சென்னை, டிச. 4:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவலை அடுத்து பேருந்துகள் ஓடவில்லை.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, தமிழகத்தில் பதற்றம் நிலவி வருகிறது. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு நுரையீரல் தொற்று சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் பூரண குணம் அடைந்துவிட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
முதல்வர் சீக்கிரம் வீடு திரும்பி விடுவார் என்று அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் இருந்த நேரத்தில் இன்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தொடர்ந்து சிகிக்சை அளிக்கப்பட்ட வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை அறிவித்துள்ளது.
பேருந்துகள் நிறுத்தம்
இந்த செய்தி மெல்ல தமிழகம் முழுவதும் பரவி ஒருவித பதற்றம் உருவாகியுள்ளது.
இன்று ஞாயிற்றுக் கிழமை இன்று என்பதால் குறைவான பேருந்துகளே சென்னையில் இயக்கப்பட்டு வரும் நிலையில் பேருந்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. வெளியூர் செல்லும் பேருந்துகளும் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் பேருந்து போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் பங்குகள் மூடல்
ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த தகவல் பரவியுள்ளதால் தலைநகரான சென்னையில் கூடுதல் பதற்றம் உருவாகியுள்ளது. இங்கு செயல்பட்டுவந்த அனைத்து பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டன.
இதே போன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன.
கடைகளுக்கு பூட்டு
இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் குறைவான கடைகளே சென்னையில் திறக்கப்பட்டிருந்தது. அந்த கடைகளும் முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்த தகவலால் விரைவாக மூடப்பட்டன. சின்ன சின்ன கடைகள், ஒருசில டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், தியாகராயர் நகரில் 11 மணி வரை திறந்திருக்கும் அனைத்து துணிக்கடைகள் என அனைத்தும் மூடப்பட்டன
பயணிகள் தயக்கம்
ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக பொதுமக்கள் தாங்களாகவே வெளியூர் செல்வதை தவிர்த்துள்ளனர். சனி, ஞாயிறு விடுமுறைக்காக வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்கள் இன்று இரவு புறப்பட்டு நாளை காலை சென்னைக்கு திரும்ப ஆயத்தமான நிலையில், முதல்வரின் உடல் நிலை குறித்த தகவலால் பயணத்தை நிறுத்தியுள்ளனர்.
செய்தி அப்டேட்ஸ்:
சென்னை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது
கோபாலபுரத்தில் போலீஸ் குவிப்பு என தகவல்
தொண்டர்கள் மற்றும் காவல்துறை இடையே மோதல்.பேரி கார்டை உடைத்து மருத்துவமனை உள்ளே போக முயற்சி
சென்னை நகர் முழுவதும் கடைகள் அடைக்கபட்டது!
சி.ஆர்.பி.எப் 30 கம்பெனி சென்னை வந்துள்ளனர்
மதுரை பட்டாலியன் கேம்பிலும், ஏஆர் கேம்பிலும் தயாராக இருக்குமாறு உத்தரவு
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சென்னை அப்பலோவுக்கு விரைகிறார்கள்
அனைத்து அமைச்சர்களும் அப்பலோவுக்கு அழைப்பு. ..
காவல்துறை உஷார் நிலை!
சென்னை மாநகர் முழுவதும் பாதுக்காப்பை பலப்படுத்தியது மாநகர காவல் துறை
மும்பையில் இருந்து சென்னைக்கு விரைந்து வந்த ஆளுநர், முதலில் ராஜ்பவன் சென்றார். பின்னர் அப்பலோ வந்த அவர், 10 நிமிடத்தில் அப்பலோவில் இருந்து ஆளுநர் மாளிகை திரும்பினார். ஆளுநர் மாளிகையில் இருந்து செய்திக் குறிப்பு வெளியிடலாம் என எதிர்பார்ப்பு நிலவியது. அடுத்த உத்தரவு வரும் வரை, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவு இட்டுள்ளார்.
லண்டன் மருத்துவர் ஆலோசனைப்படி ஜெயலலிதாவுக்கு சிகிச்சை
முதல்வர் ஜெ.,வுக்கு அப்போலோவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஜெயலலிதா குணமடைய அரசியல்கட்சி தலைவர்கள், பொதுமக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என அப்போலோ மருத்துவமனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. மேலும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆலோசனைப்படி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.