவல்கள், வீடியோ, ஆடியோ போன்றவற்றை பின்னர் பயன்படுத்தி மிரட்டல் மற்றும் பண மோசடி நடத்தும் சம்பவங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இது தனிநபர் மரியாதை மட்டுமின்றி, குடும்பத்தின் சமூக மதிப்பையும் பாதிக்கக்கூடியதாகும். ‘டேட்டிங்’ செயலிகளில் ஒரு தனிப்பட்ட தொடர்பாக தொடங்கி, திட்டமிட்ட மோசடியாக மாறும் அபாயம் அதிகம். ஒரு கிளிக்கில் தொடங்கும் தொடர்பு, ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தை பாதிக்கும் நிலைக்கு செல்லக்கூடும்.

இதே போக்கின் ஒரு பகுதியாக, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்க்கும் காட்சிகளுடன் சிலர் தோன்றி, “சாட்டிங் செய்ய வேண்டுமா, ‘டேட்டிங்’ செய்ய வேண்டுமா?” என அழைக்கும் வகையில் சிறு வீடியோக்கள் மற்றும் விளம்பரங்கள் பரவுவது கவலைக்கிடமானதாக உள்ளது. இத்தகைய உள்ளடக்கங்கள் இளைஞர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் அபாயம் இருப்பதால், இவ்வாறான விளம்பரங்களையும் கட்டுப்படுத்துவது அவசியமாகிறது.

பெருநகரங்களில் தொடங்கிய ‘டேட்டிங்’ கலாச்சாரம், பிற நகரங்கள் மற்றும் இளைஞர்களிடமும் பரவுவதற்கு முன், மத்திய மற்றும் மாநில அரசுகள் இதுகுறித்து முழுமையான ஆய்வு செய்வதுடன், பயன்பாட்டை கட்டுப்படுத்தும் கொள்கைகள் அவசியம்.

இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், ஒரு குறிப்பிட்ட வயது வரையிலான கட்டுப்பாடுகள் அல்லது கடுமையான விதிமுறைகள் கொண்டு வரப்பட வேண்டும். கேமிங், சூதாட்ட செயலிகளை தடை செய்தது போல், ‘டேட்டிங்’ செயலிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் அல்லது தேவையெனில் தடை செய்ய வேண்டும்.

இல்லையெனில், தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும் எச்சரிக்கை மணி ஆகும்.

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

arunthamizh 50 book release - 2026

இலக்கியச்சாரல் அமைப்பின் நிறுவனர் கவிமாமணி இளையவன், சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல் அலுவலகத்தில் வைத்து வெளியிட்டார்.

இந்த அமைப்பின் பொருளாளர் பாமா ரவி, இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பாளர் (பணி நிறைவு) என். திருமலை, விஜயலெக்ஷ்மி திருமலை ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

ஜெயஸ்ரீ எம். சாரி எழுதியுள்ள இரண்டாவது நூலான அருந்தமிழ் 50 என்ற கவிதை நூல், 50 தலைப்புகளைக் கொண்டது. இந்நூலினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார் இளையவன்.

தன் ஏற்புரையில் நூலாசிரியர் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய இளையவன், காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவ பானுமதி ரமேஷ், வாழ்த்துரை வழங்கிய ஆன்மீக சொற்பொழிவாளர் சீதாலெக்ஷ்மி, இலக்கியச் சாரல் இதழின் ஆசிரியர் ரெ. முரளி, நூல் வெளிவர உதவியவர்கள் என அனைவருக்கும் தன் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.