மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த வாரம் வெளிநாட்டு நன்கொடை (FCRA) விதிகளில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் என் ஜி ஓ க்களின் ( அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகளை வரைமுறை படுத்துவது அதன் நோக்கம்.
நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக
ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம். மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது. தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி
ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம், பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.
மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த வாரம் வெளிநாட்டு நன்கொடை (FCRA) விதிகளில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் என் ஜி ஓ க்களின் ( அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகளை வரைமுறை படுத்துவது அதன் நோக்கம்.
நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக
உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.
ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த வாரம் வெளிநாட்டு நன்கொடை (FCRA) விதிகளில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் என் ஜி ஓ க்களின் ( அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகளை வரைமுறை படுத்துவது அதன் நோக்கம்.
நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக
ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம். மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது. தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி
ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம், பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.
மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த வாரம் வெளிநாட்டு நன்கொடை (FCRA) விதிகளில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் என் ஜி ஓ க்களின் ( அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகளை வரைமுறை படுத்துவது அதன் நோக்கம்.
நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக
உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.
ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஆனி ~ 19 ( 3.7.2026 ) வெள்ளி கிழமை. வருடம் ~ பராபவ { பராபவ நாம சம்வத்ஸரம் } அயனம்~ உத்தராயணம் ருது ~ க்ரீஷ்ம ருது. மாதம் ~ ஆனி மாதம் { மிதுன மாஸம் } பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம். திதி~ காலை 10.23 AM வரை த்ருதீயை பின் சதுர்த்தி. நாள் ~ ( ப்ருஹு வாஸரம் ) வெள்ளி கிழமை. நட்சத்திரம்~ பகல் 11.19 AM வரை திருஓணம் பின் அவிட்டம். யோகம் ~ விஷ்கம்பம். கரணம் ~ பத்திரை / பவம். அமிர்தாதியோகம் ~ அசுபயோகம் / சுபயோகம். நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 AM & மாலை 5.00 ~ 6.00 PM. ராகு காலம் ~ காலை 10.30 AM ~ மதியம் 12.00 NOON. எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30 PM. குளிகை ~ காலை 7.30 ~ 9.00 AM. சூரிய உதயம் ~ காலை 5.57. சந்திராஷ்டமம் — கடகம். சூலம் ~ மேற்கு பரிகாரம் ~ வெல்லம் ஸ்ரார்த்த திதி ~ சதுர்த்தி. இன்று ~
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய ராசிபலன்கள் – 3.7.2026
மேஷம்
உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். பணி நிமித்தமான நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். தொழில் கல்வியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மாறுபட்ட அனுபவங்களால் பக்குவம் உருவாகும். மற்றவர்களின் பணிகளை சேர்த்து பார்ப்பீர்கள். பூர்வீக சொத்துக்களை சீரமைப்பீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.
அதிஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : மதிப்புகள் கிடைக்கும். பரணி : பக்குவம் ஏற்படும். கிருத்திகை : சாதகமான நாள்.
ரிஷபம்
எதிர்காலம் தொடர்பான முயற்சிகளில் பொறுமை வேண்டும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். வியாபார பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். திறமைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.
அதிஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : பொறுமை வேண்டும். ரோகிணி : லாபகரமான நாள். மிருகசீரிஷம் : அங்கீகாரங்கள் கிடைக்கும்.
மிதுனம்
ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். புதிய இடத்திற்கு செல்வதற்கான சூழல்கள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். எதிலும் ஆர்வமின்மையான சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் அலைச்சல் ஏற்படும். இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும். திருவாதிரை : புரிதல் ஏற்படும். புனர்பூசம் : குழப்பம் உண்டாகும்.
கடகம்
திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் நன்மைகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கங்கள் மேம்படும்.
மனதில் தோன்றிய எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். வாழ்க்கை துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். குழந்தைகள் பொறுப்பு அறிந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிலும் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகம் : ஒத்துழைப்புகள் ஏற்படும். பூரம் : சூட்சுமங்களை அறிவீர்கள். உத்திரம் : புத்துணர்ச்சியான நாள்.
கன்னி
வியாபார பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு மேம்படும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும்.
அதிஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு நிறம்
உத்திரம் : புரிதல் ஏற்படும். அஸ்தம் : செல்வாக்கு மேம்படும். சித்திரை : ஆசைகள் உண்டாகும்.
துலாம்
எதிர்பார்த்த சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அதிரடியான சில செயல்கள் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள். உறவினர்களிடம் ஒத்துழைப்புகள் மேம்படும். பணி புரியும் இடத்தில் அமைதி ஏற்படும். உழைப்பால் முன்னேற்றத்தை உருவாக்குவீர்கள். பயணம் சார்ந்த விஷயங்கள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
சித்திரை : அலைச்சல்கள் உண்டாகும். சுவாதி : ஒத்துழைப்புகள் மேம்படும். விசாகம் : முன்னேற்றமான நாள்.
விருச்சிகம்
உறவினர்களின் வருகைகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வியாபார பணிகளில் லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்
விசாகம் : முன்னேற்றம் உண்டாகும். அனுஷம் : பிரச்சனைகள் குறையும். கேட்டை : லாபம் கிடைக்கும்.
தனுசு
எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சுக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குழந்தைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : முதலீடுகள் அதிகரிக்கும். பூராடம் : மதிப்புகள் அதிகரிக்கும். உத்திராடம் : புரிதல் ஏற்படும்.
மகரம்
தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். சேவை பணிகளில் ஆர்வம் ஏற்படும். மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. சிந்தனைப் போக்கில் சில தெளிவுகள் கிடைக்கும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். வழக்கு விஷயங்களில் பொறுமையை கையாளவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : ஆர்வம் ஏற்படும். திருவோணம் : தெளிவுகள் கிடைக்கும். அவிட்டம் : பொறுப்புகள் மேம்படும்.
கும்பம்
உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் சாதகமான சூழல்கள் ஏற்படும். சமுக பணிகளில் சில மாறுபட்ட அனுபவம் ஏற்படும். நெருக்கமானவர்களுடன் அனுசரித்து செல்லவும். வழக்கு தொடர்பான விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
அவிட்டம் : அலைச்சல்கள் அதிகரிக்கும். சதயம் : சாதகமான நாள். பூரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும்.
மீனம்
சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். எதிராக இருந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபங்கள் உண்டாகும். காலதாமதமான பணிகளை செய்து முடிப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும்.
அதிஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
பூரட்டாதி : ஆதரவான நாள். உத்திரட்டாதி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ரேவதி : வாய்ப்புகள் கைகூடும்.
தினம் ஒரு திருக்குறள்
அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
மு.வரதராசனார் உரை: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
பரிமேலழகர் உரை: இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).
மணக்குடவர் உரை: மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு. திருக்குறளார் வீ. முனிசாமி உரை: அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.
விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.
இன்றைய சிந்தனைக்கு…
பெருந்தன்மை என்பது, உன்னால் முடிந்ததை விட, அதிகமாக கொடுப்பது, பெருமை என்பது, உனக்கு தேவையானதை விட, குறைவாக எடுத்து கொள்வது! நீ அன்புடன் செய்யும், சின்ன செயல் கூட, ஒருவரின் வாழ்க்கையில், பெரும் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும், உலகில் அன்பை விட, வலிமையானது எதுவுமில்லை!! உறவுகளில், யார் முக்கியம் என்பதை, உயிர் அற்ற பணமே, முடிவு செய்கிறது; பணம் கொடுத்து பார், உறவுகள் உன்னை போற்றும், அதை திரும்ப கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!!
குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.
ஒருவேளை அது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும், ஒரு சாதாரண மனிதனின் இயல்பான கேள்வி என்னவாக இருக்கும்?
“இந்த மணல்தான் பிரச்சினை என்றால், அதை முழுவதுமாக அள்ளிக்கொண்டு போய்விடுங்கள். எங்களுக்கு எந்த ஆபத்தும் வேண்டாம். இந்த மண்ணே இங்கே இருக்கக் கூடாது” என்பதுதான் பெரும்பாலான மக்களின் இயல்பான எண்ணமாக இருக்கும்.
ஆனால், அந்த மணலை காந்த சக்தி மூலம் பிரித்து எடுப்பதற்கு ஒரு நிறுவனம் வரும் போது, “அந்த மணலை மட்டும் பிரித்தெடுக்கக் கூடாது, அது அப்படியே இங்கேயே இருக்க வேண்டும்” என்று சிலர் வாதிடுகிறார்கள். இந்த இரண்டு நிலைப்பாடுகளும் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பது போல் தெரிகிறது. அதற்குப் பின்னால் உள்ள தர்க்கம் என்ன என்பதுதான் புரியவில்லை.
இதுபோலவே, ஒரு காலத்தில் துறைமுகம் வந்தால் அந்தப் பகுதியில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யாது, கடல் வளம் அழிந்துவிடும் என்று பல்வேற விதமான அச்சத்தை மக்கள் மத்தியில் கிளப்பி விட்டார்கள். ஆனால், இன்று கேரளாவில் வெறும் சில கிலோமீட்டர் தூரத்தில் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கும் மீன்கள் இனப்பெருக்கம் செய்கின்றன, நண்டுகள் முட்டையிடுகின்றன, மீன்பிடித் தொழிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதேபோல், கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சாவரா பகுதியில் பல ஆண்டுகளாக IREL நிறுவனம் கடற்கரை கனிம மணலைப் பிரித்தெடுத்து வருகிறது. ஒடிசாவிலும் அதேபோன்ற கனிம மணல் பிரிப்பு நடைபெற்று வருகிறது. அங்கு இந்தக் கனிமங்களை அகற்றுவதை இயல்பான தொழில்துறை நடவடிக்கையாகவே பார்க்கிறார்கள்.
அப்படியிருக்க, தமிழ்நாட்டில் மட்டும் இதே விஷயத்திற்கு முற்றிலும் மாறுபட்ட எதிர்ப்புகள் ஏன் உருவாகின்றன என்ற கேள்வி எழுவது இயல்புதான். எந்தத் திட்டமாக இருந்தாலும் அதன் நன்மை, தீமை, சுற்றுச்சூழல் பாதிப்பு, மக்களின் நலன் ஆகிய அனைத்தையும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் ஆராய்ந்து விவாதிப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.
உணர்ச்சியை விட உண்மைகளுக்கும் ஆதாரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதே சமூகத்திற்கு நல்லது. இந்த திராவிட கல்வி சிலைகள் உண்டியல் கூட்டங்கள் மற்றும் மிஷனரிகள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் இப்படி விளங்காத வேலை தான் நடைபெறும்.
— ராம் மாதவ் — தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்
மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த வாரம் வெளிநாட்டு நன்கொடை (FCRA) விதிகளில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் என் ஜி ஓ க்களின் ( அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகளை வரைமுறை படுத்துவது அதன் நோக்கம்.
வெளிநாட்டு நன்கொடைகளை பயன்படுத்தி மதம் சார்ந்த கட்டடங்களை (சர்ச் , மசூதி) கட்டலாம், பராமரிக்கலாம், புனித நூல்களை அச்சடிக்கலாம், எண்ம (டிஜிட்டல்) மயமாக்கலாம், யாத்திரிகர் விடுதிகளை கட்டலாம், சமூக உணவு கூடங்களை நடத்தலாம், பழங்குடியினரின் உள்ளூர் பாரம்பரிய மரபுகளை வளர்க்கலாம். ஆனால் மதமாற்றம் செய்யக்கூடாது என்கிறது அந்த சட்ட திருத்தம்.
அந்த திருத்தங்கள் அரசாணையாக வெளியிடப்படுவதற்கு முன்பே இந்தியா முழுவதிலும் மட்டுமல்ல அமெரிக்காவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த சட்ட திருத்தங்கள் அண்மையில் நடந்த கேரளா மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல்களில் முக்கிய விஷயமாகியது. அதிர்வலைகள் வாஷிங்டனில் உள்ள அதிபர் மாளிகையையும் எட்டியுள்ளது. அமெரிக்க வெளியுறவு துறை கமிட்டியின் தலைவராக உள்ள ஜேம்ஸ் ரிஸ்ச் , கிறிஸ்தவர்களின் மனித உரிமைகளை மதிக்காத நாடுகளை அம்பலப் படுத்துவோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயங்காது, என்று அச்சுறுத்தி உள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மத மாற்றம் குறித்து விவாதம் எழுந்தது. விடுதலைக்கு பிறகு ஒரிசா (1967) , மத்திய பிரதேசம் (1968), அருணாச்சல பிரதேசம் (1978) போன்ற சில மாநிலங்களில் மதமாற்ற தடை சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக சத்தீஸ்கர் (2000), குஜராத் (2003), இமாச்சல பிரதேசம் (2016), ஜார்கண்ட் (2017), உத்தரகாண்ட் (2018), உத்தரப்பிரதேசம் (2021), ஹரியானா (2022), ராஜஸ்தான் (2025), மகாராஷ்டிரா (2026) ஆகிய மாநிலங்களில் மதமாற்ற தடை சட்டம் இயற்றப்பட்டன.
‘ மத பிரச்சாரம் செய்யும் உரிமை’ என்றால் ‘மதமாற்றம் செய்யும் உரிமை’யும் சேர்த்ததுதான் என்று பல கிறிஸ்துவ பிரிவுகள்/ குழுக்கள் வலியுறுத்துகின்றன. ஆனால் 1977 இல் மத்திய பிரதேச அரசு எதிர் ரெவெரென்ட் ஸ்டைன்ஸ்லாஸ் வழக்கில் உச்ச நீதிமன்றம், அரசமைப்பு சட்டப்பிரிவு 25 ஒருவருக்கு தாம் எந்த மதத்தை பின்பற்றுவது என்பதை தீர்மானிக்கும் உரிமையை அளித்துள்ளதே தவிர மற்றவர்களை தம் மதத்திற்கு மாற்றும் உரிமையை வழங்கவில்லை, என்று கூறியுள்ளது. அரசு இந்த தீர்ப்பை ஒட்டியே இப்போது செயல்பட்டுள்ளது.
தேச விடுதலைக்கு முன்பு ராம் மோகன் ராய், விவேகானந்தர், காந்தி போன்ற சீர்திருத்தவாதிகளும் தலைவர்களும் மதம் மாற்றம் குறித்து கூர்மையான கேள்விகளை எழுப்பியுள்ளனர். 1931 மார்ச் மாதத்தில் ஒரு செய்தியாளர், சுதந்திரத்திற்கு பிறகு வெளிநாட்டு கிறிஸ்துவ மிஷனரிகள் இந்தியாவில் செயல்படுவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? , என்று காந்தியிடம் கேட்டார். அதற்கு அவர் , ஏழ்மையில் இருப்பவர்களுக்கு பொதுநல சேவைகளை மனிதாபிமான நோக்கில் செய்யாமல் மதம் மாற்றும் நோக்கத்துடன் கல்வி, மருத்துவ சேவை ஆகியவற்றை செய்வதாக இருந்தால் நான் அவர்களை நாட்டை விட்டு வெளியேற சொல்வேன்’ , என்று பதிலளித்தார்.
1935 மே மாதம் ஹரிஜனில் வெளியான ஒரு நேர்காணலில், ‘எனக்கு அதிகாரம் இருக்குமானால் மதமாற்றம் அனைத்தையும் தடை செய்யும் சட்டத்தை இயற்றுவேன். மதமாற்றம் பல கலவரங்களுக்கு காரணமாக இருக்கிறது அது தவிர்க்கப்பட வேண்டும்’ , என்று கூறியுள்ளார்.
ஆனால் ஜவஹர்லால் நேரு 1946 ல் ‘கிறிஸ்தவர்கள் இந்த நாட்டில் மூன்றாவது பெரிய சமுதாயம். அவர்களது மத உரிமைகளும் இதர உரிமைகளும் நசுக்கப்படும் என்று யாராவது நினைத்தால் அது அர்த்தமற்றது’, என்று கூறியுள்ளார். இந்திய அரசமைப்பு சபையில் ‘மதப் பிரச்சாரம்’ அல்லது ‘மதத்தை பரப்புதல்’ மற்றும் ‘மதம் மாற்றம்’ போன்ற விஷயங்களை பற்றி விவாதிக்கப்பட்டது. மதத்தை ‘பிரச்சாரம்’ செய்யவும் ‘பின்பற்றவும்’ சுதந்திரம் வழங்கப்படும் என்று ஏற்கனவே காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால் மிஷனரிகள் ‘மதம் பரப்பும் உரிமை’ என்பது ‘மதம் மாற்றம் செய்யும் உரிமை’யை உள்ளடக்கியதுதான் என்றனர்.
கே எம் முன்ஷி , அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் , சி ராஜகோபால் ஆச்சாரியார் போன்ற உறுப்பினர்கள் மதமாற்றம் குறித்து மாறுபட்ட கருத்து கொண்டிருந்தனர். சர்தார் பட்டேலும் மௌலானா ஆசாத்தும் கூட மிஷனரிகள் திரல் மதமாற்றத்தை செய்யக்கூடாது என்றனர். ஆனால் இது போன்ற கருத்துக்களுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் ‘மதம் பரப்புதல்’ என்ற வார்த்தை அரசமைப்பு பிரிவு 19 இல் சேர்க்கப்பட்டு சட்டமானது.
மிஷனரிகளின் செயல்பாடுகள் பற்றி தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. மத்திய பிரதேச அரசு 1954 இல் அம்மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் பகுதிகளில் மிஷனரிகளின் செயல்பாடுகளை ஆராய நியோகி கமிட்டியை நியமித்தது. நியோகி கமிட்டி , மதமாற்றத்தை தனது முக்கிய நோக்கமாக கொண்ட மிஷனரிகளின் செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். வெளிநாட்டு மிஷனரிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட வேண்டும். வெளிநாட்டினர் மூலம் செய்யப்படும் மதம் பரப்புதல் மற்றும் தவறான வழிமுறைகளை பின்பற்றி செய்யப்படும் மதமாற்றத்தை தடை செய்ய வேண்டும். அதற்காக தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். தவறான வழிகளில் செய்யப்படும் மத மாற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என்று மிஷனரிகளுக்கு எதிராக பல பரிந்துரைகளை கூறியது.
நேரு அரசு அந்த கமிட்டியின் அறிக்கையையும் பரிந்துரைகளையும் புறம் தள்ளியது. ஏழு தசாப்தங்களுக்கு பிறகு மோடி அரசு அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையாளர் தில்லியில் உள்ள இந்தியா பவுண்டேசனின் தலைவராக இருக்கிறார்.
श्री मते रामानुजाय नम: ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
ஆனி ௴ 18 ௨ *{2.7.2026} 1.வருடம் ~ பராபவ ௵ பராபவ நாம ஸம்வத்ஸரம் 2.அயனம் ~ உத்தராயணம் 3 ருது கிரீஷ்ம ருதௌ 4.மாதம் ( மிதுன மாஸம்) 5.பக்ஷம்~ கிருஷ்ண பக்ஷம் 6.ஸ்ரார்த்த திதி திருதீயை ( காலை 09.15 வரை துவிதீயை) 7 நாள்~ வியாழக்கிழமை குருவாஸரம் } 8.நக்ஷத்ரம் காலை 09.34 வரை உத்திராஷாடா பிறகு ஸ்ரவணம் ( ஸ்ரவண விரதம்)( யோகம்)( ஸுப யோகம்) நல்ல நேரம் காலை 912 பிற்பகல் 11.30 மாலை 4 முதல் இரவு 7 வரை இரவு 89& 11முதல் காலை 2வரை& 34 எமகண்டம் காலை 06~ 7.30 AM* குளிகை காலை 0.9~10.30 AM ராகுகாலம் பிற்பகல் 1.30~3 PM சூரிய உதயம் ~ காலை 05.50 AM.* சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.36 PM* சந்திராஷ்டமம் காலை 09.34 வரை மிருகசீரிஷம் பிறகு திருவாதிரை
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள். !!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु!! ॥ॐ शान्तिः शान्तिः शान्तिः |! !!धर्मो रक्षति रक्षित:!! !!लोकः समस्ताः सुखिनो भवन्तु!
sarathambal
சுப ஓரைகள்: அவரவர் இருப்பிடத்தில் சூரிய உதயத்திற்கு தகுந்தவாறு நேரத்தை கூட்டி, குறைத்து கொள்ளவும்.
காலை : சுக்கிர ஓரை 08.01 முதல் 09.00 வரை புதன் ஓரை 09.01 முதல் 10.00 வரை
பகல் : குரு ஓரை 12.01 முதல் 01.00 வரை சுக்கிர ஓரை 03.01 முதல் 04.00 வரை புதன் ஓரை 04.01 முதல் 05.00 வரை
இரவு : குரு ஓரை 07.01 முதல் 08.00 வரை
astrology panchangam rasipalan dhinasari 2
இன்றைய ராசிபலன்கள் 02.7.2026
மேஷம்
வெளியூர் பயணத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். உலகியல் நடவடிக்கைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். உயர் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கணவன் மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
அஸ்வினி : லாபகரமான நாள். பரணி : ஒப்பந்தம் சாதகமாகும். கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரிஷபம்
ஆன்மீக பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவுகள் பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். திறமைகளை வெளிபடுத்தி பாராட்டுதல்களை பெறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த வேறுபாடுகள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
கிருத்திகை : வாய்ப்புகள் அமையும். ரோகிணி : அனுபவம் உண்டாகும். மிருகசீரிஷம் : வேறுபாடுகள் நீங்கும்.
மிதுனம்
குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். எதையும் சமாளிக்கும் மனோபலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செயல்படவும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். காப்பீடு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வர்த்தக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : வெளீர் மஞ்சள் நிறம்
சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் பயணங்கள் சென்று வருவீர்கள். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும். பூசம் : முடிவுகள் கிடைக்கும். ஆயில்யம் : நெருக்கம் உண்டாகும்.
சிம்மம்
மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வியில் புதுமையான சூழல் அமையும். போட்டிகளில் ஈடுபாடுகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மகம் : மாற்றமான நாள். பூரம் : எண்ணங்கள் மேம்படும். உத்திரம் : ஈடுபாடுகள் ஏற்படும்.
கன்னி
செல்வ சேர்க்கைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் கவனம் வேண்டும். யூக வணிகத்தில் விவேகத்துடன் செயல்படவும். மனதில் நினைத்த காரியங்கள் கைகூடி வரும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
உத்திரம் : கவனம் வேண்டும். அஸ்தம் : புரிதல் உண்டாகும். சித்திரை : ஆர்வம் ஏற்படும்.
துலாம்
தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். வாகன பழுதுகளை சீர் செய்தீர்கள். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதுமையான வாய்ப்புகளும் சுழலும் அமையும். சுப காரியங்களில் பொறுமையுடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : நெருக்கடிகள் குறையும். சுவாதி : லாபகரமான நாள். விசாகம் : பொறுமையுடன் இருக்கவும்.
விருச்சிகம்
மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். முயற்சிக்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். தந்திரமான சில செயல்கள் மூலம் தேவைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கணவன் மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். பேச்சுக்கள் மூலம் அனுகூலங்கள் ஏற்படும். அலுவலகப் பணிகளில் ஆதரவுகள் மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். குடும்பத்தினரின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கல்வியில் இருந்த மந்தநிலை மறையும். எதிர்கால தொடர்பான சேமிப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
மூலம் : புரிதல் அதிகரிக்கும். பூராடம் : ஆதரவுகள் மேம்படும். உத்திராடம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
மகரம்
உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். துணைவர் பற்றிய சிந்தனைகள் மேம்படும். திறமைகள் வெளிப்பட சாதகமான சூழல் உண்டாகும். வெளியூர் பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும். திருவோணம் : ஆதரவான நாள். அவிட்டம் : அனுபவம் உண்டாகும்.
கும்பம்
எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அலைச்சல்கள் உருவாகும். இனம் புரியாத சிந்தனைகள் மூலம் சோர்வுகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். சில உதவிகள் மூலம் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். நண்பர்களுக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : செம்மஞ்சள் நிறம்
கால்நடை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனைகளில் இருநந்த குழப்பம் மறையும். திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். இணையம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : கவனம் வேண்டும். உத்திரட்டாதி : இன்னல்கள் குறையும். ரேவதி : மதிப்புகள் கிடைக்கும்.
மு.வ உரை: பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.
இன்றைய சிந்தனைக்கு
”யானெனும் செருக்கு மனிதர்க்குப் பகை”
‘நமக்குத்தான் அனைத்தும் தெரியும்’ என்ற செருக்குதான் மனிதனின் முதல் பகைவன், “எம்மால்தான்” அனைத்துமே இயலும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியில்தான் முடியும்…
எந்த மனதில் ‘செருக்கு’ சூழ்ந்திருக்கிறதோ அங்கு சிக்கல்களும் இருக்கும். ’’நான்’’ அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே கொடுக்கும்…
மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது இந்த ‘’நான்’’ எனும் செருக்குதான்… !
பணியிடமாகட்டும், மாமியார் மருமகள் உறவுகளாகட்டும், கணவன் மனைவிடையே ஆகட்டும், இங்கெல்லாம் உறவுமுறை கெடுவதற்கு இந்த கேடான எண்ணங்களே காரணம்…!
நண்பர்களிடையே பிரிவு நிகழ்வதும் இந்த எண்ணங்களினால்தான்…!
இன்று செயல்படுவோம், நாளை செயல்படுவோமா…? என்று நமக்குத் தெரியாது. இப்படியிருக்க, நமக்கு இந்த செருக்கு மிகத் தேவைதானா…? என்று சற்று ஆலோசிக்க வேண்டும்…!
ஆம் நண்பர்களே…!
‘நான்’, ‘எனது’ என்பது அறியாமை…! ‘நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை…!!
?? நாம் வாழ்வில் முழுமையான நிலையினை அடைய விரும்பினால், ‘’நான்’’ எனும் செருக்கினை முழுமையாக அகற்றிவிடுவதே சாலச் சிறந்தது…!??
ஆனி ~ 17 { 1.7.2026 } புதன் கிழமை வருடம் ~ பராபவ வருடம் { பராபவ நாம சம்வத்ஸரம் } அயனம் ~ உத்தராயணம் ருது ~ க்ரீஷ்ம ருது. மாதம் ~ ஆனி மாதம் { மிதுன மாஸம் } பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம். திதி ~ காலை 7.59 AM வரை ப்ரதமை பின் த்விதீயை. நாள்~ புதன் கிழமை { சௌம்ய வாஸரம் } நக்ஷத்திரம் ~ காலை 7.37 AM வரை பூராடம் பின் உத்தராடம். யோகம் ~ மாஹேந்திரம். கரணம் ~ கௌலவம் / தைதுளை. அமிர்தாதியோகம் ~ சுபயோகம். நல்லநேரம் ~ காலை 9.00 AM ~ 10.00 AM & மாலை 2.00 PM ~ 3.00 PM. ராகுகாலம் ~ மதியம் 12.00 NOON ~ 1.30 PM. எமகண்டம் ~ காலை 7.30 AM ~ 9.00 AM. குளிகை ~ காலை 10.30 AM ~ மதியம் 12.00 NOON. நல்ல நேரம் ~ 9.00 to 10.30 AM and 2.00 to 3.00 PM சூரியஉதயம் ~ காலை 5.57 AM. சந்திராஷ்டமம் ~ பகல் 2.08 PM வரை வ்ருஷபம் பின் மிதுனம் சூலம் ~ வடக்கு. பரிகாரம் ~ பால். ஸ்ராத்ததிதி ~ த்விதீயை. இன்று ~
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
thiruvalluvar deivapulavar
இன்றைய (1-7-2026) ராசிபலன்கள்
மேஷம்
கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் லாபங்கள் உண்டாகும். மனதில் குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். நண்பர்கள் வழியில் ஆதரவான சூழல் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அஸ்வினி : லாபகரமான நாள். பரணி : மாற்றங்கள் பிறக்கும். கிருத்திகை : புரிதல் அதிகரிக்கும்.
ரிஷபம்
மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். விவசாய பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் விலகும். மனை சார்ந்த கடன் உதவிகள் கிடைக்கும். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும். ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும். மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
மிதுனம்
உடன் பிறந்தவர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட்கள் மீதான ஈர்ப்பை அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். திட்டமிட்ட காரியத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். முயற்சிகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மிருகசீரிஷம் : திருப்திகரமான நாள். திருவாதிரை : குழப்பம் விலகும். புனர்பூசம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
கடகம்
பணிபுரியும் இடத்தில் அதிகாரிகள் மூலம் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். உறவினர்கள் மூலம் ஆதரவுகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றங்கள் உருவாகும். வர்த்தக தொடர்பான பணிகளில் லாபகரமான சூழ்நிலை காணப்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : அனுகூலமான நாள். பூசம் : ஆதரவுகள் கிடைக்கும். ஆயில்யம் : லாபகரமான நாள்.
சிம்மம்
எந்த ஒரு பணியிலும் விவேகத்தோடு செயல்படவும். சில நினைவுகளால் மனதில் கவலைகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் இடத்தில் கோபப்படாமல் செயல்படவும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். எதிலும் நேர்மறை சிந்தனை உடன் அணுகுவது நல்லது. அலுவலகத்தில் மறைமுக நெருக்கடிகள் தோன்றி மறையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : விவேகத்தோடு செயல்படவும். பூரம் : ஆலோசனை வேண்டும். உத்திரம் : நெருக்கடிகள் மறையும்.
கன்னி
தனவரவில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிவு பெறும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கமும் அன்யோன்யமும் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : இழுபறிகள் குறையும். அஸ்தம் : நன்மையான நாள். சித்திரை : வாதங்களை தவிர்க்கவும்.
துலாம்
ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உறவினர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். மனை விஷயங்களில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சுபகாரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : புரிதல் ஏற்படும். சுவாதி : தாமதங்கள் குறையும். விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம்
வீட்டின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். உத்தியோக பணிகளில் ஆதரவான சூழல்கள் ஏற்படும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் ஈடுபாடுகள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : முடிவுகள் பிறக்கும். அனுஷம் : மாற்றம் உண்டாகும். கேட்டை : ஈடுபாடுகள் ஏற்படும்.
தனுசு
தந்தைவழி உறவினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். சேமிப்புகள் மூலம் ஆதாயகரமான சூழல் உண்டாகும். ஆராய்ச்சி விஷயங்களில் புதுவிதமான சூழல்கள் உருவாகும். கலைதுறைகளில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். உலகியல் நடவடிக்கைகள் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். பயணம் மூலம் புதுவிதமான அனுபவம் லாபமும் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : ஆதரவுகள் கிடைக்கும். பூராடம் : புதுமையான நாள். உத்திராடம் : அனுபவம் கிடைக்கும்.
மகரம்
மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். புதிய நபர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வாழ்க்கைத் துணைவரிடத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். ஆடம்பர செலவுகளால் கையிருப்புகள் குறையும். பணி நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். நினைத்த காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபமும் ஒத்துழைப்பும் மேம்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
எதிலும் தன்னம்பிக்கையோடு செயல்படவும். பயனற்ற சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணிபுரியும் இடத்தில் முன் கோபம் இன்றி செயல்படுவது நல்லது. திடீர் முடிவுகளை எடுப்பதை விட சூழ்நிலை அறிந்து செயல்படவும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
பூரட்டாதி : தன்னம்பிக்கை மேம்படும். உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும். ரேவதி : சூழ்நிலை அறிந்து செயல்படவும்.
ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை. மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை. கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.
சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?
இன்றைய சிந்தனைக்கு…
பயன்படுத்தாத திறமை, தன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும், உனக்குள் இருக்கும் திறமையை, பயன்படுத்து! உன்னால் முடிந்ததை, சிறப்பாக செய்தால், அது திறமை, முடியாததை சிறப்பாக செய்தால், அதுவே தன்னம்பிக்கை!! விழுந்த இலைகளுக்காக, எந்த மரமும், விழுந்து, விழுந்து அழுவதில்லை, புதிய தளிர்களை தந்து, மீண்டும், மீண்டும், தன்னம்பிக்கையோடு தலையாட்டும்!!!
நீண்ட காலம் இந்திய பிரதமராக இருந்தது யார் என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் 2014 ல் பிரதமர் மோடியின் அமோக வெற்றியை பற்றி எனது தந்தை (அமரர்) பிரணாப் முகர்ஜி என்னிடம் கூறிய சுவாரஸ்யமான விஷயம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அப்போது அவர் இந்தியாவின் 13 வது ஜனாதிபதியாக இருந்தார். வெவ்வேறு அரசியல் கருத்தியலைச் சார்ந்தவர்களாக இருந்த போதிலும் அவர்கள் இருவரிடையே சீரிய நல்லுறவு இருந்தது. அதுதான் உண்மையான ஜனநாயகத்தின் அடையாளம்.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மோடிஜி என் தந்தையை சந்திக்க ராஷ்டிரபதி பவனுக்கு வந்தார். பேச்சுவாக்கில் என் தந்தை தேர்தலை பற்றி அவரது கருத்தை கேட்டார். அதற்கு அவர், 30 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் ஒரு அரசியல் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது, என்றார். பிறகு தனக்கேவுரிய சாதுரியத்துடன் என் தந்தை ‘வேறென்ன?’ என்று கேட்டார் . மோடி அமைதியாக இருந்ததை கண்டு என் தந்தை, நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் 2014 முக்கியமானது. அது ஒரு புதிய முகத்தை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளது, என்றார்.
2014 ல் பெரும்பான்மை பலத்தை மக்கள் பாஜகவுக்கு அளித்தது மட்டுமன்றி மோடி இந்திய பிரதமராக வேண்டும் என்று நேரடியாக வழங்கப்பட்ட வெற்றியாகும். மற்ற தேர்தலைகளை போல – பிரதமர் இவர்தான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் ஆனால் ஒரு மாதிரியாக புரிந்து கொள்ளப்பட்டதோ அல்லது வெற்றிபெற்ற உறுப்பினர்கள் பிரதமரை தேர்ந்தெடுக்கும் வழமை போலோ அல்லது தேர்தலுக்கு பின்னர் நடக்கும் கூட்டணி கணக்கோ – இல்லாமல் நேரடியாக வழங்கப்பட்ட மக்கள் தீர்ப்பு அது.
மோடிக்கு முன்பு பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் எப்போதும் மக்கள் தலைவராக இருந்தவர் இல்லை. மாறாக அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால் தெரிந்தெடுக்கப்பட்டவர். பி வி நரசிம்மராவ் , தேவ கௌடா ஆகிய இரண்டு பேரும் பிரதமரானபோது அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக கூட இல்லை. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் மூத்த அரசியல்வாதிகள் பிரதமரானார்கள். இந்திய அரசியலில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியது 2014 தேர்தல். சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் மக்கள் மோடியை தங்கள் பிரதமராக தேர்ந்தெடுத்தனர். ஏறத்தாழ அது ‘ஜனாதிபதி மாடல் தேர்தல்’ போலிருந்தது.
2014 தேர்தலுக்கு முன்பு வரை மோடி தேசிய அரசியலுக்கு புதியவர். மிக நீண்ட காலம் அவர் குஜராத்தின் முதல்வராக இருந்தார். அதனால் தனக்கென ஒரு ஒளிவட்டத்தை ஏற்படுத்திக் கொண்டவர். ஆனால் 2014 தான் அவரது முதலாவது நாடாளுமன்ற தேர்தல். முதல்முறையாக உறுப்பினரான போதே பிரதமராக நாடாளுமன்றத்தில் நுழைந்தது ஒரு முன்மாதிரி. அதற்கு முன்பு யாரும் செய்யாதது. நாடாளுமன்ற (பழைய) கட்டடத்துக்குள் அடி எடுத்து வைத்த போது அவர் அதை உணர்வுபூர்வமாக வணங்கியது கோடிக்கணக்கான இந்தியர்களின் நெஞ்சை தொட்டது.
தேர்தலில் வெற்றி பெறுவதென்பது தனி மனித சாகசமாக எப்போதும் இருந்ததில்லை. அது பற்பல அம்சங்கள் கொண்ட சிக்கலான நடைமுறைகளையும் செயல்பாடுகளையும் கொண்டது. அடிமட்டத்தில் ஊக்கத்துடன் செயல்படும் கட்டமைப்பு பாஜகவுக்கு உள்ளது. வெவ்வேறு ஜாதிகள், சமூக குழுக்களை தொடர்ந்து அணுகக் கூடிய யுக்தியும் அதற்கு உண்டு. தவறுகளை விரைவாக கண்டறியவும் அவற்றை உடனடியாக சரி செய்து கொள்ளும் பழக்கமும் அதற்கு உள்ளது. இவையெல்லாம் அந்த கட்சியை தேர்தல் வெற்றிப்பாதையில் கொண்டு சேர்த்தது. அது மட்டுமல்ல இப்போது அந்த வெற்றிப் பயணம் யாருடைய குறுக்கீட்டினாலும் தடைபடாமல் தொடரும் என்று உறுதியாக தெரிகிறது.
இருந்தாலும், பாஜகவின் வெற்றிக்கு முக்கிய காரணம் மோடி என்பது மறுக்க முடியாத உண்மை. அவர் அடிமட்டத்திலிருந்து தன் கடின உழைப்பாலும் தகுதியாலும் உயர்ந்து வந்த உறுதியான தலைவர் என மக்கள் நினைக்கிறார்கள். காங்கிரசை போன்று வாரிசு உரிமையாக அல்ல. அதிகாரம் குடும்பத்தின் இறுகிய இரும்பு பிடியில் இருக்கும் மாநில கட்சிகளைப் போல் அல்ல. உழைப்பால் உயர்ந்த நிலையை எட்டியவர் என்று கருதுகிறார்கள்.
ஒருவகையில், பாஜகவும் மோடியும் ஒன்றுதான் என்றாகி விட்டது. அண்மையில் நடந்து முடிந்த மேற்கு வங்க மாநில தேர்தல் தொடர்பாக என் நண்பர்களுடன் நடந்த பேச்சுக்களை இங்கு சொல்கிறேன். என்னுடைய உறவினர்கள் பலரும் இன்றும் வெறிபிடித்த காங்கிரஸ் ஆதரவாளர்கள்தான். காங்கிரசுக்கு அந்த மாநிலத்தில் உள்ளது வெறும் 2.9 சதவீத வாக்குகள்தான். எனது உறவினர்களின் பங்களிப்பும் அந்த வாக்கு சதவீதத்துக்குள் அடக்கம்.
என்னுடைய நண்பர்கள் பலரும் தெரிந்தவர்கள் அநேகரும் பாஜகவுக்கு வாக்களித்துள்ளார்கள். தேர்தலுக்கு முன்பு அவர்களிடம் எந்த கட்சிக்கு ஓட்டு போட போகிறீர்கள் என்று கேட்டேன். எல்லோரும் ‘மோடி’க்கு என்றார்கள். இது மாநில தேர்தல், இதில் மோடி போட்டியிடவில்லை என்று நான் அவர்களுக்கு நினைவூட்டினேன் . ‘எல்லாம் ஒன்னுதான்’ என்பது அவர்களின் பதிலாக இருந்தது.
இந்தியாவில் நீண்ட காலம் பதவியின் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடிதான். சுதந்திரத்திற்குப் பிறகு இந்த நாடு கண்ட உறுதியான பிரதமரும் அவர்தான். கூட்டணி பேரம், ஆட்சி கவிழ்ப்பு அச்சுறுத்தலுக்கு விழுந்து விடாமல் வலிமையான, நிலையான கூட்டணி அரசை அவர் நடத்தி வருகிறார். இத்தனைக்கும் இந்த அரசு கூட்டணி கட்சிகளின் ஆதரவை சார்ந்தே இருக்கிறது.
அவருடைய கொள்கைகள் சிலவற்றைப் பற்றியும் மற்றும் அவர் செயல்படும் விதம் குறித்தும் எவருக்கும் முரண்பட்ட கருத்து இருக்கலாம். அது ஜனநாயகத்தில் ஏற்புடையதுதான். ஆனால் மக்களிடையே அவருக்குள்ள ஈர்ப்பு , எழுச்சிமிகு இந்தியாவை உருவாக்க வேண்டும் என இந்திய வாக்காளர்கள் இடையே அவர் ஏற்படுத்தி உள்ள உத்வேகத்துடன் கூடிய பிணைப்பு ஆகியவற்றை எவரும் மறுக்க முடியாது. அது 2019 லும் 2024 லும் வெளிப்பட்டுள்ளது.
நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் ‘மோடி என்ற தகுதி முத்திரை’யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக அவரது செயல்பாடுகள் இருக்க வேண்டுமென்றும் நம் தேசம் உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென்றும் ஒரு சாதாரண குடிமகளாக நான் பிராத்திக்கிறேன்.
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டுரையாளர் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள். எழுத்தாளர். தற்போது பிரணாப் முகர்ஜி லெகசி பவுண்டேசனை நடத்தி வருகிறார்.
ஆன்மீக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். ஆராய்ச்சி பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். துணைவரிடத்தில் சிறுதூர பயணம் சென்று வருவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். பழக்கவழக்க விஷயங்களில் சிறுசிறு மாற்றங்கள் காணப்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : வாய்ப்புகள் அமையும். பரணி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கிருத்திகை : மாற்றங்கள் காணப்படும்.
ரிஷபம்
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். மற்றவர்கள் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். சமூகப் பணியில் இருப்பவர்களுக்கு புதுமையான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
சூழ்நிலை அறிந்து எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்கிறீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். திறமைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். உத்தியோக பணிகளை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் இருந்து வந்த மந்ததன்மை குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிருகசீரிஷம் : அறிமுகங்கள் ஏற்படும். திருவாதிரை : சுறுசுறுப்பான நாள். புனர்பூசம் : மந்ததன்மை குறையும்.
கடகம்
உறவினர்கள் வருகையில் மகிழ்ச்சி உண்டாகும். அனுபவ ரீதியாக பணி சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். கடன் சார்ந்து சில தெளிவுகள் உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். தனவரவில் இருந்து வந்த ஏற்ற இறக்கங்கள் குறையும். நீண்ட கால முதலீடுகள் குறித்த எண்ணம் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும். பூசம் : லாபகரமான நாள். ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.
சிம்மம்
உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். மனைவியுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கூட்டாளிகள் வழியில் ஒத்துழைப்பான சூழல் அமையும். எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மகம் : திறமை வெளிப்படும். பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும். உத்திரம் : சுறுசுறுப்பான நாள்.
கன்னி
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தன வரவுகளில் இருந்து நெருக்கடிகள் குறையும். மனதை உருத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். பிறமொழி மக்களால் ஆதாயம் ஏற்படும். சிந்தனை போக்கில் சில மாற்றம் ஏற்படும். உறவினர்கள் வருகையில் மகிழ்ச்சி உண்டாகும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
உத்திரம் : மகிழ்ச்சியான நாள். அஸ்தம் : ஆதாயம் ஏற்படும். சித்திரை : மேன்மை ஏற்படும்.
துலாம்
சுப காரிய முயற்சிகள் கைகூடும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். தந்தை வழி ஒத்துழைப்புகள் கிடைக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பார்த்து சில உதவிகள் கிடைக்கும். எழுத்து தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
சித்திரை : வாய்ப்புகள் கைகூடும். சுவாதி : ஆதரவான நாள். விசாகம் : மேன்மை ஏற்படும்.
விருச்சிகம்
மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுமக்கள் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கடினமான விஷயங்களையும் எளிமையாக புரிந்து கொள்வீர்கள். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். தோற்றப் பொலிவுகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்
விசாகம் : சாதகமான நாள். அனுஷம் : மகிழ்ச்சி உண்டாகும். கேட்டை : பொலிவுகள் மேம்படும்.
தனுசு
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வியாபாரத்தில் லாபங்கள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் சவாலான சூழ்நிலைகள் தோன்றி மறையும். புதுவிதமான பொருள் சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : ஒத்துழைப்புகள் மேம்படும். பூராடம் : சவாலான நாள். உத்திராடம் : ஆதரவுகள் கிடைக்கும்.
மகரம்
எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். திடீர் பயணங்கள் மூலம் அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். எண்ணிய சில காரியங்கள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
உத்திராடம் : நெருக்கடிகள் உண்டாகும். திருவோணம் : ஏற்ற இறக்கமான நாள். அவிட்டம் : தாமதம் உண்டாகும்.
கும்பம்
மருமகன் வழியில் இருந்து வந்த வேறுபாடுகள் விலகும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடுகள் ஏற்படும். சுப காரியங்களில் இருந்த இடையூறுகள் விலகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கும் புகழும் அதிகரிக்கும். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
வியாபார பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்களுக்கு மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவும். சமூக தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படுதல் அவசியமாகும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஆதரவுகள் திருப்தியை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?
தினம் ஒரு பாசுரம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
திருப்பாற்கடல் திருமழிசையாழ்வார் – பெரிய திருவந்தாதி
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே இயற்றுவாய் எம்மொடு நீ கூடி நயப்பு உடைய நா ஈன் தொடைக் கிளவியுள் பொதிவோம் நல் பூவைப் பூ ஈன்ற வண்ணன் புகழ்
இப்பாசுரத்தில் ஆழ்வார், மனதை முன்னிலைப்படுத்தி, எம்பெருமான் நாராயணனின் பெருமைகளைப் பாடுவதே சிறந்த பணி என்று கூறி, மனதை உற்சாகப்படுத்தி, தம்மோடு இணைந்து பாசுரம் பாட அழைக்கிறார். இது பக்தி மற்றும் ஆத்ம சமர்ப்பணத்தை வலியுறுத்தும் வரிகள். முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே: இறைவனைப் பற்றிப் பேசுவதில் மிகுந்த உற்சாகத்துடன் (முயற்சியை) சுமந்துக்கொண்டு, எழத் துடிக்கும் மனமே! இயற்றுவாய் எம்மொடு நீ கூடி: எங்களுடன் கூடி, பாசுரங்களை இயற்றுவாய். நயப்பு உடைய நா ஈன் தொடை கிளவியுள் பொதிவோம்: இனிமையான தமிழ் பாசுரங்களில், எம்பெருமானின் புகழைப் பொதிந்து வைப்போம். நல் பூவைப் பூ ஈன்ற வண்ணன் புகழ்: காந்தள் மலர் போன்ற திருமேனி கொண்ட நாராயணனின் புகழைப் பாடுவோம்.
முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும் முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும், எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும் வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும், அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும் அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும், தொழுகையும் இவை கண்ட அசோதை தொல்லையின்பத்திறுதி கண்டாளே”
குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி (கண்ணனது பால லீலைகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பல் – 715).
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்… தினசரி .காம்
சிந்தனைக்கு..
உன் மனம் தெளிவாக இருக்கும் வரை, உன்னை எவராலும் வீழ்த்த முடியாது; அடுத்த வாய்ப்பு என்று ஒன்று இருக்கும் வரை, எதற்கும் அஞ்சாதே!
உன்னால் நேற்றை சரி செய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்; கோபம் ஒரு நிமிட ஆவேசம், ஆனால் அதன் விளைவுகள், வாழ்நாள் பாடம்!!
ஏமாற்றங்கள் பழகிப் போகிறதே தவிர, எதுவும் மறந்து போவதில்லை; கழன்று விழும் வரை, சிலரது முகமூடிகளையும், முகம் என, நீ நம்பி கொண்டிருக்கிறாய்!!!
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
இன்றைய (29-6-2026) ராசி பலன்கள்
மேஷம்
தகவல் தொடர்பு துறைகளில் சில மாற்றமான சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அஸ்வினி : மாற்றமான நாள். பரணி : புரிதல் மேம்படும். கிருத்திகை : ஆதரவான நாள்.
ரிஷபம்
வியாபார பணிகளில் விவேகம் வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் சிறு விவாதங்கள் தோன்றி மறையும். இணையம் சார்ந்த முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். திடீர் செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படும். வர்த்தக பணிகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சவாலான பணிகளையும் திறமையுடன் செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களிடம் இருந்த வேறுபாடுகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் அமையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் திருப்திகரமான சூழ்நிலைகள் ஏற்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
புனர்பூசம் : தீர்ப்புகள் கிடைக்கும். பூசம் : ஒத்துழைப்பான நாள். ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்
மறைமுகமான எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். பெருந்தன்மையான செயல்கள் மூலம் நம்பிக்கை மேம்படும். இழுபறியான சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். காப்பீடு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அனுபவப் பூர்வமான பேச்சுக்கள் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மகம் : நம்பிக்கை மேம்படும். பூரம் : சிந்தித்து செயல்படவும். உத்திரம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
கன்னி
பயணங்களில் அனுபவமும் அனுகூலமும் உருவாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். மனை சார்ந்த பணிகளில் லாபம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். செய்கின்ற முயற்சிக்கு உண்டான பலன்கள் ஏற்படும். விதண்டாவாத சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பும் ஆதாயமும் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
உத்திரம் : அனுகூலம் உருவாகும். அஸ்தம் : உதவிகள் கிடைக்கும். சித்திரை : ஆதாயகரமான நாள்.
துலாம்
மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குண நலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பாரம்பரியமான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். உயர்கல்வியில் இருந்த குழப்பங்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
சித்திரை : தன்னம்பிக்கை உண்டாகும். சுவாதி : ஆர்வம் உண்டாகும். விசாகம் : குழப்பங்கள் குறையும்.
விருச்சிகம்
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். புனித தலம் சென்று வருவதற்கான சூழல் ஏற்படும். வழக்கு சார்ந்த அலைச்சல் ஏற்படும். எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும். வீடு, மனை விற்பனையில் லாபம் கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். இணைய துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எழுத்து சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்
சமூகத் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். செய்யும் பணிகளில் கவனத்துடன் இருக்கவும். தேவையற்ற கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். சகோதரர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். தொழிலில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : முன்னேற்றமான நாள். திருவோணம் : அனுசரித்து செல்லவும். அவிட்டம் : செயல்பாடுகள் அதிகரிக்கும்.
கும்பம்
சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும்.. வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு இழுபறியான சில செயல்களை செய்து முடிப்பீர்கள். புதுவிதமான இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சேமிப்பு பணிகளில் லாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : அனுகூலமான நாள். சதயம் : அறிமுகம் கிடைக்கும். பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனம்
வியாபார பணிகளில் லாபங்கள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். பயணம் மூலம் சில மாற்றமான வாய்ப்புகள் உருவாகும். எதிலும் திருப்தி அற்ற மன நிலைகள் ஏற்பட்டு நீங்கும். சமூகத் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
பூரட்டாதி : லாபங்கள் மேம்படும். உத்திரட்டாதி : வாய்ப்புகள் உருவாகும். ரேவதி : மதிப்புகள் மேம்படும்.
தினம் ஒரு திருக்குறள்
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை (1228)
– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.
மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.
ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.
இன்றைய சிந்தனைக்கு…
காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!
நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!
தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!
‘மனதின் குரல் (135ஆவது பகுதி)’ ஒலிபரப்பு நாள் : 28.06.2026 தமிழில் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்
இந்த செய்தி / கட்டுரையின் உள்ளே…
மனதின் குரலின் மகிழ்ச்சி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களோடு இணைவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 2026ஆம் ஆண்டின் முதல் பாதி, நிறைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த இந்த 6 மாதங்களில் நாம் மனதின் குரலிலே, நாட்டுமக்களின் அநேக சாதனைகள் குறித்து விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறோம். ஜூன் மாதத்தில் கூட தேசத்தின் சில சாதனைகள் அரங்கேறியிருக்கின்றன. இவை நாட்டுமக்களை பெருமிதத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. இந்த வெற்றிகள் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் தற்சார்போடு தொடர்புடையவை. தற்போது தான் கோல்காத்தாவிலே, கடற்படையோடு தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அங்கே ஐஎன்எஸ் தூனாகிரி, ஐஎன்எஸ் சன்ஷோதக் மற்றும் ஐஎன்எஸ் அக்ரய் ஆகிய போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட்டன. இந்தக் கப்பல்களின் வடிவமைப்பும், தயாரிப்பும், அனைத்துமே நம் நாட்டிலேயே ஆனவை.
டிஆர்டிஓ – தற்சார்பு பாரதம்
நண்பர்களே, ஜூன் மாதத்திலே தான் விமானத்துறையிலேயும் கூட, தேசம் பெரிய வெற்றியை ஈட்டியிருக்கிறது. சி-295 என்ற இந்த விமானம் முழுவதுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது, மேலும் இந்த சி-295 விமானம் தனது முதல் வான் பயணத்தை நிறைவு செய்திருக்கிறது, இப்படி 40 விமானங்கள் பாரதத்திலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் சிறுகுறுநடுத்தரத் தொழில்துறை மற்றும் வான்வெளித்துறைக்கு புதிய சக்தி கிடைத்திருக்கிறது. வேலைவாய்ப்புக்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றன. இதோடு கூடவே, தற்சார்பு பாரதம் என்ற உள உறுதிப்பாடும் உறுதிப்பட்டுக்கொண்டு வருகிறது. இந்த மாதம் தான், டிஆர்டிஓ நிறுவனம், உள்நாட்டுத் தயாரிப்பான நீண்டதூர தரைத்தாக்குதல் க்ரூஸ் ஏவுகணையின் வெற்றிகரமான பரிசோதனையை நிறைவு செய்திருக்கிறது. இதனை டிஆர்டிஓவின் பரிசோதனைக்கூடங்களும், இந்திய தொழில்துறைக் கூட்டாளிகளும் இணைந்து உருவாக்கி இருக்கின்றார்கள். அதாவது, இன்று கடல் தொடங்கி, வானம் வரை பாரதம் அதிக அளவிலே பாதுகாப்பாகவும், தற்சார்பு உடையதாகவும் ஆகி வருகிறது.
யோகாவில் முதலிடம்
நண்பர்களே, ஜூன் மாதத்திலேயே நடந்த ஒரு நிகழ்ச்சியிலே, ஒட்டுமொத்த உலகின் முயற்சிகளும் பாரதத்தோடு இணைந்தது; இந்த நிகழ்ச்சி தான் சர்வதேச யோகக்கலை தினம். இந்த முறை உலகின் 2500க்கும் மேற்பட்ட இடங்களிலே யோகக்கலையோடு தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நமது தேசத்திலே கோடிக்கணக்கான மக்கள், பல இடங்களில் யோகக்கலை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்டார்கள். இந்த மாதம் தான், அஹமதாபாதிலே ஏற்பாடு செய்யப்பட்ட உலக யோகாசன சேம்பியன்ஷிப் கூட பெரிய அளவில் விவாதப்பொருளானது. இதிலே பாரதம் மொத்தமாக 114 பதக்கங்களை வென்றிருக்கிறது, இதிலே 102 தங்கப் பதக்கங்களும் அடங்கும். பாரதம் இந்தப் போட்டியின் பதக்கப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. நான் வெற்றி பெற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பலப்பல பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம். மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது. தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்திதான், பாரதத்தின் மிகப்பெரிய மூலதனம், இந்த மக்கள் பங்களிப்பினை நாம் மீண்டும்மீண்டும் அனுபவித்து வருகிறோம்.
வேண்டுகோளை செவிசாய்த்த மக்கள்
நண்பர்களே, மேற்கு ஆசியாவிலே மூண்டிருக்கும் போரைக் காணும் போது, நான் நாட்டுமக்களிடம் சில வேண்டுகோள்களை விடுத்தேன். எத்தனை முடியுமோ, சிலகாலம் வரை தங்கம் வாங்குவதைத் தவிருங்கள் என்று கேட்டுக் கொண்டேன். அயல்நாடுகளுக்கு உல்லாசப்பயணம் மேற்கொள்வதைத் தவிருங்கள், குழுவாகக் கார்களில் பயணிக்கும் கார் பூலிங் முறைக்கும் ஊக்கமளியுங்கள், இரசாயனம் இல்லா விவசாயத்தை மேற்கொள்ளுங்கள், நிலத்தைக் காக்கவும், இயற்கை உரங்களை அதிக அளவில் பயன்படுத்துங்கள் என்று விவசாயிகளிடம் கேட்டு கொண்டேன். நண்பர்களே, என்னுடைய இந்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, அவர்கள் இதற்கு ஆதரவு அளித்ததோடு மட்டுமல்லாமல், இதிலே தங்களுடைய ஒத்துழைப்பையும் கூட அளித்திருக்கிறார்கள் என்பதற்கு நான் என் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். பல குடும்பங்கள் எனக்குச் செய்திகள் அனுப்பித் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்தும் கொண்டிருக்கிறார்கள். இந்த முறை இல்லத் திருமணங்களிலே தங்கம் வாங்கப் போவதில்லை என்றும் எவ்வளவோ குடும்பங்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். தேவை வருமானால் பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்து புதிய நகைகளை உருவாக்குவோம் என்று தீர்மானித்தார்கள். எப்படி இந்த முறை அயல்நாட்டுப்பயணத்தை ஒத்திப் போட்டதாக எத்தனையோ பேர், சமூக வலைத்தளங்களிலும் கூட பதிவு செய்திருந்தார்கள்.
நண்பர்களே, கார் பூலிங் தொடர்பாக, அதாவது ஓர் காரிலே, ஒரே இடம் செல்வோர் பலர் ஒன்றாகப் பயணிப்பது தொடர்பாகவும் பலர் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். யாரெல்லாம் தனித்தனியாக ஒவ்வொரு நாளும் ஒரே திக்கிலே செல்கிறார்களோ, அவர்கள் இப்போது ஒன்றாகப் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மக்கள் முடிந்தமட்டிலே பேருந்து அல்லது மெட்ரோவினைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் சேமிக்கப்படுகிறது. இதைப் போலவே, தேசத்தின் பல்வேறு பாகங்களில் இயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரிப்பது தொடர்பான செய்திகளும் வந்தவண்ணம் இருக்கின்றன. நண்பர்களே, உலக அளவிலான இந்தச் சங்கடத்தை பாரதநாட்டவர் நாமனைவரும் இணைந்து எதிர்கொண்டு வருகிறோம் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. மக்கள் பங்களிப்பின் இந்தச் சக்தி நமக்கு பலத்தை அளிக்கும், வெற்றியை உரித்தாக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
மனம் நிறைந்த திருமணப் பரிசு
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நமது தேசத்திலே பிறந்தநாள், திருமணம் போன்றவை குடும்ப நிகழ்ச்சிகளாக இருப்பதோடு கூடவே, ஒட்டுமொத்த சமூகத்தின் கொண்டாட்டங்களாகவும் ஆகின்றன. ஒவ்வொரு குடும்பமுமே, அதன் மகிழ்ச்சியை மற்றவர்களோடு பகிர வேண்டும் என்றே விரும்புகிறது. மக்கள் விருந்தாளிகளுக்குப் பரிசுகளையும் அளிக்கிறார்கள். நண்பர்களே, மகாராஷ்டிரத்தின் நாந்தேடில் ஒரு குடும்பம் தனது சந்தோஷங்களைப் பகிரும் வகையில் செய்த செயல் இப்போது விவாதப்பொருளாகி இருக்கிறது. இங்கே நாந்தேடின் பஹாதுர்புரா கிராமத்திலே பேட்கர் குடும்பம் வசித்து வருகிறது. சந்தோஷங்களைப் பகிர வேண்டுமென்றால், சங்கட வேளையிலே எந்த ஒரு குடும்பத்துக்கும் கைகொடுப்பதாக இருக்கக்கூடிய ஒரு பொருளை நாம் அளிக்க வேண்டும் என்று இந்தக் குடும்பம் சிந்தித்தது. தங்கள் இல்லத் திருமண விழாவிலே இந்தக் குடும்பம் கிராமத்தின் கிட்டத்தட்ட 3,500 மக்களுக்கு விபத்துக்காப்பீட்டிற்கான ஏற்பாட்டினைச் செய்தது. ஒவ்வொரு நபருக்கும் ஒரு இலட்சம் ரூபாய் வரையிலான ஆயுள் காப்பீட்டினை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த முன்னெடுப்பின் பின்புலத்தில் இருந்த உணர்வு உள்ளத்தைத் தொடும் வகையில் இருந்தது. விபத்திற்குப் பிறகு குடும்பங்கள் பொருளாதாரச் சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதை இந்தக் குடும்பத்தார் கவனித்தார்கள். இத்தகைய வேளையிலே ஒரு சின்னச்சிறிய உதவிகூட, பேராறுதலாக ஆகிறது.
அரசின் காப்பீட்டுத் திட்ட பலன்
நண்பர்களே, தேசத்தின் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு அரசாங்கம் பாதுகாப்புக் கவசத்தைக் கொண்டு சேர்த்து வருகிறது. பிரதம மந்திரி விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின்படி, வருடந்தோறும் 20 ரூபாய் பிரீமியம் அதாவது ஆண்டொன்றுக்கு 20 ரூபாய் மட்டுமே பிரீமியம் தொகை செலுத்துவதன் வாயிலாக, இரண்டு இலட்சம் ரூபாய் வரையிலான விபத்துக்காப்பீட்டினை உறுதி செய்கிறது. இதுவரை இந்தத் திட்டத்திலே 58 கோடிக்கும் மேற்பட்டோர் இணைந்திருக்கிறார்கள். இவர்களில் கிட்டத்தட்ட 28 கோடிக்கும் மேற்பட்டோர் தாய்மார்கள், சகோதரிகள், பெண்கள். இந்தத் திட்டத்தின் வாயிலாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை கிடைத்திருக்கும் உதவித்தொகை 3,700 கோடி ரூபாய்க்கும் அதிகமானது.
நண்பர்களே, பிரதம மந்திரி ஜீவன் ஜோதி ஆயுள் காப்பீட்டுத் திட்டமும் இதைப் போலவே முக்கியமானது. இந்தத் திட்டத்தின்படி, ஒரு நபர் துரதிர்ஷ்டவசமாக இறக்க நேர்ந்தால், அவருடைய குடும்பத்திற்கு இரண்டு இலட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டு உத்திரவாதம் உறுதி. இதற்கான வருடாந்திர பிரீமியம் வெறும் 436 ரூபாய் மட்டுமே. அதாவது ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஒண்ணரை ரூபாய் மட்டுமே. இந்தத் திட்டத்தோடு இதுவரை 27 கோடிக்கும் அதிகமானோர் இணைந்திருக்கிறார்கள். இதன் மூலம் தேசத்தின் சுமார் 11 இலட்சம் குடும்பங்களுக்குக் கிட்டத்தட்ட 22,000 கோடி ரூபாய் உதவி கிடைத்திருக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்கள் மிகவும் பெரியவை. இந்தப் புள்ளிவிவரங்களின் பின்னணியில், இலட்சக்கணக்கான குடும்பங்களின் சொந்தக் கதைகள்-சோகக்கதைகள் பல உண்டு. ஏதோ ஒரு தாயால் தன்னுடைய குழந்தைகளின் படிப்பிற்கு உதவி கிடைக்கிறது, ஏதோ ஒரு மனைவிக்குத் தன் குடும்பப் பொறுப்புக்களைச் சமாளிக்கத் தேவையான உதவி கிடைக்கிறது. நண்பர்களே, பலமுறை, பெரிய அளவிலான பாதுகாப்பின் தொடக்கம் மிகவும் சிறிய அளவு நிதி மற்றும் சின்னதொரு முன்னெடுப்பால் தான் சாத்தியப்படுகிறது. ஒரு சிறிய தீர்மானம், மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் அனைவரிடமும் நான் வேண்டிக் கொள்கிறேன், நீங்கள் உங்கள் குடும்பத்திலே இந்தத் திட்டங்களைப் பற்றிய தகவல்களைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, மனதின் குரலில் நாம் இப்போது பேச இருக்கும் சிறியதொரு விஷயம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித சமூகத்திலே பீடமிட்டு அமர்ந்திருக்கிறது. அது தான் மூடநம்பிக்கை. மூடநம்பிக்கை என்பது பல வேளைகளில் தவறான புரிதல் மட்டுமல்ல. அது பயத்தை ஏற்படுத்துகிறது, எப்போது பயம் மனதில் பீடிக்கிறதோ, மனிதன் வாய்மையைக் காண மறுக்கிறான். மூடநம்பிக்கையில் மூழ்கிய மனிதர்கள், பிறகு எந்த ஆதாரமோ, உண்மை அம்சமோ இல்லாமலேயே, முடிவுகளை எடுக்கிறார்கள், இதனால் பெரும் தீமைகள் விளைகின்றன. ஆனால், அறிவியல், அனுபவம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலே இந்த நம்பிக்கைகளுக்கு சவால் விடுக்கும் மனிதர்களும் அதே சமூகத்திலே இருக்கிறார்கள். மூடநம்பிக்கை தொடங்கி நம்பிக்கை வரையிலான இந்தப் பயணம் எளிதானது அல்ல, இன்று இப்படிப்பட்ட ஒரு வெற்றிப் பயணம் பற்றித் தான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
மங்கலமான பறவை
நண்பர்களே, அசாமிலே ஒரு பறவையைக் காண முடியும், அதன் பெயர் ஹர்கிலா. ஹர்கிலா ஒரு அரியவகைப் பறவை. இயற்கையைத் தூய்மையாக வைத்திருப்பதில் முக்கிய பங்காற்றுகிறது இந்தப் பறவை. ஆனால் அசாமின் சில பகுதிகளில் நீண்ட காலமாகவே இது அமங்கலமான பறவையாகக் கருதப்பட்டது. தங்கள் அக்கம்பக்கங்களில் இதைக் காண்பதை மக்கள் விரும்புவதில்லை. இந்த ஹர்கிலாவின் கூடுகள் இருக்கும் மரங்களைக்கூட பல வேளைகளில் அவர்கள் வெட்டி விடுவதும் உண்டு. சுற்றுச்சூழலின் தூய்மைக்கு உதவும் ஒரு பறவையான ஹர்கிலாவை மக்கள் பயத்தின் காரணமாக வேட்டையாடி வருகிறார்கள். அறிவியலாரான பூர்ணிமா தேவி பர்மன் அவர்கள் இவை அனைத்தையும் கவனித்தார்கள். மக்கள் மனதிலே இருக்கும் இந்தத் தவறான எண்ணத்தை மாற்ற உறுதி பூண்டார் அவர். பெண்களுடன் உரையாடினார், அறிவியல்ரீதியான சான்றுகளை அளித்துப் புரிய வைத்தார், மெல்லமெல்ல பெண்கள் இந்த இயக்கதோடு தங்களை இணைத்துக் கொள்ளத் தொடங்கினார்கள். பிறகு ஒரு பெரிய மாற்றம் ஏற்படத் தொடங்கியது. எந்தப் பறவை ஒருகாலத்தில் அமங்கலமானது என்று விரட்டப்பட்டதோ, அதுவே கிராமங்களின் அடையாளமாக ஆகிப் போனது. ஆயிரக்கணக்கான ஊரகப்பகுதிப் பெண்கள் ஹர்கிலாவைக் காப்பாற்ற முன்வந்தார்கள். இன்று இவர்கள் ஹர்கிலா படை என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்கள். இந்தப் பெண்கள் சமூகத்திற்கு எதிராகப் போராடினார்கள். சமூகத்திற்குப் புரியவைக்க இரவுபகலாகச் செயல்பட்டார்கள், மூடநம்பிக்கையைப் புறந்தள்ளினார்கள். சரியான தகவல் கொண்டு சேர்க்கப்பட்டால், பல்லாண்டுக்காலப் பழமையான எண்ணத்தைக் கூட மாற்றிவிட முடியும் என்பதை அவர்கள் செய்து காட்டினார்கள்.
இது பேபி லீக் அல்ல!
நண்பர்களே, யார் விளையாடுகிறார்களோ, அவர்கள் வெல்கிறார்கள் என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு. இன்று தேசத்திலே இப்படிப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது. முந்தைய காலத்தோடு ஒப்பு நோக்குகையில், இப்போது அதிக அளவிலான இளைஞர்கள் விளையாட்டுக்களைத் தங்களுடைய தொழிலாகவே ஏற்றுக் கொண்டு வருகிறார்கள். நாகாலாந்தில் நடந்த இரண்டு மிகவும் சுவாரசியமான விஷயங்கள் குறித்த தகவல்கள் எனக்குக் கிடைத்திருக்கிறது. முதல் முயற்சி, நாகாலாந்து பேபி லீக். பெயரைக் கேட்டவுடனேயே இது சிறிய குழந்தைகள் தொடர்பான சாதாரண கூட்டிணைவாக இருக்கும் என்று தோன்றலாம், ஆனால் அப்படி அல்ல. இது 5 முதல் 10-12 வயதுடைய சிறிய குழந்தைகளுடைய ஒரு அசாதாரணமான கூட்டிணைவாகும். இந்தக் குழந்தைகளுக்கு, கால்பந்தாட்டக்காரர்களின் கூட்டிணைவோடு ஒரு தொடர்பு இருக்கிறது; அவர்கள் இவர்களுக்கு வேகம் மற்றும் திறமைகளை வளர்த்துக் கொள்ள உத்வேகம் அளிக்கிறார்கள், அவர்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். இதன் தொடக்கம் நாகாலாந்தின் அதிகப்படியான குழந்தைகளைக் கால்பந்தாட்டத்தோடு இணைப்பதற்காக செய்யப்பட்டது. 5 முதல் 12 வயதுடைய ஆண்-பெண் குழந்தைகள் இதிலே கலந்து கொள்ள முடியும். இந்தக் கூட்டிணைவு இப்போது 3 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டது. இந்தக் கூட்டிணைவு குழந்தைகளின் மனதிலே கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நாகாலாந்தின் பெண்கள் ஃபுட்சால்
நண்பர்களே, நாகாலாந்திலே மேலும் ஒரு நல்ல முயற்சி நடந்தேறி வருகிறது. இதன் பெயர் நாகாலாந்து பெண்கள் ஃபுட்சால் கூட்டிணைவு. உங்களுக்கு வேண்டுமானால் இந்த ஃபுட்சால் என்பது புதிய பெயராக இருக்கலாம், ஆனால் ஃபுட்சால் என்பது உள்ளரங்குக் கால்பந்தாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இதிலே தலா ஒரு அணியில் ஐந்து வீரர்கள் மட்டுமே இருப்பார்கள். விளையாட்டு மைதானமும் கூட கால்பந்தாட்டக் களத்தை விட மிகவும் சிறியதாக இருக்கிறது. இதன் காரணத்தால் ஆட்டக்காரர்கள் விரைந்து முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் தங்களுடைய உத்திகளையும், திறன்களையும் சிறப்பான வகையிலே பயன்படுத்தியாக வேண்டியிருக்கிறது. நாகாலாந்தின் பெண்கள் ஃபுட்சால் கூட்டிணைவு, தங்களுடைய திறமைகளை வெளிக்காட்ட நமது பெண்களுக்கு அருமையான சந்தர்ப்பமாக இருக்கிறது. இத்தகைய முன்னெடுப்புக்களுக்காக நான் நாகாலாந்தின் மக்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். இத்தகைய முயற்சிகள், தேசத்தின் பிற பாகங்களுக்கும் உள்ளெழுச்சியை அளிக்கிறது.
நாலந்தா பல்கலையின் புதிய அவதாரம்
நண்பர்களே, இது தொழில்நுட்ப யுகம். நாள்தோறும் ஆய்வுகள் நடந்தேறி வருகின்றன. புதிய புதிய செயற்கை நுண்ணறிவுக் கண்டுபிடிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்த வேளையிலே ஒரு கேள்வி மிகவும் மகத்துவம் வாய்ந்தது, அதாவது மக்களின் படைப்பாற்றலை எவ்வாறு பாதுகாத்துப் பராமரிப்பது என்பது தான். புதிய தொழில்நுட்பத்தோடு கூடவே முன்னேறும் அதே வேளையிலே நாம் நமது வேர்களோடும் எப்படி இணைந்திருப்பது? இந்த வினாக்களுக்கான விடையை, நாலந்தா பல்கலைக்கழகத்தார் தேடிக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நம்முடைய நாலந்தா பல்கலைக்கழகம் இப்போது புதிய அவதாரம் எடுத்து, பாரதத்தின் எதிர்காலத்திற்கு உரமூட்டி வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நாலந்தா பல்கலைக்கழக புதிய வளாகத்தை மக்களுக்கு அர்ப்பணித்து வைக்கும் வாய்ப்புக் கிட்டியது. நாலந்தா பல்கலைக்கழகம் வாதவிவாதங்களில் ஈடுபடும் நமது பழைய மரபினை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார்கள்.
வாதவிவாதங்களில் ஈடுபடுதல் என்பது ஏதோ தனது தரப்பை முன்வைப்பதற்கான ஊடகம் மட்டுமல்ல. இந்த வாதவிவாதங்கள், இந்தக் கடைசல் என்பன ஒழுங்குமுறையோடுகூடிய செயல்பாடு. இதிலே தர்க்கத்தோடு கூடவே, ஆதாரங்களுடன், அவரவர் தத்தமது வாதங்களை-கருத்துக்களை முன்வைப்பது அவசியம், அதிலே திறமைசாலிகளாக இருக்கவும் வேண்டும். மற்றவர்களின் கருத்துக்களைப் பொறுமையோடு கேட்டுக் கொண்டு, புரிந்து கொள்ளும் கற்றலும் கூட இந்த வாதவிவாதச் செயல்பாட்டில் கிடைக்கிறது. நாலந்தா பல்கலைக்கழகத்தார் தங்களுடைய பட்டமளிப்பு விழாவின் ஒரு அங்கமாக ஆக்கியிருக்கிறார்கள் என்பது எனக்குக் களிப்பை அளிக்கிறது.
இதிலே கலந்து கொண்டவர்களில், பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பண்டைய பாரம்பரியத்தை இன்றைய காலகட்டத்தோடு இணைக்கும் ஒரு முயற்சி என்பது மிகவும் பாராட்டப்பட வேண்டியது. இதன் பொருட்டு நான் நாலந்தா பல்கலைக்கழகத்தாருக்குப் பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட முன்னெடுப்புக்கள் தொடர்பாக நீங்களும் சிந்தனை செய்யலாம் என்று நான் நாட்டின் பிற பல்கலைக்கழகங்களிடத்திலும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
சுய செயற்கை நுண்ணறிவு
நண்பர்களே, வேர்களோடு இணைந்திருக்கும் அதே நேரத்தில் இளைஞர்களைப் புதிய தொழில்நுட்பத்திற்காகவும் தயார் செய்வது என்ற மேலும் ஒரு நல்ல முயற்சி நடைபெற்று வருகிறது. தில்லியில் இருக்கும் மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகம், செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் துறைகளில் பி.டெக் – தொழில்நுட்பத்தில் இளநிலைப் படிப்பைத் தொடங்க இருக்கிறது. நவீன தொழில்நுட்பத்தோடு பாரதத்தின் பாரம்பரியமான ஞானத்தை இணைக்கும் திசையில் ஒரு மகத்துவம் வாய்ந்த படியாகும். இதனால் பாரதநாட்டு மொழிகளுக்கு, புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் தயாரித்தளிப்பதில் உதவிகரமாக இருக்கும். நமது பண்டைய நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை டிஜிட்டல்மயமாகச் செய்து பாதுகாக்கும் பணிக்குப் புதிய வேகம் கிடைக்கும். மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தாருக்கு இந்த முயற்சி தொடர்பாக நான் பலப்பல நல்வாழ்த்துக்களை அளிக்கிறேன்.
பாரத கலாசாரத் தூதுவர்கள்
நண்பர்களே, இன்று பாரதநாட்டுக் கலாச்சாரமானது உலகின் பல்வேறு பாகங்களைச் சென்றடைந்து வருகிறது. நமது பாடல்கள், இசை மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றை உலகத்தார் அனைவரும் அறிந்து வருகிறார்கள், ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். பாரதத்திலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலான கரிபியன் கடற்பகுதியிலே டொமினிகன் ரிபப்ளிக் என்ற பெயரிலான ஒரு தேசம் உண்டு. அங்கே பாரத நாட்டவரின் எண்ணிக்கை சுமார் 100 இருக்கலாம், இன்னும் குறைவாகவும் இருக்கலாம். இதையெல்லாம் தாண்டி, பாரதநாட்டுக் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தோடு தொடர்புடைய ஒரு மிக அருமையான முயற்சி அங்கே நடந்து வருகிறது. அங்கே ஸ்பானிஷ் மொழி பேசும் சிலர் ஒரு புதிய குழுவை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தக் குழுவின் பெயர், பிரும்மகமல் டொமினிகானா.
குழுவின் உறுப்பினர்கள் இணைந்து வேதகால இலக்கியத்தைப் படிக்கிறார்கள். இவர்கள் வேத மந்திரங்களின் உச்சரிப்பு வெளிப்பாட்டையும் கற்று வருகிறார்கள். இதற்கான எந்தவிதமான முறையான பயிற்சியும் இவர்களிடம் இல்லை. ஆனால் இவர்கள் ஒலிப்பதிவுகளைக் கேட்டு வேத மந்திரங்களின் சரியான உச்சரிப்பு வெளிப்பாட்டைக் கற்றிருக்கிறார்கள். இன்று இவர்கள் பல மந்திரங்களை மிகச் சிறப்பாக ஜபித்து வருகிறார்கள். இவற்றில் புருஷ சூக்தம், ஸ்ரீ சூக்தம், ஸ்ரீ ருத்ரம், துர்கா சூக்தம், தேவி மகாத்மியம் ஆகியன அடங்கும்.
பாரதத்திலிருந்து இத்தனை தொலைவில் இருந்தும்கூட, நமது பாரம்பரியங்களைக் கற்கும் அவர்களின் இந்த முயற்சி மிகவும் கருத்தூக்கமளிக்கவல்லது. பிரும்மகமல் டொமினிகானா குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும், அவர்களின் முயற்சிகளுக்கும் நான் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரதநாட்டுக் கலாச்சாரத்தை உலகில் மிகவும் விரும்பப்படுவதாக ஆக்குவதில் தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபடும் அனைவரையும் நான் இதயப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்.
வேர்ப் பாலங்கள்
எனதருமை நாட்டுமக்களே, மேகாலயத்தின் அடையாளம் மேகங்களோடு, அழகான காட்சிகளோடு. யார் மேகாலயா மாநிலம் செல்கிறார்களோ, அங்கிருப்போரின் இயல்பான அன்புபாராட்டும் தன்மை நீண்டகாலம் வரை மனதை வருடிக் கொடுக்கும். ஆனால் மேகாலயத்தின் மேலும் ஒரு சிறப்பம்சம் ஒன்று குறித்து இன்றைய மனதின் குரலில் நாம் விவாதிக்க இருக்கிறோம். அது தான் மேகாலயத்தின் Root Bridge. இது பாதையைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் Route-ரூட் அல்ல, வேர்களைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் Root-ரூட். அதாவது வேர்ப்பாலம். இந்த வேர்ப்பாலங்களின் கதை மிகவும் சுவாரசியமானது.
இந்தப் பாலங்கள் சில நாட்களிலோ, சில ஆண்டுகளிலோ உருவாவதில்லை. இந்த வேர்கள் நீர்ப் பெருக்குகளைத் தாண்டி கொண்டு செல்லப்படுகிறது. காலப்போக்கில் இதுவே ஒரு பலமான பாலமாக ஆகிறது. இந்தப் பாலங்களுக்கு மேலும் ஒரு சிறப்பம்சம் உண்டு. இவை வாழும் பாலங்கள். காலப்போக்கில் இவை மேலும் பலமடைகின்றன. இவற்றிலே மேகாலய மக்களின் படைப்புத்திறனை நம்மால் பார்க்க முடிகிறது. இவற்றின் பின்னணியிலே பல்லாண்டுக்கால பொறுமை மற்றும் இயற்கையின்பால் ஆழமான மரியாதை புலனாகிறது.
மனிதன் இயற்கையோடு இணைந்தால் எத்தனை அற்புதமான பொருட்களை உருவாக்க முடியும் என்பதை இந்தப் பாலங்கள் நமக்கு உரைக்கின்றன. இவை நமது தேசத்தின், இந்த மண்ணின் மரபுகள். யுனெஸ்கோ அமைப்பின் உலக மரபுசார் இடங்கள் வலைப்பின்னலில் மேகாலயத்தின் வேர்ப்பாலங்களை இணைக்க வேண்டும் என்று பாரதம் விண்ணப்பித்திருக்கிறது.
நண்பர்களே, சூழல் மாற்றம் காரணமாக இந்த வேர்ப்பாலங்கள் முன்பாக பல சவால்களும் எழுகின்றன. இப்படிப்பட்ட வேளையிலே, மேகாலய மாநில மக்கள், இந்த இயற்கை மரபுச் சின்னங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை மிகச்சிறப்பாக நிறைவேற்றி வருகின்றார்கள். இப்படிப்பட்ட பாலங்களின் எண்ணிக்கை என்ன என்பதைத் தெரிந்து கொள்வது கூட எளிதாக இருக்கவில்லை. பிறகு உள்ளூர் மக்கள் இத்தகைய பாலங்களின் எண்ணிக்கை மீது கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். இதன் பிறகு சமூகங்கள், இந்தப் பாலங்களின் பராமரிப்புத் தொடர்பான தங்களுடைய பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். இன்று உள்ளூர் மக்கள், 120க்கும் அதிகமான வேர்ப்பாலங்களைப் பராமரித்து வருகின்றார்கள். சில குழுக்கள் ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பாலங்களின் நிலைமையை ஆராய்ந்து வருகிறார்கள். சிலர் தங்களுக்கு அருகிலே இருக்கும் பகுதிகளை பலப்படுத்த Nursery-நாற்றுப்பண்ணையை தயார் செய்து வருகிறார்கள்.
இதைப் போலவே இவற்றின் பாதுகாப்பிற்காக வேண்டி ஒரு மொத்த சூழலமைப்பே தயாராகி விட்டது. இந்த ஆண்டு ஹைலீ வார் அவர்களுக்கு பத்ம விருது அளித்து கௌரவிக்கப்பட்டிருப்பதை நீங்களே கவனித்திருக்கலாம். தனது வாழ்க்கையின் 50க்கும் அதிகமான ஆண்டுகளை இந்த வேர்ப்பாலங்களைப் பராமரிப்பதிலேயே செலவு செய்திருக்கிறார். அவருடைய அர்ப்பணிப்பு உணர்வு நம்மனைவருக்கும் உத்வேகம் அளிக்கவல்லது. நண்பர்களே, நீங்கள் எப்போதேனும் இந்த வேர்ப்பாலங்களில் பயணித்திருந்தீர்கள் என்றால், கண்டிப்பாக அதன் படங்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய படங்கள் மற்றவர்களுக்கும், மேகாலயத்தின் இந்த அற்புதமான மரபு பற்றித் தெரிந்து கொள்ள உத்வேகம் அளிக்கும்.
சூழலியலின் புத்துணர்ச்சி
எனதருமை நாட்டுமக்களே, நமது கிராமங்கள் தூய்மையாக இருக்க வேண்டும், நமது நகரங்கள் அழகாகக் காட்சியளிக்க வேண்டும் என்று நாமனைவரும் விரும்புகிறோம். ஆனால், நம்மருகே திரளும் குப்பையை யார் சுத்தம் செய்கிறார்கள் என்பதை நாம் யாராவது யோசித்திருப்போமா? இது மற்றவர்களுடைய பொறுப்பு, அவர்கள் சுத்தமாவதைப் பார்த்துக் கொள்வார்கள் என்று பெரும்பாலானோர் கருதுகிறார்கள். ஆனால், தங்களுடைய சிந்தனை வாயிலாக நமக்கு உள்ளெழுச்சி அளிக்கவல்ல சிலர் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். மத்திய பிரதேசத்தின் ராஜ்கட் மாவட்டத்தைச் சேர்ந்த பியாவராவின் சில சகோதரிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது.
இவர்கள் தங்களுக்கு அருகிலே பரவிக் காணப்படும் நெகிழிக் குப்பைகளை அகற்ற உறுதி பூண்டார்கள். எல்லாம் மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று அவர்கள் கருதவில்லை. இவர்கள் தாங்களே நகர்முழுவதிலிருந்தும் நெகிழிக் குப்பைகளையும், காலி பாட்டில்களையும் சேகரிக்கத் தொடங்கினார்கள். மெல்லமெல்ல இந்த முயற்சி முன்னேறிச் செல்லத் தொடங்கியது, பிறகு அந்த நெகிழி சூழலுக்கு நேசமான செங்கற்களாக உருவாகத் தொடங்கியது. இன்று இதே சூழலுக்கு நேசமான செங்கற்களின் பயன்பாடு பொதுவிடங்களுக்கு அழகு சேர்க்கப் பயன்பட்டு வருகிறது.
ராஜ்கட்டிலே கடந்த சில மாதங்களாக பல்லாயிரக்கணக்கான கிலோ அளவிலான நெகிழிகள் மறுசுழற்சி செய்யப்பட்டு அவை சிறப்பான வகையிலே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதாவது, எந்த நெகிழி முன்பெல்லாம் நகரை மாசுபடுத்தி வந்ததோ, அதுவே இன்று இந்தச் சகோதரிகளின் முயற்சியால் நகரின் அழகை அதிகரிப்பதில் பங்காற்றி வருகிறது. பியாவ்ராவின் அனைத்து சகோதரிகளுக்கும், இந்த இயக்கத்தோடு இணைந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுதேசி மண் பிள்ளையாரையே விற்கவும்; வாங்கவும்!
என் மனம்நிறை நாட்டுமக்களே, ஒரு சிறப்பான விஷயம் குறித்துப் பேச எனக்குப் பலர் கடிதங்கள் வாயிலாக ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள். இந்த விஷயம் கணேச உற்சவத்தோடு தொடர்புடையது. பார்க்கப்போனால் பிள்ளையார் சதுர்த்திக்கு இன்னும் போதுமான நேரம் இருந்தாலும், இந்த விஷயம் குறித்து இப்போது விவாதிக்கப்பட வேண்டும் என்று பலர் என்னிடம் விண்ணப்பித்திருந்தார்கள். உள்ளபடியே, பிள்ளையார் சிலைகளை உருவாக்கும் வேலை மிகவும் முன்னதாகவே தொடங்கி விடுகிறது. திருவுருவங்களைத் தயாரிப்போர், அதன் வியாபாரத்தில் இணைந்தவர்கள் இப்போதிலிருந்தே செயல்படத் தொடங்கி விடுவார்கள். ஆகையால் நான் உங்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.
உங்கள் வீடு, சமூகம் அல்லது அருகிலே இருக்கும் இடங்களில் பிள்ளையாரின் திருவுருவச் சிலைகள் நிறுவப்படும் போது, அவை நமது தேசத்தின் மண்ணால் உருவாக்கப்பட்டவையாக, நமது மண்பாண்டம் தயாரிப்போரால், உள்ளூர் கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற வகையில் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
யாரெல்லாம் பிள்ளையார் திருவுருவச் சிலைகளை உருவாக்குகிறார்களோ, அவர்களிடமும் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், அவர்கள் மண்ணாலான திருவுவச் சிலைகளுக்கு முதன்மை அளிக்க வேண்டும். அதே போல யாரெல்லாம் திருவுருவ சிலைகளை வாங்குகிறார்களோ, அவர்களும் பிள்ளையாரின் திருவுருவச் சிலை எதனால் செய்யப்பட்டது, எந்த நாட்டில் உருவானது என்பதையும் கவனித்து வாங்க வேண்டும்.
பிளாஸ்டர் ஆஃப் பேரிஸால் தயாரிக்கப்பட்ட திருவுருவச் சிலைகளைக் கண்டிப்பாக வாங்க வேண்டாம். நண்பர்களே, மண்ணாலான திருவுருவச் சிலைகளை வழிபட்ட பிறகு, நாம் இயல்பான வகையிலே நீரிலே கரைக்கிறோம். இதனால் நமது நதிகள், ஏரிகள், குளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. நமது நம்பிக்கையும் பராமரிக்கப்படுவதோடு, இயற்கையின்பால் நமது கடமையும் நிறைவேறுகிறது. நாம் உள்ளூர் கைவினைஞர்களிடமிருந்து திருவுருவச் சிலைகளை வாங்கும் போது, உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் கொள்கை வலுவடைகிறது.
இந்தமுறை பிள்ளையார் சதுர்த்தியன்றும், இப்படிப்பட்ட அனைத்துக் கொண்டாட்டங்களின் போதும், இந்த அனைத்து விஷயங்கள் குறித்தும் கண்டிப்பாக ஆழமாகச் சிந்திக்க வேண்டும், நாட்டுநலனில் அடுத்தடுத்த படிகளை முன்வைப்போம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
மழை நீரைச் சேமியுங்கள்!
நண்பர்களே, நமது தேசத்தின் மிகப்பெரிய சக்தி என்றால் அது நமது தேசத்தின் மக்கள் தாம். தேசத்தின் பல்வேறு பாகங்களில் நடைபெறும் முயற்சிகள் நமக்கு நிறைய கற்பித்தல்களை அளிக்கின்றன. நம் மனதிலே உறுதிப்பாடு இருந்தால், சமூகத்தோடு இணைந்து சென்றால், எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதை இந்த முயற்சிகள் நமக்குத் தெரிவிக்கின்றன. நீங்கள் உங்கள் அருகிலே நடக்கும் இப்படிப்பட்ட முயற்சிகள் குறித்து எனக்குக் கண்டிப்பாக எழுதி வாருங்கள். உங்களுடைய கருத்துக்கள், உங்களுடைய சிந்தனைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து எழுதி வாருங்கள், முடிந்தால், உங்கள் அருகிலே எந்தவொரு சின்ன முன்னெடுப்பு இருந்தாலும், அது ஒட்டுமொத்த தேசத்திற்குமே உத்வேகம் அளிக்கவல்லதாக ஆகலாம்.
அடுத்த மாதம் மீண்டும் சந்திப்போம். நாட்டுமக்களின் சில புதிய முயற்சிகள் குறித்த விவாதத்தில் ஈடுபடுவோம். அதுவரை நீங்கள் உங்களுடைய மற்றும் உங்களுடைய குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள், அப்புறம்….. நீர் சேமிப்பை எக்காலத்திலும் மறந்துவிட வேண்டாம். மழைநீரின் ஒவ்வொரு சொட்டையும் நாம் பாதுகாக்க வேண்டும். ‘Catch the Rain’ – மழைநீரைச் சேமியுங்கள் என்ற இந்த இயக்கம் எக்காரணம் கொண்டும் தொய்வடைய விடக்கூடாது. நாமனைவரும் இணைந்து மழையின் ஒவ்வொரு சொட்டு நீரையும் விரயமாகாமல் பாதுகாக்க வேண்டும் என்று உங்கள் அனைவரிடமும் என் சிறப்பு வேண்டுகோளாக முன்வைக்கிறேன். பலப்பல நன்றிகள். வணக்கம்.
ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம், பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன.
ஆனால் காலப்போக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. கட்டுப்பாடுகளையும் சம்பிரதாயங்களையும் விதிமுறைகளாகப் பார்க்காமல் அடக்குமுறையாகக் கருதும் நிலை உள்ளது. சுதந்திரம் என்ற பெயரில் விழுமியங்களைக் கைவிடுவதைப் பரவலாகக் காண முடிகிறது.
திருமண அமைப்பு சிதைந்து வரும் நிலையைக் காண்கிறோம். நிச்சயதார்த்த விழாக்களைத் தேவையற்ற ஆடம்பரத்தோடு நடத்துவது சர்வ சாதாரணமாகிவிட்டது. நிச்சயித்த திருமணத் தேதி வருவதற்கு முன்பே உறவை முறித்துக் கொள்வதும் சகஜமாகி விட்டது. எந்த சாஸ்திர நூலிலும் இல்லாத நிச்சயதார்த்த ஆடம்பரம் எதற்காக? திருமணமான சில நாட்களிலேயே சின்னச் சின்ன காரணங்களுக்காகப் பலர் பிரிந்து விடுறார்கள். பெரியவர்கள் அறிவுரை கூறவோ, சமரசம் செய்து வைக்கவோ முடியாத சூழ்நிலை உள்ளது.
சம்பிரதாயத்தின் மீதும் கலாச்சாரத்தின் மீதும் மரியாதை குறைந்து வருவது கவலையளிக்கிறது. திருமண அமைப்பின் மேல் நம்பிக்கை குறைந்து, திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் ஈடுபடும் ஆணும் பெண்ணும் சமுதாய மரியாதையைச் சிதைத்து வருகிறார்கள். டேட்டிங், கோ லிவிங், லிவ் இன் ரிலேஷன்ஷிப் என்று புதிய சொற்கள் உருவாகி வருகின்றன. உள்ளூர் மொழிகளில் இவற்றுக்கு ஏற்ற மொழிபெயர்ப்புகளை உருவாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகின்றன.
கட்டுப்பாடுகளை அடக்குமுறை என்று நிராகரித்தால், எல்லை மீறும் செயலை எப்படி அழைப்பது? கரையை மீறும் கடல் அழிவைத்தானே விட்டுச் செல்கிறது? பெருகிவரும் பொருளாதார வளமும் வருமானமும் சிற்றின்ப நாட்டத்தை அதிகரிக்கின்றன. யோகா, புலனடக்கம், தியானம், சுயபரிசோதனை போன்ற கருத்துகள் பழமைவாதிகளின் உளறலாக நிராகரிக்கப்படுகின்றன. இவற்றால் கிடைக்கும் அமைதி எட்டாக் கனியாகி வருகிறது.
புலன்களை சுகப்படுத்துவதே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு பாரம்பரிய சமூகக் கண்ணியத்தைத் தூக்கியெறிந்துவிட்டு மதுவுக்கும் போதைப் பொருளுக்கும் அடிமையாகும் ஆண்களும் பெண்களும் பெருகி வருகின்றனர்.
“உடலால் ஆணுக்கு நெருக்கமாகும் பெண் மரியாதைக்குரிய நிலையிலிருந்து விலகிச் செல்கிறாள்” என்ற நாவலாசிரியர் ஒருவரின் கூற்று இங்கே நினைவுக்கு வருகிறது, ஆடை, அலங்காரம் குறித்து ஏதேனும் குறிப்பிடப்பட்டால், எதிர்ப்புக் கும்பல்கள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்துகின்றன. அப்படியிருந்தும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை.
இந்தக் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறைக்குக் கனமான விலையைச் செலுத்த வேண்டியுள்ளது. உண்பதிலும் அருந்துவதிலும் அளவுக்குமீறி ஈடுபடும் பழக்கம் உடல்நலத்தைச் சிதைக்கிறது. துடிப்பான இளைய தலைமுறை நோய்க்குள்ளாகித் தளர்வடைகிறது.
குடும்பங்கள் சிதைந்து போகின்றன. திருமணமாகி, குழந்தைகள் உள்ள பெண்களும் பிற ஆண்களிடம் ஈர்க்கப்பட்டு குடும்பம் சிதைவதற்குக் காரணமாகின்றனர். கலாச்சாரம் சீரழிவதைக் கண்டு முதிய தலைமுறை வருந்துகிறது.
“இது ஒரு புதிய கலாச்சாரம். மாற்றங்களை வரவேற்கத் தெரியாத பழமைவாதிகள் இக்காலப் போக்கைப் புரிந்துகொள்வதில்லை” என்பது கட்டுப்பாடற்ற தாராளவாதக் கொள்கையை ஆதரிப்பவர்கள் முன்வைக்கும் வாதம். பெரும்பாலும் இது அர்த்தமற்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டது.
விலங்குகள் கூடக் கட்டுப்பாடுகளையும் இயற்கை நியமங்களையும் கடைப்பிடிக்கின்றன. தம்மை உயர்ந்தவராகக் கருதும் மனிதர்கள் இயற்கை நியமங்களைக் கைவிட்டு விலங்குகளும் அருவருக்கக் கூடிய கீழ்த்தரமான நிலைக்குத் தாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அனைவரும் தர்மம் என்ற சொல்லையே மறந்து வருகின்றனர்.
எல்லை மீறத் துடிப்பவர்களுள் கணிசமானோர் இளம் இந்துப் பெண்கள் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இச்சூழ்நிலை மதமாற்றத்தில் ஈடுபடும் கும்பல்களுக்குச் சாதகமாக அமைகிறது. இதன் விளைவாகத் தம் சொந்த மத சம்பிரதாயகளைக் கைவிடத் துடிக்கும் இந்துப் பெண்கள், பிற மதக் கவர்ச்சிக்கு எளிதாக இரையாகின்றனர். ‘பரந்த மனப்பான்மை, அதிநவீனப் போக்கு, எல்லா மதங்களும் ஒன்றுதான்’ போன்ற அறியாமையிலிருந்து பிறந்த கவர்ச்சிகரமான சொற்களால் ஈர்க்கப்பட்டு அப்பெண்கள் அந்தப் பாதையில் சென்று மோசமான விளைவுகளைச் சந்திக்கின்றனர்.
சமுதாயம் எனபது, ‘பெண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். நாம் கட்டுப்பாட்டுடன் இருப்போம்’ என்று கருதும் புலன்களை அடக்கிய ஆண்களால் மட்டுமே ஆனது அல்ல. பெரும்பான்மையானோர் சுயக்கட்டுப்பாடு இல்லாத சாதாரண மனிதர்களே. நம்பினாலும் நம்பாவிட்டாலும், ஒப்புக்கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் நம்மைச் சுற்றியுள்ள சூட்சும உலகில், கண்ணுக்குத் தெரியாத தீய சக்திகள் பெண்களின் மேல் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது உண்மை. அதனால்தான் அத்தகைய எதிர்மறைத் தாக்கங்களிலிருந்துப் பெண்களைப் பாதுகாப்பதற்காக நம் முன்னோர் நடை, உடை, சிகை அலங்காரம் ஆகியவற்றில் பாரம்பரிய நெறிமுறைகளை வகுத்தனர். ஆனால் பாரம்பரியத்தைப் புறக்கணிப்பதன் மூலம், இந்து இளம் பெண்கள் தீய சக்திகளைத் தம் உடலிலும் மனத்திலும் நுழைவதற்கு அனுமதியளித்துக் கதவைத் திறந்து விடுகிறார்கள். அதன் விளைவாக அவர்கள் மனம் சிதைந்து வக்கிரமான எண்ணங்கள் பெருகி அதர்மச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
தர்மம் அளிக்கும் பாதுகாப்பு, கணவன், மனைவி, பெற்றோர், குழந்தைகள் இடையிலான உறவில் தர்மத்தோடு கூடிய அர்ப்பணிப்பு, சிற்றின்ப நாட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடு, பண்பாடு ஆகிய அனைத்தும் இன்று சிதைந்து வருகின்றன. இதன் விளைவுகள் எதிர்காலத்தில் மிக மோசமாக இருக்கும். அதர்மம் பெருகும்போது அது தவிர்க்க முடியாமல் இயற்கைச் சீற்றங்களுக்கு வழிவகுக்கும். இது தர்ம சாஸ்திரங்கள் விடுக்கும் எச்சரிக்கை.
ஜாதகம் பார்ப்பது, வாஸ்து பார்ப்பது, கோவிலுக்கும் க்ஷேத்திரங்களுக்கும் சென்று பிரார்த்தனை செய்வது போன்றவை மட்டுமே தார்மீக வாழ்க்கை அல்ல. தரமத்தோடு வாழ்ந்து பணிவோடும் கண்ணியத்தோடும் உன்னத மனிதராக உயர்வதே தார்மிக வாழ்க்கை. இப்பண்புகளை இளம் பெண்களிடம், முக்கியமாக இந்துப் பெண்களிடம் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.
சுயக் கட்டுப்பாடு, பொறுமை, தம்மைத் திருத்திக் கொள்ளும் திறன் ஆகியவற்றால் நம்முள் விழித்தெழும் தெய்வீக ஆற்றலை உணர வேண்டும். பண்பாடே உண்மையான கலாச்சாரம். பண்பாட்டுச் சிதைவைப் புதிய கலாச்சாரம் என்று ஏற்க இயலாது. அதை விகாரமான கலாச்சாரம் அல்லது பண்பாடின்மை என்றே விவரிக்க வேண்டும்.
தீங்கானதும் நச்சுத்தன்மை வாய்ந்ததுமான வாழ்க்கை முறையைக் கைவிட்டு, நற்பண்புகள் நிறைந்த தார்மிக வாழ்க்கை முறை மலரும் என்ற நம்பிக்கையுடன் இத்தகைய உயரிய விழுமியங்களை மதிப்பவர்கள் தகுந்த முறையில் ஒன்றிணைந்துப் போராட வேண்டும்.
(Source: தலையங்கம், ருஷிபீடம் தெலுங்கு மாத இதழ், ஜூலை, 2026)