
இன்றைய பஞ்சாங்கம் – செப்.12
ஸ்ரீராமஜயம் – ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்
||श्री:|| !!ஸ்ரீ:!!
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
ஆவணி ~ 26 ( 12.9.2026 ) சனிக்கிழமை
வருடம் ~ பராபவ{ பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ தக்ஷிணாயணம்.
ருது ~ வர்ஷ ருது.
மாதம் ~ ஆவணி மாதம் { ஸிம்ஹ மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ காலை 8.51 AM வரை ப்ரதமை பின்னர் த்விதீயை.
நாள் ~ { ஸ்திர வாஸரம் } சனிக்கிழமை.
நக்ஷத்திரம் ~ பகல் 2.49 PM வரை உத்தரம் பின்னர் ஹஸ்தம்.
யோகம் ~ சுபம்.
கரணம்~ பவம் / பாலவம்.
அமிர்தாதியோகம் ~ அசுபயோகம்.
ராகு காலம் ~ காலை 9.00 ~ 10.30 AM.
எமகண்டம் ~ மதியம் 1.30 ~ 3.00 PM.
குளிகை ~ காலை 6.00 ~ 7.30 AM.
நல்ல நேரம் ~ 7.30 to 8.30 AM & 4.30 to 5.30 PM.
சூரிய உதயம் ~ காலை 6.06 AM.
சந்திராஷ்டமம் ~ கும்பம்.
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்த திதி ~ த்விதீயை.
இன்று ~ சந்த்ரதர்சனம்.
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु !!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஓரை என்றால் என்ன?
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.
சனிக்கிழமை ஹோரை
காலை
6-7 : சனி – அசுபம் ❌
7-8 : குரு – சுபம் ✔
8-9: செவ்வாய் – அசுபம் ❌
9-10: சூரியன் – அசுபம் ❌
10-11 : சுக்கிரன் – சுபம் ✔
11-12 : புதன் – சுபம் ✔
பிற்பகல்
12-1 : சந்திரன் – சுபம் ✔
1-2 : சனி – அசுபம் ❌
2-3 : குரு – சுபம் ✔
மாலை
3-4: செவ்வாய் – அசுபம் ❌
4-5 : சூரியன் – அசுபம் ❌
5-6 : சுக்கிரன் – சுபம் ✔
6-7 : புதன் – சுபம் ✔
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்..

இன்றைய (12-9-2026) ராசி பலன்கள்
மேஷம்
தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்கிறீர்கள். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். உத்தியோக மாற்ற சிந்தனைகள் ஏற்படும். வியாபார பணிகளில் புதுமையான வாய்ப்புகள் உண்டாகும். திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். வழக்கு சார்ந்த பணிகளில் இழுபறிகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : ஆதாயம் உண்டாகும்.
பரணி : வாய்ப்புகள் உண்டாகும்.
கிருத்திகை : இழுபறிகள் குறையும்.
ரிஷபம்
கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்களின் வருகை மூலம் புத்துணர்ச்சியான சூழ்நிலை காணப்படும். வர்தகம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை ஏற்படும். மனதில் இருந்து கவலைகள் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு புது விதமான சிந்தனைகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
கிருத்திகை : நெருக்கம் அதிகரிக்கும்.
ரோகிணி : மேன்மை ஏற்படும்.
மிருகசீரிஷம் : புதுமையான நாள்.
மிதுனம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய பங்குதாரர்களின் அறிமுகங்கள் ஏற்படும். தாயாருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். திறமைக்குண்டான மதிப்புகள் உருவாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் நட்புகள் கிடைக்கும். விவசாய பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்
மிருகசீரிஷம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
திருவாதிரை : வேறுபாடுகள் மறையும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.
கடகம்
எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பாராத திடீர் மாற்றங்கள் மூலம் மேன்மை ஏற்படும். கடினமான காரியத்தையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புகள் சாதகமாகும். உத்தியோக பிரச்சனைகள் குறையும். அரசு பணிகளில் அனுசரித்து சென்றால் ஆதாயம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
புனர்பூசம் : அனுபவம் வெளிப்படும்.
பூசம் : மேன்மை ஏற்படும்.
ஆயில்யம் : ஆதாயகரமான நாள்.
சிம்மம்
சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் காணப்படும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். தன வருவாய் மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கற்பனை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்
மகம் : ஆதரவுகள் கிடைக்கும்.
பூரம் : சிந்தனைகள் மேம்படும்.
உத்திரம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.
கன்னி
நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த சில உதவிகள் ஏற்படும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிராமல் இருக்கவும். உயர் அதிகாரிகளால் அலைச்சலும் ஆதாயமும் ஏற்படும். போட்டிகளில் சில மாற்றமான ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடு செய்வதை தவிர்க்கவும். உறவினர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
உத்திரம் : உதவிகள் ஏற்படும்.
அஸ்தம் : ஆதாயமும் ஏற்படும்.
சித்திரை : சிந்தனைகள் பிறக்கும்.
துலாம்
ஒப்பனை தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். மறைமுக வருமானம் மேம்படும். உடன் இருப்பவர்களின் தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். எந்த ஒரு சூழ்நிலையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான வாய்ப்புகள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிகப்பு நிறம்
சித்திரை : லாபகரமான நாள்.
சுவாதி : ஆர்வம் ஏற்படும்.
விசாகம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
விருச்சிகம்
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். இலக்கியம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
விசாகம் : புரிதல் ஏற்படும்.
அனுஷம் : ஒத்துழைப்பான நாள்.
கேட்டை : முன்னேற்றமான நாள்.
தனுசு
சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். திடீர் செலவுகளால் சில நெருக்கடிகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். அரசாங்க காரியம் இழுபறிக்குப் பின்னர் முடியும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
மூலம் : நெருக்கடிகள் ஏற்படும்.
பூராடம் : ஆதாயம் உண்டாகும்.
உத்திராடம் : ஆதரவுகள் கிடைக்கும்.
மகரம்
மனதளவில் இருந்த சோர்வுகள் நீங்கும். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வர்த்தக பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். தடைப்பட்ட வேலைகளை முடிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். சுபகாரிய செலவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு நிறம்
உத்திராடம் : குழப்பங்கள் ஏற்படும்.
திருவோணம் : அனுபவம் ஏற்படும்.
அவிட்டம் : செலவுகள் உண்டாகும்.
கும்பம்
மறைமுக எதிர்ப்பும் உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளால் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். எந்த பொறுப்பையும் ஒப்படைக்க. விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வெளி இடங்களில் அமைதி காக்கவும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
அவிட்டம் : அலைச்சல் அதிகரிக்கும்.
சதயம் : கவனம் வேண்டும்.
பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
மீனம்
மனதில் புதுவிதமான ஆசைகள் உருவாகும். தவறிப்போன சில பொருள்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
பூரட்டாதி : ஆசைகள் பிறக்கும்.
உத்திரட்டாதி : பயணங்கள் மேம்படும்.
ரேவதி : பிரச்சனைகள் குறையும்.
தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் – குறள் எண்: 101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
மு.வ உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 10
நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.
விளக்கவுரை :நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?
தினம் ஒரு பாசுரம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே!
வாலியைக் கொன்று அரசு இளையவானருத்துக்கு அளித்தவனே!
காலின்மணி கரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே!
ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ
(குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
– சக்கரவர்த்தித் திருமகனைக் கௌசலையார் தாலாட்டும் பாசுரம் – 725)
இன்றைய சிந்தனை!
முதல் படி
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
- Goethe.
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
- Martin Luther King Jr.
உழைப்பு = வெற்றி
மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்
- பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
- பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
- பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
- வில்லியம் ஷேக்ஸ்பியர்
தினசரி.காம்
இன்றைய சிந்தனைக்கு…
பொறுப்பு என்பது, பாரம் அல்ல, வாய்ப்பு, ஒருவரின், திறமையை நிரூபிப்பதற்கான, சந்தர்ப்பம்!
முடியாது என்பதை பிறகு சிந்தி, எப்படி முடிப்பது என்பதை, எப்பொழுதும் சிந்தி, வெற்றி நிச்சயம்!!
ஒருவருக்கு கிடைத்ததைப் பற்றி, பேசும் இந்த சமூகம், அதனை அடைய, அவர் இழந்ததைப் பற்றி, பேசுவதில்லை!!!
உன் வார்த்தைகளின் நாகரீகமே, பிறரிடம், உனக்கான நன்மதிப்பை, பெற்று கொடுக்கும்!
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், உன்னுடைய கால்களை பயன்படுத்து, பிறரின் முதுகை அல்ல!!
உன்னை எப்படி நினைக்கிறாயோ, மத்தவங்களையும் அப்படியே நினைக்க கத்துக்கோ; உன் எண்ணம் உறுதியா இருந்தா, நீ எண்ணியபடி உயர்ந்திடுவாய்!!!
எந்த மனிதரிடமும், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், உறவு கொள்வதும், பிரதி பலன் எதிர் பாராமல் அன்பு செய்வதும், அறம்! அனைவரும் அவரவர் பார்வையில், தங்களை சரியானவர்கள் என்று நினைப்பதை புரிந்து கொண்டு, எதையும் கடந்து போக கற்றுக்கொள்!! பட்டம், பதவி, பகட்டு வாழ்க்கையுடன், மனதின் மகிழ்ச்சியை, ஒன்றாக இணைத்து பார்ப்பதை நிறுத்தும் போது, உண்மையில் மனம், பக்குவம் அடைகிறது!!!







